2024 ஆண்டிற்கான சிறுவர் தினத்தையொட்டி இதுவரை பிறப்புச் சான்றிதழை பதிவு செய்யாத சிறுவர்களுக்கான நடமாடும் சேவையானது 01.10.2024 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை காலை 09.00 மணி தொடக்கம் பி.ப 04.00 மணி வரை மாவட்டச் செயலகத்தின் மாநாட்டு மண்டபத்தில் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்டச் செயலாளருமான திரு. மருதலிங்கம் பிரதீபன் அவர்கள் தலைமையில் நடைபெறவுள்ளது.
சிறுவர்களுக்கான பிறப்புச் சான்றிதழை பதிவு செய்வதற்காக உரிய ஆவணங்களுடன் வருகை தந்து பிறப்புச் சான்றிதழை பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
ஊடகப் பிரிவு மாவட்டச் செயலகம் யாழ்ப்பாணம்
ADVERTISEMENT