28.4 C
Jaffna
September 19, 2024
இந்திய செய்திகள்

கொல்கத்தா பெண் டாக்டர் கொலை சம்பவம் என்னுள் நடுக்கத்தை ஏற்படுத்துகிறது – பாடகி ஸ்ரேயா கோஷல்

பிரபல பின்னணி பாடகி ஸ்ரேயா கோஷல் தனது எக்ஸ் பக்கத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், “சமீபத்தில் கொல்கத்தாவில் நிகழ்ந்த கொடூரமான சம்பவத்தால் நான் மிகவும் பாதிக்கப்பட்டேன். ஒரு பெண்ணாக அந்த பயிற்சி மருத்துவர் அனுபவித்த கொடூரத்தை என்னால் நினைத்துக் கூடப் பார்க்க முடியவில்லை. இப்படியான சம்பவம் என்னுள் நடுக்கத்தை ஏற்படுத்துகிறது.

கொல்கத்தாவில் இம்மாதம் 14-ஆம் திகதி நடக்கவிருந்த எனது இசை நிகழ்ச்சியை ஒக்டோபர் மாதத்திற்கு ஆழ்ந்த சோகத்துடன் தள்ளி வைக்கிறேன். இந்த நிகழ்ச்சி பலராலும் அதிகளவில் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் நான் அனைவரையும் ஒற்றுமையுடன் இணைக்க வேண்டும்.

இந்தியாவில் மட்டுமல்ல, உலகில் உள்ள அனைத்து பெண்களின் பாதுகாப்பிற்காகவும், மரியாதைக்காகவும் பிரார்த்தனை செய்கிறேன் என்னுடைய இந்த முடிவை ரசிகர்கள் புரிந்துகொள்வார்கள் என்று நம்புகிறேன்.

மனித இனத்தின் மிருகங்களுக்கு எதிராக நாம் ஒன்றுபட்டு நிற்கிறோம். தயவுசெய்து புதிய தேதியை அறிவிக்கும் வரை பொறுத்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

Related posts

சித்தார்த் – அதிதி திருமணம் எங்கு நடக்கிறது தெரியமா..? இதோ

User1

தள்ளிப்போனது சூர்யாவின் கங்குவா ரிலீஸ்! 

User1

உயிரிழந்த அடுத்தநாளே உயிர்த்தெழுந்த இந்திய நடிகை பூனம் பாண்டே

sumi

Leave a Comment