யாழில் வீசிய பலத்த காற்று காரணமாக பாடசாலை ஒன்றில் மரமொன்று முறிந்து விழுந்துள்ளது.
குறித்த சம்பவம் இன்று(22.08.2024) இடம்பெற்றுள்ளது.
இதன்போது, யாழ்ப்பாணம் – உரும்பிராய் பகுதியில் உள்ள சைவத்தமிழ் வித்தியாலயத்தின் வகுப்பறை ஒன்றின் மீது மலைவேம்பு மரம் ஒன்று முறிந்து விழுந்துள்ளதாக யாழ். அனர்த்த முகாமைத்துவ பிரிவின் பிரதிப் பணிப்பாளர் ரி.என்.சூரியராஜா தெரிவித்துள்ளார்.
ADVERTISEMENT
இதனால், வகுப்பறையொன்றின் கூரை பகுதியில் சேதமடைந்திருப்பதாகவும், மரத்தை வெட்டி அகற்றுவதற்காக நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றதாகவும் அவர் கூறியுள்ளார்.