• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Friday, May 9, 2025
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home Uncategorized

‘கௌரவ’ பாராளுமன்ற உறுப்பினர் என அழைப்பதற்கு தகுதிவாய்ந்தவர்களையே மக்கள் தெரிவுசெய்யவேண்டும் ; கரு ஜயசூரிய !

User1 by User1
October 1, 2024
in Uncategorized, இலங்கை செய்திகள்
0 0
0
‘கௌரவ’ பாராளுமன்ற உறுப்பினர் என அழைப்பதற்கு தகுதிவாய்ந்தவர்களையே மக்கள் தெரிவுசெய்யவேண்டும் ; கரு ஜயசூரிய !
Share on FacebookShare on Twitter

எதிர்வரும் பொதுத்தேர்தலில் ‘கௌரவ’ பாராளுமன்ற உறுப்பினர் என அழைப்பதற்குத் தகுதிவாய்ந்த வேட்பாளர்களுக்கு வாக்களித்து, அவர்களைத் தமது பிரதிநிதிகளாகத் தெரிவுசெய்வது நாட்டுமக்களின் கடமையாகும் என சமூக நீதிக்கான தேசிய இயக்கத்தின் தலைவரும், முன்னாள் சபாநாயகருமான கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.

சமூக நீதிக்கான தேசிய இயக்கத்தின் தலைவரும், முன்னாள் சபாநாயகருமான கரு ஜயசூரியவின் வழிகாட்டலின்கீழ் புதிதாக ஸ்தாபிக்கப்பட்டுள்ள ஜனநாயகம் மற்றும் ஆட்சியியல் கற்கைகள் நிறுவனத்தை அங்குரார்ப்பணம் செய்துவைக்கும் நிகழ்வு நேற்று திங்கட்கிழமை பி.ப 3.30 மணிக்கு கொழும்பிலுள்ள லக்ஷ்மன் கதிர்காமர் கற்கைகள் நிறுவனத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய, முன்னாள் ஜனாதிபதி செயலாளரும் இந்தியாவுக்கான இலங்கையின் முன்னாள் உயர்ஸ்தானிகருமான ஒஸ்டின் பெர்னாண்டோ, அரச மற்றும் தனியார் பல்கலைக்கழகங்களில் பணிபுரியும் விரிவுரையாளர்கள், புத்திஜீவிகள், இலங்கையில் சேவையாற்றும் பன்னாட்டு இராஜதந்திரிகள், சிவில் சமூகப்பிரதிநிதிகள், மாணவர்கள் எனப் பல்வேறுபட்ட தரப்பினரும் கலந்துகொண்டிருந்தனர்.

ADVERTISEMENT

அதன்படி இந்நிகழ்வின் தொடக்கத்தில் உரையாற்றிய ஜனநாயகம் மற்றும் ஆட்சியியல் கற்கைகள் நிறுவனத்தின் தலைவர் பாலித லிஹினியகுமார, நல்லாட்சியை முன்னிறுத்தி கரு ஜயசூரியவினால் முன்னெடுக்கப்பட்டுவரும் முயற்சிகளையும், நடவடிக்கைகளையும் தொடர்ந்து முன்கொண்டு செல்வதே இந்த கற்கைள் நிறுவனத்தின் பிரதான நோக்கம் எனச் சுட்டிக்காட்டியதுடன், அதன் எதிர்கால செயற்பாடுகள் தொடர்பில் தெளிவுபடுத்தினார்.

அதேவேளை இக்கற்கைகள் நிறுவனத்தின் ஒருங்கிணைப்புப் பங்காளியாகத் தொழிற்படவுள்ள அரசியல் கற்கைகள் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி அகலங்க ஹெட்டியாராச்சி, இலங்கையில் வெளிப்படையானதும், பொறுப்புக்கூறத்தக்கதுமான ஆட்சி நிர்வாகத்தைக் கட்டியெழுப்புவதை இலக்காகக்கொண்டு தாபிக்கப்பட்டிருக்கும் இந்த நிறுவனத்தினால் வழங்கப்படும் கல்வியின் மூலம் ஆட்சியியல் மற்றும் அரச கொள்கை என்பவற்றின் தரத்தை மேம்படுத்தமுடியும் என நம்பிக்கை வெளியிட்டார்.

