27.9 C
Jaffna
September 16, 2024
Uncategorizedஇலங்கை செய்திகள்

வெவ்வேறு பிரதேசங்களில் ஹெரோயின் போதைப்பொருளுடன் மூவர் கைது !

நீர்கொழும்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தலுபொத பகுதியில் ஹெரோயின் வைத்திருந்த சந்தேக நபர் ஒருவர் நேற்று சனிக்கிழமை (24) கைது செய்யப்பட்டுள்ளார்.

மேல் மாகாண வடக்கு குற்றப்பிரிவு அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்போதே இந்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைதானவர் தடுகம, ஜா – எல பகுதியைச் சேர்ந்த 41 வயதுடையவர் ஆவார். கைதான நபரிடமிருந்து 12 கிராம் 340 மில்லி கிராம் ஹெரோயின் போதைப்பொருள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

இதனையடுத்து, சந்தேக நபர் மேலதிக விசாரணைகளுக்காக நீர்கொழும்பு பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை நீர்கொழும்பு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். கல்கிஸ்ஸ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஜய ஸ்ரீ மாவத்தை பகுதியில் ஹெரோயின் வைத்திருந்த சந்தேக நபர் ஒருவர் நேற்று சனிக்கிழமை (24) கல்கிஸ்ஸ பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேல்மாகாண தெற்கு குற்றப் புலனாய்வு பிரிவு அதிகாரிகளினால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்போதே சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சந்தேக நபர் 38 வயதான ஜய ஸ்ரீ புர, இரத்மலானை பிரதேசத்தை சேர்ந்தவர் ஆவார்.

இவரிடமிருந்து 05 கிராம் 200 மில்லிகிராம் ஹெரோயின் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன. இதனையடுத்து, சந்தேக நபர் மேலதிக விசாரணைகளுக்காக கல்கிஸ்ஸ பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை, கல்கிஸ்ஸ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹூதவளை பகுதியில் ஹெரோயினுடன் ஒருவர் (24) கல்கிஸ்ஸ பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கல்கிஸ்ஸ பொலிஸாருக்கு கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் மேற்கொண்ட சுற்றிவளைப்பின்போதே சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவரிடமிருந்து 06 கிராம் 100 மில்லி கிராம் ஹெரோயின் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன. கைதான நபர் 28 வயதான இரத்மலானை பிரதேசத்தை சேர்ந்தவராவார்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கல்கிஸ்ஸ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

நாடாளுமன்றம் செல்ல கெஹலிய மறுப்பு

sumi

மட்டக்களப்பு மாவட்ட அஞ்சல் வாக்காளர்களை அத்தாட்சிப்படுத்தும் அலுவலர்களுக்கான செயலமர்வு

User1

அழகு கலை நிலையத்தில் கள்ளகாதலனுடன் பெண் செய்த காரியம்..!

sumi

Leave a Comment