• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Monday, May 19, 2025
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home Uncategorized

தாளையடி கிராமத்தை தனியான கிராம சேவகர் பிரிவாக மாற்ற மக்கள் எதிர்ப்பு!

User1 by User1
August 5, 2024
in Uncategorized
0 0
0
தாளையடி கிராமத்தை தனியான கிராம சேவகர் பிரிவாக மாற்ற மக்கள் எதிர்ப்பு!

Exif_JPEG_420

Share on FacebookShare on Twitter

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு பிரதேச செயலகம் முன் மருதங்கேணி கிராம மக்கள் இன்று காலை 9:30மணிமுதல்  போராட்டம் ஒன்றினை முன்னெடுத்திருந்தனர்.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது.


வடமராட்சி கிழக்கு பிரதேச செயலர் பிரிவிலுள்ள மருதங்கேணி கிராம சேவகர் பிரிவு உள்ளது. இக் கிராம சேவகர் பிரிவில் மருதங்கேணி வடக்கு, மருதங்கேணி தெற்கு, தாளையடி என்கின்ற மூன்று கிராமங்கள் உள்ளன.

ADVERTISEMENT

இதில் தாளையடி என்கின்ற சுமார் 140 குடும்பங்களைக் கொண்ட கிராமத்தை தனியான கிராம சேவகர் பிரிவாக மாற்றுவதற்குரிய நடவடிக்கைகளை வடமராட்சி கிழக்கு பிரதேச செயலாளர் கு.பிரபாகரமூர்த்தி இரகசியமாக மேற்கொண்டு வருகின்றார்.

இதனை அறிந்த மருதங்கேணி வடக்கு, மருதங்கேணி தெற்கு கிராம மக்கள் தாளையடி கிராமத்தை தனியான கிராம சேவகர் பிரிவாக மாற்றுவதை உடனடியாக கைவிடுமாறு கோரியே குறித்த போராட்டம் நடாத்தப்பட்டது. 

இதில் மருதங்கேணி எங்கள் சொத்து இதனை ஒருநாளும் பிரிக்க இடமளிக்க மாட்டோம்,  தாளையடியில் கடல் நீரை நன்னீராக மாற்றும் திட்டத்திற்காக எமது பாரம்பரிய நிலங்களை அபகரிக்காதே,  உங்கள் டீலுக்காக தாளையடி கிராமத்தை பிரிக்காதே,  மருதங்கேணி எங்கள் பூர்வீக சொத்து, உங்கள் நலனுக்கு எங்கள் பிரதேசம் லஞ்சமா, எல்லை நிர்ணயம் செய்த போது அயல் கிராமங்களை அழைக்காதது ஏன், இவ்வாறு பல்வேறு கோஷங்களை எழுப்பினர். பிரதேச செயலாளருக்கு மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டது.

அங்கு கருத்து தெரிவித்த பிரதேச செயலாளர் தாளையடி கிராமத்தை தனியான கிராம சேவகர் பிரிவாக ஆக்குமாறு பல்வேறு கோரிக்கைகள் முன் வைக்கப்பட்டுள்ளன. அவ்வாறு தாளையடி கிராமம் தனியான கிராமசேவகர் பிரிவாக ஆக்கப்படும்போது எல்லைகள் நிர்ணயம் செய்யும் போது தங்களையும் அழைத்துத் தான் எல்லை நிர்ணயம் செய்யப்படும் என்று தெரிவித்தார். 

அவ்வாறு கருத்து தெரிவிக்கும் போது குறுக்கிட்ட போராட்டக் காரர்கள் நீங்கள் இவ்வாறு குறிப்பிடுகிறீர்கள், அப்படியாயின் எவ்வாறு இந்த கடிதம் அனுப்பப்பட்டது என்று  பிரதேச செயலாளர் கு.பிரபாக மூர்த்தியால் மாவட்ட செயலருக்கு முகவரியிடப்பட்ட, வடக்கு மாகாண ஆளுநரின் செயலாளருக்கு பிரதியிடப்பட்ட கடிதம் ஒன்றினை வாசித்து காட்டினர்.

அதில் நாற்றிசையும் எல்லை இடப்பட்டு தாளையடி கிராமத்தை தனியான கிராம சேவகர் பிரிவாக மாற்றுவதற்குரிய நடவடிக்கை எடுங்கள் என எழுதப்பட்டிருந்தது. இந்நிலையில் பிரதேச செயலாளர் பதில் எதுவும் கூற முடியாது அங்கிருந்து விலகிச் சென்றார்.

