• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Monday, May 12, 2025
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home இலங்கை செய்திகள்

அநுரவின் புதிய அரசமைப்பு உருவாக்கத்துக்கு எதிராகப் போராடத் தயாராகும் விமல்!

Mathavi by Mathavi
January 20, 2025
in இலங்கை செய்திகள்
0 0
0
அநுரவின் புதிய அரசமைப்பு உருவாக்கத்துக்கு எதிராகப் போராடத் தயாராகும் விமல்!
Share on FacebookShare on Twitter

“ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசு தேசியத்துக்கு முன்னுரிமை வழங்கிச் செயற்படாது. மதக் கொள்கையற்ற வகையில் புதிய அரசமைப்பை உருவாக்கும் நிலைப்பாட்டில் இந்த அரசு உள்ளது. எனவே, தேசியத்தைப் பாதுகாப்பதற்காகச் செயற்பாட்டு ரீதியிலான அரசியலில் நாம் ஈடுபடவுள்ளோம்.” – இவ்வாறு தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச தெரிவித்தார்.

தேசிய சுதந்திர முன்னணியின் புதிய தலைமைக் காரியாலயம் நேற்று ஞாயிற்றுக்கிழமை பத்தரமுல்லை பகுதியில் பௌத்த மத வழிபாடுகளுடன் திறந்து வைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

ADVERTISEMENT

“நாடு பொருளாதாரம் மற்றும் சமூகக் கட்டமைப்பில் பாரிய நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளது. அத்துடன் அரசின் ஒருசில செயற்பாடுகளால் நாட்டின் சுயாதீனம் கேள்விக்குள்ளாக்கப்பட்டுள்ளது. நாட்டின் தேசியம் தொடர்பில் அரசு கவனத்தில் கொள்ளவில்லை.

தேசியத்துக்கு முன்னுரிமை வழங்கி இந்த அரசு செயற்படாது. புதிய அரசமைப்பு உருவாக்கம் குறித்து தற்போது பேசப்படுகின்றது.

இலங்கையை மதச் சார்பற்ற நாடாக மாற்றியமைக்கும் வகையில் புதிய அரசமைப்பை உருவாக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் இருந்தவர்கள் இந்த அரசில் முன்னிலை பதவிகளில் உள்ளார்கள். அரசும் அந்த நிலைப்பாட்டில்தான் உள்ளது.

புதிய மாற்றத்துக்காக மக்கள் புதியவர்களைத் தெரிவு செய்தார்கள். புதியவர்கள் மக்களின் அடிப்படைப் பிரச்சினைகள் பற்றி எவ்விடத்திலும் பேசுவதில்லை. ஆகவே, புதியவர்களைத் தெரிவு செய்ததன் பிரதி பலனை மக்கள் தற்போது பெற்றுக்கொண்டுள்ளார்கள்.

அதிகாரத்தில் இருக்கும் போதும், இல்லாத போதும் மக்களின் பிரச்சினைகளுக்காகவும், உரிமைகளுக்காகவும் நாங்கள் குரல் கொடுப்போம். தேசியத்தைப் பாதுகாத்தால் மாத்திரமே இலங்கை என்ற அடிப்படையில் முன்னேற்றமடைய முடியும்.

தேசியத்தைப் பாதுகாப்பதற்காகச் செயற்பாட்டு ரீதியிலான அரசியலில் நாம் ஈடுபடவுள்ளோம். கடந்த காலங்களைக் காட்டிலும் இனி உத்வேகத்துடன் செயற்படுவோம்.

தேசிய மக்கள் சக்தி தேர்தல் காலத்தில் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளுக்கு முரணாகத் தற்போது செயற்படுகின்றது. ஆகவே, இந்த அரசுக்குக் கடந்த காலத்தை நினைவுபடுத்த வேண்டிய தேவை காணப்படுகின்றது.” – என்றார்.

Mathavi

Mathavi

Related Posts

வவுனியாவில் இளங்கோவடிகளின் நினைவு நாள்.!

