28.4 C
Jaffna
September 19, 2024
உலக செய்திகள்விளையாட்டுச் செய்திகள்

ஹங்கேரியில் ஆரம்பமானது 45ஆவது செஸ் ஒலிம்பியாட்

செஸ் விளையாட்டில் மிகப்பெரிய போட்டியான 2 வருடங்களுக்கு ஒரு முறை நடத்தப்படும் செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் நேற்று முன்தினம் ஹங்கேரி தலைநகர் புடாபெஸ்டில் ஆரம்பமானது.

45ஆவது தடவையாக நடைபெறும் இந்த போட்டிகளானது எதிர்வரும் 23ஆம் திகதி வரை நடக்கிறது. 44-வது செஸ் ஒலிம்பியாட் கடந்த 2022ம் ஆண்டு சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் மிக குறுகிய காலத்தில் வெற்றிகரமாக நடத்தப்பட்டது.

இந்த நிலையில் 45-வது செஸ் ஒலிம்பியாட் போட்டியில் சாதனை எண்ணிக்கையாக ஓபன் பிரிவில் 197 அணிகளும், 975 வீரர்களும், பெண்கள் பிரிவில் 183 அணிகளும், 909 வீராங்கனைகளும் பங்கேற்கின்றனர்.

மொத்தம் 11 சுற்றுகளாக நடத்தப்படுகிறது. ஒவ்வொரு சுற்றிலும் வெற்றி பெறும் அணிக்கு 2 புள்ளியும், சமநிலைக்கு தலா ஒரு புள்ளியும் வழங்கப்படும். 11 சுற்று முடிவில் முதல் 3 இடங்களை பிடிக்கும் அணிகளுக்கு முறையே தங்கம், வெள்ளி, வெண்கலப்பதக்கம் அளிக்கப்படும்.

‘ஸ்விஸ்’ முறையில் நடைபெறும் இந்த போட்டியில் ஒவ்வொரு ஆட்டத்துக்கும் தலா ஒன்றரை மணி நேரம் ஒதுக்கப்படும். இதில் இதில் 40-வது காய் நகர்த்தலுக்கு பிறகு எஞ்சிய ஆட்டத்துக்கு 30 நிமிடங்கள் கூடுதலாக வழங்கப்படும். அத்துடன் தொடக்கத்தில் இருந்து ஒவ்வொரு நகர்வுக்கும் 30 வினாடி வீதம் அதிகரித்துக் கொண்டே போகும். ஒரு சுற்றில் அணியில் 4 பேர், எதிரணியினருடன் மோதுவார்கள்.

உலகின் ‘நம்பர் ஒன்’ வீரர் மாக்னஸ் கார்ல்சென் தனிப்பட்ட முறையில் எல்லா பட்டங்களையும் வென்று விட்டார். ஆனால் அணியாக செஸ் ஒலிம்பியாட் எட்டாக்கனியாக இருக்கிறது. அந்த ஏக்கத்தை தணிக்க இந்த முறை அவர் கடுமையாக முயற்சிப்பார்

Related posts

இலங்கை பெண்களுக்கு தென்கொரியாவில் வேலைவாய்ப்பு !

User1

நியூசிலாந்திற்கு எதிரான இலங்கை டெஸ்ட் அணி அறிவிப்பு

User1

இஸ்ரேல் – ஹமாஸ் இடையில் போர் நிறுத்த உடன்படிக்கை : வாஷிங்டனின் இறுதி முயற்சி

User1

Leave a Comment