அடிகாயங்களுடன் ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
குருநாகல் பொலிஸ் பிரிவில் உள்ள ஜெயந்திபுர வீதியில் இருந்து நேற்று சனிக்கிழமை இந்தச் சடலம் மீட்கப்பட்டுள்ளது என்று பொலிஸார் இன்று தெரிவித்தனர்.
குறித்த சடலத்தில் பலத்த அடிகாயங்கள் காணப்படுகின்றன என்றும், சடலம் இதுவரை யாருடையது என அடையாளம் காணப்படவில்லை என்றும் பொலிஸார் குறிப்பிட்டனர்.
உயிரிழந்தவர் சுமார் 55 வயதுடையவர் என்றும், 5 அடி 6 அங்குல உயரம் உடையவர் என்றும், நீல நிற முழுக்கை சேட் மற்றும் காற்சட்டை அணிந்தவர் என்றும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
சடலம் குருநாகல் வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை குருநாகல் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.