28.4 C
Jaffna
September 19, 2024
இலங்கை செய்திகள்திருகோணமலை செய்திகள்

திருகோணமலையில் பாடசாலை மாணவர்களுக்கான கல்விக்கான உதவி தொகை வழங்கி வைப்பு ..!

திருகோணமலையில் உள்ள தெரிவு செய்யப்பட்ட பாடசாலை மாணவர்களுக்கான கல்விக்கான உதவிதொகை பெரண்டினா நிறுவனம் ஊடாக வழங்கி வைக்கப்பட்டன. குறித்த நிகழ்வு திருகோணமலை உவர்மலை விவேகானந்தா கல்லூரி   மண்டபத்தில் வெள்ளிக்கிழமை  மாலை  (13) இடம் பெற்றது.

 பெரெண்டினாவின் கல்வி ஆதரவு திட்டங்களில் ஒன்றாக, ஆண்டுதோறும் குறைந்த வருமானம் கொண்ட பெரெண்டினா பயனாளிகளின் குடும்பங்களைச் சேர்ந்த திறமையான மாணவர்களுக்கு Bright Students Scholarship திட்டத்தின் மூலம் உதவி வழங்கி வருகின்றது.

 இந்த உதவித்தொகை கல்வித் தராதர உயர்தர பிரிவு மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளுடன் தொடர்புடைய அத்தியாவசியமான மாதாந்த செலவுகளை ஈடு செய்ய பெரிதும் பங்களிக்கிறது.

தற்போது, ​​இந்தத் திட்டத்தின் மூலம் வருடந்தோறும் 550க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு 7 மில்லியனுக்கு மேலான தொகையை வழங்கி ஆதரவளிப்பதில் பெரெண்டினா நிறுவனம் பெருமிதம் கொள்கின்றது. 

இந்த நிகழ்வானது திருகோணமலை பிரதேச வலய முகாமையாளர்  இ.திருச்செல்வம் தலைமையில் இடம் பெற்றது.

 நிகழ்வின்  முதன்மை விருந்தினராக திருகோணமலை கோட்டக் கல்வி பணிப்பாளர் சண்முகநாயகம் .  சிறப்பு விருந்தினர்களாக திருகோணமலை இ.கி.ச ஸ்ரீ கோணேஸ்வரா இந்துக் கல்லூரி  அதிபர்  கணேசலிங்கம் ,உவர்மலை விவேகானந்தா கல்லூரி அதிபர் புவனேஸ்வரன் ஆகியேர் கலந்து சிறப்பித்தனர். மற்றும்  திருகோணமலை  கிளை  முகாமையாளர்கள் கலந்து கொண்டனர்.

மற்றும் கணக்காய்வாளர்  பெரெண்டினா ஊழியர்கள் அனைவரும் கலந்து சிறப்பித்தனர். அத்துடன் 2024 கல்வி ஆண்டுக்குரிய உயர்தர மாணவர்களுக்கு காசோலைகளும் அப்பியாச புத்தகங்களும் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. 

Related posts

அம்பாறையில் வேலையற்ற பட்டதாரிகள் கறுப்பு பட்டி அணிந்து கவனயீர்ப்பு போராட்டம்!!

User1

மட்டக்களப்பு கிரான் புலிபாய்ந்த கல் வீதியில் கிளைமோர் ரக வெடிபொருள் மீட்பு !

User1

மலையகத்தில் ஒரே இரவில் இரண்டு வர்த்தக நிலையங்களை சூறையாடிய திருடர்கள்..!

sumi

Leave a Comment