28.4 C
Jaffna
September 19, 2024
இலங்கை செய்திகள்வவுனியா செய்திகள்

வவுனியா சிறைச்சாலையில் இருந்து 17 கைதிகள் விடுதலை

தேசிய சிறைக்கைதிகள் தினத்தை முன்னிட்டு ஜனாதிபதியின் விசேட பொது மன்னிப்பின் கீழ் நாடளாவிய ரீதியில் 350 சிறைக்கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

அதற்கமைய இன்று (12) வவுனியா (Vavuniya) விளக்கமறியல் சிறைச்சாலையில் இருந்து17 கைதிகள் இவ்வாறு விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

அவர்களில் 8 பேர் வேறு குற்றங்களுக்காக மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டதாக தெரவிக்கப்படுகின்றது.

சிறிய குற்றங்கள் மற்றும், சிறிய அபாராத தொகையைச் செலுத்த தவறிய சிறைக்கைதிகளே இவ்வாறு பொது மன்னிப்பின் கீழ் விடுவிக்கப்பட்டனர்.

இதேவேளை கைதிகள் தினத்தினை முன்னிட்டு சிறைக் கைதிகளை பார்வையிடுவதற்கு இன்று (12) விசேட திறந்த சந்தர்ப்பத்தை சிறைச்சாலைகள் திணைக்களம்  ஏற்பாடு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை – ஏறாவூரில் சம்பவம் !

User1

முச்சக்கரவண்டிக்கு பின்னால் பஸ் ஒன்று மோதி விபத்து – பெண் பலி !

User1

வடக்கு மாகாணத்தில் உயர்தரம் சித்தியடையாத வைத்தியர்கள்: இராஜாங்க அமைச்சர் வெளியிட்ட தகவல்

User1

Leave a Comment