27.9 C
Jaffna
September 16, 2024
இலங்கை செய்திகள்கிளிநொச்சி செய்திகள்

கிளிநொச்சி இரத்தினபுரத்தில் கட்டிட வேலையில் ஈடுபட்ட தொழிலாளர் சடலமாக மீட்பு

கிளிநொச்சி இரத்தினபுரம் பகுதியில் கட்டிடவேலையில் ஈடுபட்டு வந்த தொழிலாளர் ஒருவர் இன்று காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

மேல் மாடி கட்டிடத்தின் இரண்டாம் மாடியில் நேற்று இரவு இருவர் வெல்டிங் வேலை செய்து கொண்டிருந்த நிலையில் ஒருவர் நித்திரைக்கு சென்றிருந்தார்.

மற்றவர் வேலை செய்து கொண்டிருந்ததாகவும் அதிகாலை எழுந்து மற்றவரை காணாது தேடியபோது சடலமாக கீழே காணப்பட்டார் என பொலிசாருக்கு தெரிவித்திருந்தார்.

குறித்த சம்பவம் தொடர்பாக கிளிநொச்சி பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

குறித்த சம்பவத்தில் யாழ்ப்பாணம் ஊர்காவற்துறையைச்சேர்ந்த 34வயதுடைய சின்னான்டி பரமேஸ்வரன் என்ற ஒரு பிள்ளையின் தந்தையே உயிரிழந்துள்ளார்.

Related posts

தேர்தலை ஒத்திவைக்க இடமளிக்க மாட்டோம்.!

sumi

வேலையாளர்களின் தேசிய குறைந்தபட்ச வேதனம் (திருத்தச்) சட்டமூலத்தை சான்றுரைப் படுத்தினார் சபாநாயகர்

User1

அழகு நிலையத்திற்கு சென்ற பெண்ணுக்கு ஏற்பட்ட விபரீதம்: தேடுதல் உத்தரவு பிறப்பிப்பு

User1

Leave a Comment