28.4 C
Jaffna
September 19, 2024
உலக செய்திகள்

மலேசியாவில் மோசடியில் ஈடுபட்ட இலங்கை குடும்பம் கைது

மலேசியாவில் போலியான முறையான கடவுச் சீட்டைப் பெற முயற்சித்த இலங்கையர் ஒருவரும், அவருக்கு உதவிய பெண் ஒருவரும் கைது செய்யப்பட்டனர்.

பினாங்கில் உள்ள குடிவரவுத் திணைக்களத்தில் போலியான ஆவணங்களை சமர்பித்து கடவுச்சீட்டை பெற முயற்சித்துள்ளனர்.

பதின்ம வயது நபருக்கு 10 வயது என்று கூறி கடவுச் சீட்டை பெற முயன்ற நிலையில், அவரின் தாய் போன்று நடித்த பெண்ணும் சிக்கியுள்ளார்.

எனினும் அவர்களின் ஆவணங்கள் போலியானவை என்பதை அறிந்த அதிகாரிகள், இருவரையும் கைது செய்ய நடவடிக்கை எடுத்தனர்.

குறித்த நபர் ஏலவே மலேசியக் கடவுச் சீட்டுக்கு விண்ணப்பித்திருந்த போதும், அவருக்கு மலே மொழி தெரியாத காரணத்தினால் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டமையும் தெரியவந்துள்ளது.  

Related posts

பிரித்தானியாவில் தீவிரம் பெறும் சிறுவர்கள் மீதான கத்திக்குத்து தாக்குதல்கள்

User1

பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர் உமாகுமரனுடன் சிறீதரன் எம்.பி சந்திப்பு.!

User1

ரஷ்ய கப்பல் மீது தாக்குதல்?

sumi

Leave a Comment