அதனைத்தொடர்ந்து ஜனநாயகம் மற்றும் ஆட்சியியல் கற்கைகள் நிறுவனத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளப்பக்கம் கரு ஜயசூரியவினால் அங்குரார்ப்பணம் செய்துவைக்கப்பட்டதுடன், அந்நிறுவனத்தின் தலைவர் பாலித லிஹினியகுமாரவுக்கும், அரசியல் கற்கைகள் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி அகலங்க ஹெட்டியாராச்சிக்கும் இடையில் இருதரப்புப் புரிந்துணர்வு ஒப்பந்தமொன்றும் கைச்சாத்திடப்பட்டது.

அதனையடுத்து நிகழ்வில் உரையாற்றிய ஒஸ்டின் பெர்னாண்டோ, நேர்மறையான ஆட்சியியல் மாற்றம் ஏற்படவேண்டியதன் அவசியத்தை சுட்டிக்காட்டியதுடன், அதன் ஓரங்கமாக உள்ளுராட்சிமன்ற மற்றும் மாகாணசபைத்தேர்தல்கள் நடாத்தப்படவேண்டும் எனவும், எதிர்வருங்காலங்களில் அரசியலில் பெண்கள் மற்றும் இளைஞர்களின் பங்கேற்பை உறுதிப்படுத்தவேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

அதேவேளை உண்மையான தலைமைத்துவம் என்பது வெறுமனே சொற்களிலன்றி, செயல்களில் தென்படவேண்டும் எனவும், இதுவரை காலமும் தான் வகித்த சகல பதவிகளிலும் அதனை மனதிலிருத்தியே செயற்பட்டதாகவும் குறிப்பிட்ட ‘தேசமான்ய’ கரு ஜயசூரிய, நல்லாட்சி என்பது ஆடம்பரமல்ல எனவும், மாறாக அது அத்தியாவசியமானதொன்று எனவும் தெரிவித்தார்.

‘எமது நாட்டில் பொதுமக்களின் தேவைகளுக்கு அப்பால் ஊழல் மோசடிகளும், நிர்வாக முறைகேடுகளும் பெருகியிருப்பதை மிகுந்த கவலையுடன் பார்க்கிறேன். இவற்றை சீரமைத்து, ஜனநாயகத்தை ஊக்குவிக்கும் நோக்கிலேயே நாம் ஜனநாயகம் மற்றும் ஆட்சியியல் கற்கைகள் நிறுவனத்தை ஸ்தாபித்திருக்கிறோம்’ எனவும் கரு ஜயசூரிய குறிப்பிட்டார்.

மேலும் கடந்த 21 ஆம் திகதி அமைதியான முறையில் ஜனாதிபதித்தேர்தல் நடைபெற்றதாகவும், அதற்கு மறுதினம் தோல்வியடைந்த வேட்பாளர் அலுவலகத்தைவிட்டு வெளியேறியதுடன், வெற்றியடைந்த வேட்பாளர் ஆடம்பர நிகழ்வுகள் எவையுமின்றி அமைதியாகப் பதவிப்பிரமாணம் செய்துகொண்டதாகவும் தெரிவித்த கரு ஜயசூரிய, ஜனநாயக ரீதியில் ஒரு ஆட்சி மாற்றம் மிக அமைதியான முறையில் நிகழமுடியும் என்பதற்காக மிகச்சிறந்த எடுத்துக்காட்டாக இது அமைந்ததாகப் பெருமிதம் வெளியிட்டார். அதுமாத்திரமன்றி உலகநாடுகளுக்கு சிறந்த முன்னுதாரணத்தை வழங்கிய இலங்கையின் தலைவர்களுக்கு அவர் தனது நன்றியையும் தெரிவித்தார்.

அதேபோன்று எதிர்வரவுள்ள பொதுத்தேர்தலில் ‘கௌரவ’ பாராளுமன்ற உறுப்பினர் என அழைப்பதற்குத் தகுதிவாய்ந்த வேட்பாளர்களுக்கு வாக்களித்து, அவர்களைத் தமது பிரதிநிதிகளாகத் தெரிவுசெய்வது நாட்டுமக்களின் கடமையாகும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