வவுனியாவில் இளங்கோவடிகளின் நினைவு நாள்.!

by Mathavi
May 12, 2025
0

தமிழில் தோன்றிய முதல் காப்பியமான சிலப்பதிகாரத்தை இயற்றிய இளங்கோவடிகளார் சித்திரை முழுநிலா நாளில் நினைவு கூரப்படுகின்றார். அந்தவகையில் வவுனியா சின்னப்புதுக்குளம், சிவன் கோவிலுக்கு அருகிலுள்ள இளங்கோவடிகளின் திருவுருவச்...

வவுனியா சிறைச்சாலையில் இருந்து கைதிகள் விடுதலை.!

வவுனியா சிறைச்சாலையில் இருந்து கைதிகள் விடுதலை.!

by Mathavi
May 12, 2025
0

வெசாக் தினத்தை முன்னிட்டு பொது மன்னிப்பின் அடிப்படையில் கைதிகள் விடுதலை இடம்பெற்ற நிலையில் வவுனியா சிறைச்சாலையில் இருந்தும் 7 கைதிகள் விடுதலை செய்யப்பட்டனர். நாடளாவிய ரீதியில் 388...

வல்வெட்டித்துறையில் யாழ். பல்கலைக்கழக மாணவர்களால் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு.!

வல்வெட்டித்துறையில் யாழ். பல்கலைக்கழக மாணவர்களால் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு.!

by Mathavi
May 12, 2025
0

முள்ளிவாய்க்கால் மண்ணில் இறுதி யுத்த நேரத்தில் அங்கிருந்த மக்கள் தமது உயிரை காப்பதற்காக தயாரித்து அருந்திய முள்ளிவாய்க்கால் கஞ்சியை நினைவுகூரும் முகமாக முள்ளிவாய்க்கால் கஞ்சி காய்ச்சி வழங்கும்...

அருட்கலாநிதி சந்துரு பெர்னாண்டோவுக்கு கௌரவ முனைவர் பட்டம் வழங்கிக் கெளரவிப்பு.!

அருட்கலாநிதி சந்துரு பெர்னாண்டோவுக்கு கௌரவ முனைவர் பட்டம் வழங்கிக் கெளரவிப்பு.!

by Mathavi
May 12, 2025
0

இலங்கை திருநாட்டின் முன்னாள் பிரதமரின் மத விவகாரங்களுக்கான இணைப்பு செயலாளரும் அகில இலங்கை கிறிஸ்தவ அபிவிருத்தி ஒன்றியத்தின் தலைவரும் சர்வதேச இசைக்கல்லூரிக்கான பயிற்சி நிலையத்தின் இலங்கை தூதுவருமான...

தமிழ் இன அழிப்பு வாரம் உணர்வுபூர்வமாக ஆரம்பித்து வைப்பு.!

தமிழ் இன அழிப்பு வாரம் உணர்வுபூர்வமாக ஆரம்பித்து வைப்பு.!

by Mathavi
May 12, 2025
0

தற்போதைய அரசாங்கமும் தமிழ்த் தேசிய இனத்தினை உதாசீனப்படுத்துகின்ற, அலட்சியப்படுத்துகின்ற, அவர்களின் நியாயமான கோரிக்கையினை செவிமடுக்காத போக்கும் தமிழ் மக்கள் இந்த நாட்டிலே நியாயமான உரிமைகளும் உறுதிப்படுத்தப்படாத நிலையிலேயே...

இரணைமடுக்குள தீர்த்தக்கரையில் இடம்பெற்ற சித்திராப் பெளர்ணமி தினம்.!

இரணைமடுக்குள தீர்த்தக்கரையில் இடம்பெற்ற சித்திராப் பெளர்ணமி தினம்.!

by Mathavi
May 12, 2025
0

சித்திராப் பெளர்ணமி தினமான இன்று கிளிநொச்சி இரணைமடுக்குள தீர்த்தக்கரையில் மக்கள் இறந்த தமது தாய்மார்களுக்கு பிதிர் தர்ப்பணம் செய்து தானம் வழங்கினர்.

யாழ் பல்கலைக்கழக மாணவர்களால் முள்ளிவாய்க்காலில் சிரமதானம்..!

யாழ் பல்கலைக்கழக மாணவர்களால் முள்ளிவாய்க்காலில் சிரமதானம்..!

by Mathavi
May 12, 2025
0

முள்ளிவாய்க்கால் நினைவு வாரம் ஆரம்பமாகியுள்ள நிலையில் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை முள்ளிவாய்க்கால் மக்களோடு இணைந்து யாழ். பல்கலைக்கழக மாணவர்களால் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் சிரமதானப்பணி முன்னெடுக்கப்பட்டது.

உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அமைப்பது பற்றி உத்தியோகபூர்வமாக எந்தத் தரப்பும் பேசவில்லை.!

உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அமைப்பது பற்றி உத்தியோகபூர்வமாக எந்தத் தரப்பும் பேசவில்லை.!

by Mathavi
May 12, 2025
0

உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அமைப்பது தொடர்பில் உத்தியோகபூர்வமாக எந்தவொரு தரப்பும் பேச்சுக்களை முன்னெடுக்கவில்லை என்று ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் முன்னாள் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா...

சமாதானத்திற்கான இளைஞர் பேரவையால் ஜனாதிபதிக்கு அவசரமாக அனுப்பி வைக்கப்பட்ட கடிதம்.!

சமாதானத்திற்கான இளைஞர் பேரவையால் ஜனாதிபதிக்கு அவசரமாக அனுப்பி வைக்கப்பட்ட கடிதம்.!

by Mathavi
May 12, 2025
0

யாழ்ப்பாணத்தை தலைமையாக கொண்ட தன்னார்வ இளைஞர் அமைப்பான சமாதானத்திற்கான இளைஞர் பேரவையால் ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இக் கடிதத்தில் குறிப்பிடப்படுவது யாதெனில், கொழும்பு இராமநாதன்...

Load More
Next Post
அன்று சீனாவை விமர்சித்தவர் இன்று ஒப்பந்தமிட்டது எப்படி?

அன்று சீனாவை விமர்சித்தவர் இன்று ஒப்பந்தமிட்டது எப்படி?

இன்று காலை இடம்பெற்ற கோர விபத்து.!

இன்று காலை இடம்பெற்ற கோர விபத்து.!

நீர்த்தேக்கத்தில் வீழ்ந்து நபரொருவர் உயிரிழப்பு.!

நீர்த்தேக்கத்தில் வீழ்ந்து நபரொருவர் உயிரிழப்பு.!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Popular News

  • மாவையரின் உயிரைக்குடித்த 19 அயோக்கியர்கள்; பரபரப்பு தகவல்.!

    மாவையரின் உயிரைக்குடித்த 19 அயோக்கியர்கள்; பரபரப்பு தகவல்.!

    0 shares
    Share 0 Tweet 0
  • ஆசிரியரால் சீரழிக்கப்பட்ட மாணவி உயிர்மாய்ப்பு; பொலிஸாருக்கும் இதில் உடந்தையாம்.!

    0 shares
    Share 0 Tweet 0
  • அம்பலமானது தமிழர்களை கொன்றுகுவித்த வதை முகாம்!

    0 shares
    Share 0 Tweet 0
  • தமிழ் மாணவன் சிங்கள மாணவர்களால் தீ வைத்து எரிப்பு.! (சிறப்பு இணைப்பு)

    0 shares
    Share 0 Tweet 0
  • கடலில் நீராடச் சென்ற யுவதி உயிரிழப்பு.! (சிறப்பு இணைப்பு)

    0 shares
    Share 0 Tweet 0

Follow Us

    Thinakaran

    உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

    www.thinakaran.com

    © 2024 Thinakaran.com

    Welcome Back!

    Login to your account below

    Forgotten Password?

    Retrieve your password

    Please enter your username or email address to reset your password.

    Log In
    No Result
    View All Result
    • முகப்பு
    • இலங்கை
      • முல்லைதீவு செய்திகள்
      • வவுனியா செய்திகள்
      • கிளிநொச்சி செய்திகள்
      • திருகோணமலை செய்திகள்
      • மட்டக்களப்பு செய்திகள்
      • மன்னார் செய்திகள்
      • மலையக செய்திகள்
    • இந்தியா
    • உலகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • நிகழ்வுகள்
    • எம்மை பற்றி