28.4 C
Jaffna
September 19, 2024
Uncategorizedஇலங்கை செய்திகள்

வீட்டு வேலைக்குச்சென்ற முதல் நாளிலேயே 85 இலட்சம் ரூபா நகைகளை ஆட்டையப்போட்டு ஓடித்தப்பிய பெண்

தெஹிவளையில் வீடொன்றில் பெருந்தொகை பெறுமதியான நகைகள் கொள்ளையிடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

லியனகே வீதியிலுள்ள வர்த்தகர் ஒருவரின் வீட்டில் பணிப்பெண்ணாக சென்றவர், சுமார் 85 இலட்சம் ரூபா பெறுமதியான தங்க நகைகளை கொள்ளையிட்டுள்ளதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

திருடப்பட்ட பொருட்களில் தங்க சங்கிலி, காப்பு, மோதிரங்கள் உட்பட 50,000 ரூபா பெறுமதியான வெளிநாட்டு நாணயங்களும் உள்ளதாக முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பத்திரிகை ஊடாக பணிப்பெண் ஒருவர் கடந்த 27ஆம் திகதி காலை 10 மணியளவில் வர்த்தகரின் வீட்டுக்கு சென்றுள்ளார்.

தனது மூத்த சகோதரி ஊடாக அவர் அழைத்து வரப்பட்டுள்ளார். அவரது தனிப்பட்ட தகவல்கள் எதுவுமின்றி தொலைபேசி இலக்கத்தை மாத்திரம் வழங்கி பணியை ஆரம்பித்ததாக விசாரணைகளில் தெரியவந்துளளது.

அன்றைய தினம், வீட்டு உரிமையாளரின் மனைவி இரண்டு பிள்ளைகளை பாடசாலைக்கு அழைத்து சென்றுள்ளார்.

மேலும் மனைவியின் தந்தை மற்றும் தாயார் மட்டும் வீட்டில் இருந்ததால், மனைவியின் தந்தை வீட்டு உரிமையாளரான மருமகனுக்கு தொலைபேசியில் அழைப்பு விடுத்து, பணிப்பெண் யாருக்கும் தெரிவிக்காமல் வீட்டை விட்டுச் சென்றுள்ளார் என குறிப்பிட்டுள்ளார்.

பின்னர் சந்தேகம் ஏற்பட்டு மேல் மாடியை சோதனையிட்ட போது தங்கம் மற்றும் பணம் அனைத்தையும் அவர் எடுத்துச் சென்றமை தெரியவந்துள்ளது.

தங்கப் பொருட்களுக்கு மேலதிகமாக 45ஆயிரம் ரூபாய் பெறுமதியான Apple Air Pods இரண்டையும் அவர் எடுத்து சென்றள்ளார். சந்தேக நபரை கைது செய்வதற்கான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Related posts

காதலர் தினத்தில் காதலியுடன் வாக்குவாதம்-காதலன் விபரீத முடிவு-இலங்கையில் சோகம்..! மு

sumi

பிறந்து 45 நாட்களேயான குழந்தை சித்திரவதை செய்யப்பட்டு படுகொலை – தாயார் கைது!

User1

குச்சவெளி பள்ளவக்குளம் விவசாயக் காணிப் பிரச்சினை சம்மந்தமாக அரசாங்க அதிபருடனான சந்திப்பு..!

User1

Leave a Comment