கொழும்பு, மட்டக்குளி பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட கதிரான பாலத்திற்கு அருகில் நேற்று வெள்ளிக்கிழமை (20) காலை ஆணொருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக மட்டக்குளி பொலிஸார் தெரிவித்தனர்.
55 வயது மதிக்கத்தக்க 05 அடி உயரமுடைய நபரொருவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
ADVERTISEMENT
சடலமாக மீட்கப்பட்டவர் தொடர்பில் இதுவரை எந்தவித தகவல்களும் கிடைக்கவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.
சடலமானது கொழும்பு தேசிய வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் மட்டக்குளி பொலிஸார் தெரிவித்தனர்.