28.4 C
Jaffna
September 19, 2024
இலங்கை செய்திகள்

பல்பொருள் அங்காடியில் திருடி பிடிபட்ட அரச பெண் மருத்துவர்

பல்பொருள் அங்காடி ஒன்றில்  5000 ரூபாய் பெறுமதிக்கொண்ட, உலர் உணவுப் பொருட்களை திருடிய குற்றச்சாட்டில் பெண் மருத்துவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

களனி-கிரிபத்கொட பொலிஸார் இந்த மருத்துவரை கைதுசெய்துள்ளனர். முன்னதாக, குறித்த பல்பொருள் அங்காடியில் இருந்து திருடப்பட்ட பொருட்களுடன் வெளியேற முயன்றபோது, அங்குள்ள பாதுகாப்பு அதிகாரிகளால் மருத்துவர் தடுக்கப்பட்டார்.

இதனையடுத்து அவர் அங்காடியின் நிர்வாகத்திடம் அழைத்துச்செல்லப்பட்டு சோதனையிடப்பட்டபோது, அவரது பையில் இருந்து பணம் செலுத்தப்படாத சொக்லேட்டுகள், ஒரு பால் பவுடர் டின் மற்றும் சொசேஜ் என்பன மீட்கப்பட்டன.

இந்தநிலையில் அவர் ஏற்கனவே மருத்துவமனை நிர்வாகத்திற்கு சொந்தமான பொருட்களை திருடிய குற்றச்சாட்டுக்களும் சுமத்தப்பட்டுள்ளமை விசாரணைகளின்போது தெரியவந்துள்ளது.

குறித்த பெண் மருத்துவர் மஹர நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில் அவரை 200,000 சரீரப்பிணையில் செல்ல நீதிவான் அனுமதித்தார்.

Related posts

மரக்கறிகளின் விலைகளில் ஏற்பட்டுள்ள மாற்றம்

User1

உரிமை மறுப்பை ஏற்றுவாழ இயலாது –  குரலற்றவர்களின் குரல் அமைப்பு.!

sumi

சில பகுதிகளில் சூரியன் உச்சம் கொடுக்கும் !

User1

Leave a Comment