கல்கிசை வடரப்பல வீதியில் ஐஸ் போதைப்பொருளுடன் சந்தேக நபர் ஒருவர் நேற்று வெள்ளிக்கிழமை (03) கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபர் கல்கிசை பிரதேசத்தைச் சேர்ந்த 33 வயதுடையவர் ஆவார்.
ADVERTISEMENT
கல்கிசை பொலிஸ் நிலைய அதிகாரிகளுக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து மேற்கொண்ட சுற்றிவளைப்பின்போதே இவர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபரிடமிருந்து 10 கிராம் 800 மில்லி கிராம் ஐஸ் போதைப்பொருள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
மேலதிக விசாரணைகளை கல்கிசை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.