• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Sunday, July 13, 2025
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home இலங்கை செய்திகள்

அநுரவின் புதிய அரசமைப்பு உருவாக்கத்துக்கு எதிராகப் போராடத் தயாராகும் விமல்!

Mathavi by Mathavi
January 20, 2025
in இலங்கை செய்திகள்
0
அநுரவின் புதிய அரசமைப்பு உருவாக்கத்துக்கு எதிராகப் போராடத் தயாராகும் விமல்!
24
VIEWS
Share on FacebookShare on Twitter

“ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசு தேசியத்துக்கு முன்னுரிமை வழங்கிச் செயற்படாது. மதக் கொள்கையற்ற வகையில் புதிய அரசமைப்பை உருவாக்கும் நிலைப்பாட்டில் இந்த அரசு உள்ளது. எனவே, தேசியத்தைப் பாதுகாப்பதற்காகச் செயற்பாட்டு ரீதியிலான அரசியலில் நாம் ஈடுபடவுள்ளோம்.” – இவ்வாறு தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச தெரிவித்தார்.

தேசிய சுதந்திர முன்னணியின் புதிய தலைமைக் காரியாலயம் நேற்று ஞாயிற்றுக்கிழமை பத்தரமுல்லை பகுதியில் பௌத்த மத வழிபாடுகளுடன் திறந்து வைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“நாடு பொருளாதாரம் மற்றும் சமூகக் கட்டமைப்பில் பாரிய நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளது. அத்துடன் அரசின் ஒருசில செயற்பாடுகளால் நாட்டின் சுயாதீனம் கேள்விக்குள்ளாக்கப்பட்டுள்ளது. நாட்டின் தேசியம் தொடர்பில் அரசு கவனத்தில் கொள்ளவில்லை.

தேசியத்துக்கு முன்னுரிமை வழங்கி இந்த அரசு செயற்படாது. புதிய அரசமைப்பு உருவாக்கம் குறித்து தற்போது பேசப்படுகின்றது.

இலங்கையை மதச் சார்பற்ற நாடாக மாற்றியமைக்கும் வகையில் புதிய அரசமைப்பை உருவாக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் இருந்தவர்கள் இந்த அரசில் முன்னிலை பதவிகளில் உள்ளார்கள். அரசும் அந்த நிலைப்பாட்டில்தான் உள்ளது.

புதிய மாற்றத்துக்காக மக்கள் புதியவர்களைத் தெரிவு செய்தார்கள். புதியவர்கள் மக்களின் அடிப்படைப் பிரச்சினைகள் பற்றி எவ்விடத்திலும் பேசுவதில்லை. ஆகவே, புதியவர்களைத் தெரிவு செய்ததன் பிரதி பலனை மக்கள் தற்போது பெற்றுக்கொண்டுள்ளார்கள்.

அதிகாரத்தில் இருக்கும் போதும், இல்லாத போதும் மக்களின் பிரச்சினைகளுக்காகவும், உரிமைகளுக்காகவும் நாங்கள் குரல் கொடுப்போம். தேசியத்தைப் பாதுகாத்தால் மாத்திரமே இலங்கை என்ற அடிப்படையில் முன்னேற்றமடைய முடியும்.

தேசியத்தைப் பாதுகாப்பதற்காகச் செயற்பாட்டு ரீதியிலான அரசியலில் நாம் ஈடுபடவுள்ளோம். கடந்த காலங்களைக் காட்டிலும் இனி உத்வேகத்துடன் செயற்படுவோம்.

தேசிய மக்கள் சக்தி தேர்தல் காலத்தில் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளுக்கு முரணாகத் தற்போது செயற்படுகின்றது. ஆகவே, இந்த அரசுக்குக் கடந்த காலத்தை நினைவுபடுத்த வேண்டிய தேவை காணப்படுகின்றது.” – என்றார்.

Related Posts

டொனால்ட் ட்ரம்பின் வரி விதிப்புகளால் நாட்டின் ஆடைத் தொழிலில் நெருக்கடி..!

டொனால்ட் ட்ரம்பின் வரி விதிப்புகளால் நாட்டின் ஆடைத் தொழிலில் நெருக்கடி..!

by Thamil
July 12, 2025
0

"அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் வரி விதிப்புகளால் நாட்டின் ஆடைத் தொழிற்றுறை தற்போது பெரும் நெருக்கடியின் அறிகுறிகளைக் காட்டுகிறது. இந்தியாவுடன் கையெழுத்திடுவதற்கு உத்தேசிக்கப்பட்டிருந்த ஒப்பந்தங்கள் கையெழுத்தாகாததால் எமக்கு...

வவுனியாவில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவம் தொடர்பில் வெளியான தகவல்..! 

வவுனியாவில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவம் தொடர்பில் வெளியான தகவல்..! 

by Thamil
July 12, 2025
0

வவுனியா, கூமாங்குளம் மதுபானசாலை அருகில் ஒருவர் உயிரிழந்ததைத் தொடர்ந்து இடம்பெற்ற வன்முறைச் சம்வத்தில் 5 பொலிஸார் காயமடைந்துள்ளதுடன், பொலிஸாரின் 3 வாகனங்களும் சேதமடைந்துள்ளன. வவுனியா, கூமாங்குளம் பகுதியில்...

உதயசூரியன் கிண்ணத்தை தமதாக்கிய சென்மேரிஸ் விளையாட்டுக் கழகம்..!

உதயசூரியன் கிண்ணத்தை தமதாக்கிய சென்மேரிஸ் விளையாட்டுக் கழகம்..!

by Thamil
July 12, 2025
0

யாழ். வடமராட்சிக் கிழக்கு வத்திராயன் உதயசூரியன் விளையாட்டுக் கழகத்தின் வருடாந்த விளையாட்டு விழாவின் இறுதி விழா இன்று மதியம் 2:30 மணியளவில் விருந்தினர்களின் வரவேற்புடன் மைதான முன்றலில்...

கல்முனை அஸ் – ஸுஹரா பாடசாலைக்கு நீர்த்தாங்கி வழங்கி வைப்பு..!

கல்முனை அஸ் – ஸுஹரா பாடசாலைக்கு நீர்த்தாங்கி வழங்கி வைப்பு..!

by Thamil
July 12, 2025
0

கல்முனை அஸ் - ஸுஹரா பாடசாலையின் நீண்ட காலத் தேவையான நீர்த்தாங்கி வழங்கும் நிகழ்வு இன்று (12) சிறப்பாக இடம்பெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக முன்னாள் கல்முனை...

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Thinakaran

உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

www.thinakaran.com

© 2024 Thinakaran.com

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி