27.9 C
Jaffna
September 16, 2024
உலக செய்திகள்

பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர் உமாகுமரனுடன் சிறீதரன் எம்.பி சந்திப்பு.!

பிரித்தானியாவின் முதல் தமிழ் பாராளுமன்ற உறுப்பினரும், ஈழத்தமிழ் வம்சாவழியைச் சேர்ந்தவருமான உமா குமரனுக்கும், இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனுக்கும் இடையிலான சந்திப்பு, பிரித்தானிய நாடாளுமன்ற வளாகத்தில் நேற்றையதினம் நடைபெற்றுள்ளது.

தமிழ்மக்களின் மீது இலங்கை அரசால் கட்டமைக்கப்பட்ட வகையில் புரியப்பட்ட இனப்படுகொலை, அதற்கான நீதிப் பொறிமுறை, ஈழத்தமிழர்கள் எதிர்கொள்ளும் சமகால இன ஒடுக்குமுறைகள், மக்களின் அடுத்தகட்ட எதிர்பார்ப்புகள் நோக்கிய அரசியல் முன்னகர்வுகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் இதன்போது கலந்துரையாடப்பட்டன.

குறித்த சந்திப்பில், பிரித்தானிய தொழிற்கட்சிக்கான தமிழர்கள் அமைப்பின் பிரதிநிதி சென் கந்தையா மற்றும் பிரித்தானியாவின் சிரேஷ்ட சட்டத்தரணிகளுள் ஒருவரான கணா கணநாதன் ஆகியோரும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

சிலியின் முன்னாள் ஜனாதிபதி ஹெலி விபத்தில் பலி

sumi

பதவிக்காலம் முடிவடைவதற்குள் காசாவில் போர் நிறுத்தம்: ஜோ பைடன் உறுதி

User1

ஜேர்மனியில் இஸ்ரேலின் துணைதூதரகத்திற்கு வெளியே சந்தேகநபர் மீது பொலிஸார் துப்பாக்கிபிரயோகம்

User1

Leave a Comment