கொஸ்கொடை கடற்கரையில் ஆணொருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக கொஸ்கொடை பொலிஸார் தெரிவித்தனர்.
சடலமாக மீட்கப்பட்டவர் தொடர்பில் இதுவரை எந்தவித தகவல்களும் கிடைக்கவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.
சடலமானது மிகவும் அழுகிய நிலையில் காணப்படுவதுடன் இவர் பல நாட்களுக்கு முன்னரே உயிரிழந்திருக்கலாம் என பொலிஸார் தெரிவித்தனர்.
ADVERTISEMENT
சடலம் பிரேதப் பரிசோதனைக்காக பலப்பிட்டிய ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கொஸ்கொடை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.