இதே வேளை அங்கு போராட்டக்காரர்கள் தாளையடி கிராமத்தை  அவர்கள் இருக்கின்ற அமைவிடத்துடன் கிராம சேவகர் பிரிவாக மாற்ற தமக்கு ஆட்சேபனை இல்லை என்றும், பிரதேச செயலாளரால் மாவட்ட செயலாளருக்கு அனுப்பிய கடிதத்தின் பிரகாரம் அதில் உள்ள எல்லைகளுடன் தாளையடி கிராம சேவகர் பிரிவை உருவாக்கவும், தமது பாரம்பரியமான கிராமத்தை இல்லாதொழிக்க அனுமதிக்க மாட்டோம் என்றும் தெரிவித்தனர்.




User1

User1

Related Posts

வெளிநாடுகளில் அதிக வசூல் செய்த சசிகுமாரின் படம்

வெளிநாடுகளில் அதிக வசூல் செய்த சசிகுமாரின் படம்

by Sangeetha
May 5, 2025
0

சசிகுமார் நடிப்பில் வெளியாகி உள்ள படம் 'டூரிஸ்ட் ஃபேமிலி'. இப்படம் 1-ந்தேதி அன்று உலகம் முழுவதும் வெளியானது. தமிழ்நாட்டில் பெரும்பாலான திரையரங்குகளில் ஹவுஸ் ஃபுல் ஷோக்களாக ஓடிக்கொண்டு...

இராமநாதபுரம் பகுதியில் தேசிய மக்கள் சக்தியின் பிரச்சாரக் கூட்டம்..!

இராமநாதபுரம் பகுதியில் தேசிய மக்கள் சக்தியின் பிரச்சாரக் கூட்டம்..!

by Thamil
April 29, 2025
0

தேசிய மக்கள் சக்தியின் பிரச்சாரக் கூட்டம் இன்றைய தினம் 29.04.2025 இராமநாதபுரம் பகுதியில் நடைபெற்றது. இந்நிகழ்வில் மகளிர் விவகார அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் அவர்கள் கலந்து...

யாழில் இளம் குடும்பப் பெண்  உயிர்மாய்ப்பு..!

யாழில் இளம் குடும்பப் பெண் உயிர்மாய்ப்பு..!

by Thamil
April 28, 2025
0

யாழில் இளம் குடும்பப் பெண் ஒருவர் நேற்றைய தினம் தவறான முடிவெடுத்து தனக்குத் தானே தீ வைத்து உயிர் மாய்த்துள்ளார். இணுவில் கிழக்கு, கொக்கன் வளவுப் பகுதியைச்...

யாழில் குடும்பப் பெண் உயிரிழப்பு..!

யாழில் குடும்பப் பெண் உயிரிழப்பு..!

by Thamil
April 27, 2025
0

யாழில் காய்ச்சல் காரணமாக இளம் குடும்பப் பெண் ஒருவர் இன்றைய தினம் உயிரிழந்துள்ளார். இதன் போது 2 ஆம் குறுக்குத் தெரு, கொழும்புத்துறை பகுதியைச் சேர்ந்த கமலநாதன்...

யாழில் உயிரியல் பிரிவில் முதல் இரு இடங்களையும் பெற்றுக் கொண்ட இரட்டையர்கள்..!

யாழில் உயிரியல் பிரிவில் முதல் இரு இடங்களையும் பெற்றுக் கொண்ட இரட்டையர்கள்..!

by Thamil
April 26, 2025
0

2024ஆம் ஆண்டிற்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை முடிவுகளின் அடிப்படையில் யாழ். இந்துக் கல்லூரியைச் சேர்ந்த இரண்டு மாணவர்கள் மாவட்ட மட்டத்தில் முதல் இரு இடங்களைப்...

ஐ.பி.எல்.: மாபெரும் சாதனை பட்டியலில் விராட் கோலியை பின்னுக்கு தள்ளிய ரோகித் சர்மா

ஐ.பி.எல்.: மாபெரும் சாதனை பட்டியலில் விராட் கோலியை பின்னுக்கு தள்ளிய ரோகித் சர்மா

by Sangeetha
April 21, 2025
0

ஐ.பி.எல். தொடரில் மும்பையில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த சென்னை...

அன்னை பூபதி நினைவாக பிரித்தானிய பிரதமர் அலுவலகம் முன்பு உண்ணாவிரத போராட்டம்

அன்னை பூபதி நினைவாக பிரித்தானிய பிரதமர் அலுவலகம் முன்பு உண்ணாவிரத போராட்டம்

by Sangeetha
April 19, 2025
0

அன்னை பூபதி நினைவாக பிரித்தானிய பிரதமர் அலுவலகம் முன்பு உண்ணாவிரத போராட்டம் – தமிழீழ சுயநிர்ணய அமைப்பின் ஏற்பாட்டில் நடைபெற்ற அமைதிப் போராட்டம்! தியாகதீபம் அன்னை பூபதி...

