27.9 C
Jaffna
September 16, 2024
இலங்கை செய்திகள்நாட்டு நடப்புக்கள்

அஞ்சல் மூல வாக்களிப்பு வீதம் அதிகரிப்பு

2024 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில், அஞ்சல் மூல வாக்களிப்பு வீதம் கடந்த இரண்டு நாட்களாக அதிகளவில் பதிவாகியுள்ளதாக பிரதி அஞ்சல் மா அதிபர் ராஜித ரணசிங்க தெரிவித்துள்ளார்.

இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த அவர், கடந்த இரண்டு தினங்களில் 80 வீதத்திற்கும் அதிகமானோர் அஞ்சல் மூலம் வாக்களித்துள்ளனர் என்று குறிப்பிட்டுள்ளார்.

தகவல்களின்படி, முதல் நாளிலும், இன்றும் அதிக எண்ணிக்கையிலான வாக்குகள் பயன்படுத்தப்பட்டதை அவதானிக்க முடிந்தது என்று அவர் தெரிவித்துள்ளார்.

2024 ஜனாதிபதித் தேர்தலில் மொத்தம் 712,319 வாக்காளர்கள் அஞ்சல் மூலம் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர்.

இதன்படி, ஜனாதிபதித் தேர்தலுக்கான அஞ்சல் மூல வாக்களிப்பு தொடர்ந்து மூன்றாவது நாளாக இன்று  நடைபெற்றது.

இதேவேளை, கடந்த மூன்று நாட்களுக்குள் வாக்களிக்க முடியாத அஞ்சல் மூல வாக்காளர்கள் எதிர்வரும் செப்டெம்பர் 11 அல்லது 12ஆம் திகதிகளில் அந்தந்த மாவட்ட செயலகத்தில் வாக்களிக்க அனுமதிக்கப்படுவர் என தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

Related posts

செவித்திறனற்றோருக்கும் இனிமேல் ஓட்டுநர் உரிமம்

sumi

19 தமிழக மீனவர்கள் நெடுந்தீவுக் கடலில் கைது!

sumi

இன்றைய நாணய மாற்றுவீதம்

User1

Leave a Comment