27.9 C
Jaffna
September 16, 2024
உலக செய்திகள்கனடா செய்திகள்

ஜஸ்டின் ட்ரூடோவின் முடிவு: எதிர்ப்பில் ஈடுபட்டுள்ள சர்வதேச மாணவர்கள்

கனடா அரசு கல்வி அனுமதிகளை குறைக்க திட்டமிட்டுள்ள நிலையில், கனடா முழுவதும் ஆர்ப்பாட்டங்கள் மற்றும் பேரணிகளில் சர்வதேச மாணவர்கள் இறங்கியுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

எதிர்வரும் செப்டம்பர் மாதம் முதல், குறைந்த ஊதிய தற்காலிக பணியாளர்கள் மற்றும் நிரந்தரக் குடியிருப்பு அனுமதி பெறுவோரின் எண்ணிக்கையைக் குறைக்க திட்டமிட்டுள்ளதாக கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அறிவித்துள்ளார்.

அத்துடன், கல்வி அனுமதிகளையும் குறைக்க திட்டமிட்டுள்ளதுடன் 70,000 மாணவர்கள் நாடுகடத்தப்படும் அபாயமும் உருவாகியுள்ளது.

இந்நிலையில்,கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் முடிவை எதிர்த்து கனடா முழுவதும் ஆர்ப்பாட்டங்கள் மற்றும் பேரணிகளில் சர்வதேச மாணவர்கள் இறங்கியுள்ளனர். 

முன்னர் பிரின்ஸ் எட்வர்ட் தீவில் மட்டும் மாணவர்களின் ஆர்ப்பாட்டங்கள் நிகழ்ந்த நிலையில், தற்போது, ஒன்ராறியோ, மனித்தோபா மற்றும் பிரிட்டிஷ் கொலம்பியா உட்பட பல மாகாணங்களில் பேரணிகள் துவங்கியுள்ளன.

Related posts

கனேடியத் தூதுவருடன் சிறீதரன் எம்.பி சந்திப்பு.!

sumi

இங்கிலாந்து மன்னருக்கு புற்றுநோய்!

sumi

பாஜகவில் இணைந்துள்ளார் இந்திய கிரிக்கட் அணி வீரர் ரவீந்திர ஜடேஜா

User1

Leave a Comment