ஐபிஎல் 2025: டிம் டேவிட் வரலாற்று சாதனை – தோல்வியிலும் ஆட்ட நாயகன் விருது!

ஐபிஎல் 2025: டிம் டேவிட் வரலாற்று சாதனை – தோல்வியிலும் ஆட்ட நாயகன் விருது!

by Sangeetha
April 19, 2025
0

ஐபிஎல் தொடரின் நேற்றைய போட்டியில் ஆர்சிபி- பஞ்சாப் அணிகள் மோதின. மழை காரணமாக போட்டி 14 ஓவர்களாக மாற்றப்பட்டது. இதில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி பந்து...

நிலங்கடந்தவளின் நிலத்தின் மீதான ஏக்கம் – விமர்சகரின் ஒரு பார்வை

நிலங்கடந்தவளின் நிலத்தின் மீதான ஏக்கம் – விமர்சகரின் ஒரு பார்வை

by Mathavi
March 24, 2025
0

“நிலங்கடந்தவள்” நூலினை வாசிக்க கையில் எடுத்த போது எல்லாக் கவிகள் போலவே இருக்கும் என்று எண்ணியே தாள்களை புரட்டினேன். தாள்களில் ஊண்டப்பட்ட கறுப்பு சாயங்கள் என்னை மென்மையாக...

Load More
Next Post
மன்னார் பொது வைத்தியசாலையில் இளம் குடும்பப் பெண் உயிரிழப்பு விவகாரம் : விசாரணைகள் ஆரம்பம்

மன்னார் பொது வைத்தியசாலையில் இளம் குடும்பப் பெண் உயிரிழப்பு விவகாரம் : விசாரணைகள் ஆரம்பம்

மன்னாரில் கைது செய்யப்பட்ட வைத்தியர் அர்சுனாவுக்கு பிணை மனு நிராகரிப்பு-தொடர்ந்து விளக்கமறியல் உத்தரவு.

மன்னாரில் கைது செய்யப்பட்ட வைத்தியர் அர்சுனாவுக்கு பிணை மனு நிராகரிப்பு-தொடர்ந்து விளக்கமறியல் உத்தரவு.

மன்னாரில் இளம் பட்டதாரி பெண்ணுக்கு நேர்ந்த கதி: வலுக்கும் கண்டனங்கள்

மன்னாரில் இளம் பட்டதாரி பெண்ணுக்கு நேர்ந்த கதி: வலுக்கும் கண்டனங்கள்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Popular News

  • மாவையரின் உயிரைக்குடித்த 19 அயோக்கியர்கள்; பரபரப்பு தகவல்.!

    மாவையரின் உயிரைக்குடித்த 19 அயோக்கியர்கள்; பரபரப்பு தகவல்.!

    0 shares
    Share 0 Tweet 0
  • ஆசிரியரால் சீரழிக்கப்பட்ட மாணவி உயிர்மாய்ப்பு; பொலிஸாருக்கும் இதில் உடந்தையாம்.!

    0 shares
    Share 0 Tweet 0
  • அம்பலமானது தமிழர்களை கொன்றுகுவித்த வதை முகாம்!

    0 shares
    Share 0 Tweet 0
  • தமிழ் மாணவன் சிங்கள மாணவர்களால் தீ வைத்து எரிப்பு.! (சிறப்பு இணைப்பு)

    0 shares
    Share 0 Tweet 0
  • கடலில் நீராடச் சென்ற யுவதி உயிரிழப்பு.! (சிறப்பு இணைப்பு)

    0 shares
    Share 0 Tweet 0

Follow Us

    Thinakaran

    உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

    www.thinakaran.com

    © 2024 Thinakaran.com

    Welcome Back!

    Login to your account below

    Forgotten Password?

    Retrieve your password

    Please enter your username or email address to reset your password.

    Log In
    No Result
    View All Result
    • முகப்பு
    • இலங்கை
      • முல்லைதீவு செய்திகள்
      • வவுனியா செய்திகள்
      • கிளிநொச்சி செய்திகள்
      • திருகோணமலை செய்திகள்
      • மட்டக்களப்பு செய்திகள்
      • மன்னார் செய்திகள்
      • மலையக செய்திகள்
    • இந்தியா
    • உலகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • நிகழ்வுகள்
    • எம்மை பற்றி