Thinakaran
398 673.7K
  • Videos
  • Playlists
  • நுவரெலியா மாவட்டத்தில் நீர் தேக்கங்களின் நீர் மட்டம் வெகுவாக குறைந்துள்ளது.  | Thinakaran news
    நுவரெலியா மாவட்டத்தில் நீர் தேக்கங்களின் நீர் மட்டம் வெகுவாக குறைந்துள்ளது. | Thinakaran news 6 days ago
  • இலங்கையில் இப்படியும் ஒரு போலீசாரா? : அதுவும் மட்டக்களப்பில் | Thinakaran news
    இலங்கையில் இப்படியும் ஒரு போலீசாரா? : அதுவும் மட்டக்களப்பில் | Thinakaran news 6 days ago
  • யாழ்ப்பாணம் நகரப் பகுதியில் பிரச்சார துண்டு பிரசுரம் வழங்கும் நிகழ்வு: | Thinakaran news
    யாழ்ப்பாணம் நகரப் பகுதியில் பிரச்சார துண்டு பிரசுரம் வழங்கும் நிகழ்வு: | Thinakaran news 6 days ago
  • 412 more
    • ஆவணப்படுத்தல்
      ஆவணப்படுத்தல்
      5 videos 1 year ago
    • DAILY REPORT
      DAILY REPORT
      27 videos 1 year ago
    • NIGHT NEWS
      NIGHT NEWS
      67 videos 1 year ago
  • 4 more
    • User1

      User1

      Related Posts

      யாழ். பல்கலை பொன்விழா பிரமாண்டமாக பிரான்ஸில்.!

      யாழ். பல்கலை பொன்விழா பிரமாண்டமாக பிரான்ஸில்.!

      by Mathavi
      May 9, 2025
      0

      யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் பொன்ழா நிகழ்வுகள் பிரான்ஸில் ஜூன் 8 ஆம் திகதி பிரமாண்டமான முறையில் கொண்டாடுவதற்கான ஒழுங்குகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. பிரான்ஸ் தலைநகர், பாரிஸின் புறநகர்ப் பகுதியான...

      இலங்கை விமானப்படைக்கு சொந்தமான உலங்கு வானூர்தி விபத்து.!

      இலங்கை விமானப்படைக்கு சொந்தமான உலங்கு வானூர்தி விபத்து.!

      by Mathavi
      May 9, 2025
      0

      இலங்கை விமானப்படைக்கு சொந்தமான பெல் 212 உலங்கு வானூர்தி ஒன்று இன்று காலை 8.17 மணியளவில் விபத்துக்குள்ளானதாக விமானப்படையின் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். ஹிங்குரக்கொட முகாமில் இருந்து...

      கிண்ணியா நகர சபைக்கு ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவர் ஒரே கட்சியில் தெரிவு.!

      கிண்ணியா நகர சபைக்கு ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவர் ஒரே கட்சியில் தெரிவு.!

      by Mathavi
      May 9, 2025
      0

      நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி மன்ற தேர்தலில் ஒரே குடும்பத்தை சேர்ந்த இரு சகோதரர்கள் ஐக்கிய மக்கள் சக்தி சார்பில் போட்டியிட்டு வெற்றியீட்டியுள்ளார்கள். கிண்ணியா நகர சபைக்கான உள்ளூராட்சி...

      யாழைச் சேர்ந்த பொலிஸ் உத்தியோகத்தர் நீரில் மூழ்கி உயிரிழப்பு.!

      யாழைச் சேர்ந்த பொலிஸ் உத்தியோகத்தர் நீரில் மூழ்கி உயிரிழப்பு.!

      by Mathavi
      May 9, 2025
      0

      அனுராதபுரம் பொலிஸ் நிலையத்தில் பணிபுரிந்து வரும் தமிழ்ப் பொலிஸ் உத்தியோகத்தர் நேற்றைய தினம் மாலை 6:00 மணியளவில் ஆற்றில் மூழ்கி உயிரிழந்துள்ளார். தனது கடமை முடிந்து ஆற்றில்...

      நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இடியுடன் கூடிய மழை.!

      நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இடியுடன் கூடிய மழை.!

      by Mathavi
      May 9, 2025
      0

      நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிற்பகல் ஒரு மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. மத்திய, சப்ரகமுவ,...

      சலுகைகளுக்காக வாக்களிப்பவர்கள் தமிழ் மக்கள் அல்ல..!

      சலுகைகளுக்காக வாக்களிப்பவர்கள் தமிழ் மக்கள் அல்ல..!

      by Thamil
      May 8, 2025
      0

      "கசிப்பும் பணமும் கொடுத்து தமிழரசுக் கட்சி வாக்கு சேகரித்தது என்பதை அமைச்சர் விமல் ரத்நாயக்க நாடாளுமன்றுக்கு வெளியில் வந்து ஆதாரங்களுடன் நிரூபித்துக் காட்டவேண்டும்" என வலியுறுத்தியுள்ள இலங்கை...

      யாழில் பிறந்த இரட்டை குழந்தைகளில் ஒரு குழந்தை உயிரிழப்பு..!

