27.9 C
Jaffna
September 16, 2024
இலங்கை செய்திகள்திருகோணமலை செய்திகள்

ஜனாதிபதி தேர்தலை புறக்கணிக்க கோரி திருகோணமலையில் துண்டுப்பிரசுரங்கள் வினியோகிப்பு

ஜனாதிபதி தேர்தலை புறக்கணிக்க கோரி திருகோணமலையில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் துண்டுப்பிரசுரங்எளை பொது மக்களுக்கு நேற்று (25) வழங்கினர்.

திருகோணமலை பெரியகடை வீதியில் ஆரம்பித்து சிவன் கோயிலுக்கு முன்னால்  வரையான வீதி வரை ஜனாதிபதி தேர்தலை புறக்கணிக்க கோரி துண்டுப்பிரசுரங்களை வழங்கினர்.

இதில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் திருகோணமலை மாவட்ட அமைப்பாளர் மாவட்ட செயலாளர் உட்பட கட்சி ஆதரவாளர்கள் என பலர் கலந்து கொண்டு மக்களுக்கு வீதி வழியாக துண்டுப்பிரசுரங்களை வழங்கி வைத்தார்கள்.

இதன் போது ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட குறித்த கட்சியின் மாவட்ட செயலாளர் சிறீபிரசாந்

தமிழ் மக்கள் இம்முறை ஜனாதிபதி தேர்தலை புறக்கணிக்க வேண்டும். பொது வேட்பாளர் என்பது வெறும் கண்துடைப்பு இரண்டாம் விருப்பு வாக்கை பெரும்பான்மை இனவேட்பாளருக்கு கொண்டு செல்லும் தந்திரோபாயம். ஒற்றை ஆட்சி முறை இல்லாமல் ஆக்கப்பட்டு சமஷ்டி ஆட்சியை கொண்டு வரும் வரை தமிழ் மக்கள் தேர்தலை புறக்கணிக்க வேண்டும். 13ம் திருத்தத்துக்கு ஆதரவளித்தோரே பொது வேட்பாளருக்கு பின்னால் நிற்கின்றனர் என்றார்.

Related posts

இளைஞனின் காலை முறித்த பொலிசார்!! களத்தில் குதித்த மனித உரிமைகள் ஆணைக்குழு

sumi

மாணவர்களை தாக்கிய அதிபர் – 7 பேர் வைத்தியசாலையில் அனுமதி

User1

திருகோணமலை, குச்சவெளி, இலந்தைக்குளம் பகுதியில் விகாரை அமைக்க காணி துப்புரவு ; அரச அதிகாரிகள் நேரடி விஜயம்

User1

Leave a Comment