27.9 C
Jaffna
September 16, 2024
இலங்கை செய்திகள்கிளிநொச்சி செய்திகள்

கிளிநொச்சியில் பொழுது போக்கு மையம் திறந்து வைப்பு

கிளிநொச்சி டிப்போ சந்தியில் பொது மக்கள் பொழுது போக்கு மையம் இராணுவத்தளபதி லெப்ரினன்ட் ஜெனரல் விக்கும் லியனகே அவர்களினால் இன்று25.08.2024 திறந்து வைக்கப்பட்டது. கிளிநொச்சி டிப்போ சந்தியிலுள்ள இராணுவ நினைவுத்தூபி அமைந்துள்ள வளாகத்திலேயே குறித்த பூங்கா திறந்து வைக்கப்பட்டது.

இலவச இணைய வசதிகளுடன் கூடிய குறித்த பூங்காவில் பாடசாலை மாணவர்கள் மற்றும் பல்கலைக்கழக மாணவர்கள் தமது கல்வி நடவடிக்கையை மேற்கொள்வதற்கு முன்னுரிமை வழங்கப்படவுள்ளது .

குறித்த நிகழ்வில் இராணுவத்தளபதி லெப்ரினன்ட் ஜெனரல் விக்கும் லியனகே, யாழ் மாவட்ட பாதுகாப்பு படைகளின் கட்டளை அதிகாரி, இராணுவ உயரதிகாரிகள், பொதுமக்கள், பல்கலைக்கழக மாணவர்கள், பாடசாலை மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

Related posts

ராஜபக்ஷர்களே நாட்டு மக்களை யாசகர்களாக்கினர் : நாமல் ராஜபக்ஷவை படுதோல்வியடைய செய்து மக்கள் தமது வெறுப்பை வெளிப்படுத்த வேண்டும் : பாட்டலி சம்பிக்க ரணவக்க !

User1

சற்றுமுன் ஏறாவூரில் விபத்து தளவாயை சேர்ந்த ஒருவர் சம்பவ இடத்தில் பலி

User1

சின்னங்கள் தொடர்பில் தேர்தல் ஆணைக்குழுவின் முக்கிய வர்த்தமானி அறிவித்தல்

User1

Leave a Comment