      யாழில் பிறந்த இரட்டை குழந்தைகளில் ஒரு குழந்தை உயிரிழப்பு..!

      by Thamil
      May 8, 2025
      0

      யாழில் பிறந்த இரட்டை குழந்தைகளில் ஒரு குழந்தை நேற்றிரவு உயிரிழந்துள்ளது. நீர்வேலி தெற்கு, நீர்வேலிப் பகுதியைச் சேர்ந்த விஜிகரன் கேனகா என்ற பிறந்து ஏழு நாட்கள் நிரம்பிய...

      மனைவி பணம் கொடுக்காததால் இளம் குடும்பஸ்தர் உயிர்மாய்ப்பு..!

      மனைவி பணம் கொடுக்காததால் இளம் குடும்பஸ்தர் உயிர்மாய்ப்பு..!

      by Thamil
      May 8, 2025
      0

      யாழில் போதைப்பொருள் பாவிப்பதற்கு மனைவி பணம் கொடுக்காததால் இளம் குடும்பஸ்தர் ஒருவர் இன்றைய தினம் தவறான முடிவெடுத்து தூக்கிட்டு உயிர்மாய்த்துள்ளார். அராலி - வசந்தபுரம் பகுதியைச் சேர்ந்த...

      தனக்குத் தானே தீ வைத்த இளம் குடும்பப் பெண் உயிரிழப்பு..!

      தனக்குத் தானே தீ வைத்த இளம் குடும்பப் பெண் உயிரிழப்பு..!

      by Thamil
      May 8, 2025
      0

      தீக் காயங்களுக்கு உள்ளாகி யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த இளம் குடும்பப் பெண் ஒருவர் இன்றைய தினம் உயிரிழந்துள்ளார். மன்னார் - மடு பகுதியைச்...

      Load More
      Next Post
      பாராளுமன்ற தேர்தல் தபால் மூல வாக்களிப்பு – முக்கிய அறிவித்தலை வெளியிட்டது தேர்தல் ஆணைக்குழு !

      பாராளுமன்ற தேர்தல் தபால் மூல வாக்களிப்பு - முக்கிய அறிவித்தலை வெளியிட்டது தேர்தல் ஆணைக்குழு !

      பளைப்பகுதியில்  104 kg கஞ்சா மீட்பு…!

      பளைப்பகுதியில்  104 kg கஞ்சா மீட்பு...!

      தமிழரசுக் கட்சி கொழும்பில் போட்டியிடுவது தொடர்பில் பரிசீலிப்பு 

      தமிழரசுக் கட்சி கொழும்பில் போட்டியிடுவது தொடர்பில் பரிசீலிப்பு 

      Leave a Reply Cancel reply

      Your email address will not be published. Required fields are marked *

      Popular News

      • மாவையரின் உயிரைக்குடித்த 19 அயோக்கியர்கள்; பரபரப்பு தகவல்.!

        மாவையரின் உயிரைக்குடித்த 19 அயோக்கியர்கள்; பரபரப்பு தகவல்.!

        0 shares
        Share 0 Tweet 0
      • ஆசிரியரால் சீரழிக்கப்பட்ட மாணவி உயிர்மாய்ப்பு; பொலிஸாருக்கும் இதில் உடந்தையாம்.!

        0 shares
        Share 0 Tweet 0
      • அம்பலமானது தமிழர்களை கொன்றுகுவித்த வதை முகாம்!

        0 shares
        Share 0 Tweet 0
      • தமிழ் மாணவன் சிங்கள மாணவர்களால் தீ வைத்து எரிப்பு.! (சிறப்பு இணைப்பு)

        0 shares
        Share 0 Tweet 0
      • கடலில் நீராடச் சென்ற யுவதி உயிரிழப்பு.! (சிறப்பு இணைப்பு)

        0 shares
        Share 0 Tweet 0

      Follow Us

        Thinakaran

        உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

        www.thinakaran.com

        © 2024 Thinakaran.com

        Welcome Back!

        Login to your account below

        Forgotten Password?

        Retrieve your password

        Please enter your username or email address to reset your password.

        Log In
        No Result
        View All Result
        • முகப்பு
        • இலங்கை
          • முல்லைதீவு செய்திகள்
          • வவுனியா செய்திகள்
          • கிளிநொச்சி செய்திகள்
          • திருகோணமலை செய்திகள்
          • மட்டக்களப்பு செய்திகள்
          • மன்னார் செய்திகள்
          • மலையக செய்திகள்
        • இந்தியா
        • உலகம்
        • சினிமா
        • விளையாட்டு
        • நிகழ்வுகள்
        • எம்மை பற்றி