28.4 C
Jaffna
September 19, 2024
இலங்கை செய்திகள்யாழ் செய்திகள்

தேசிய மக்கள் சக்தியின் பிரதிநிதிகள், யாழ் வணிகர் கழகத்தில் சந்திப்பு !

தேசிய மக்கள் சக்தியின் பிரதிநிதிகள், யாழ்ப்பாணம் வணிகர் கழக பிரதிநிதிகளை நேற்று சந்தித்து கலந்துரையாடியிருந்தனர்.

நேற்று பிற்பகல் யாழ் வணிகர் கழகத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றது.

இதன்போது பொருளாதார மற்றும் சுற்றுலாத்துறை அபிவிருத்தி தொடர்பான விடையங்கள் கலந்துரையாடப்பட்டதாக தேசிய மக்கள் சக்தியின் நிறைவேற்று குழு உறுப்பினர் சதுரங்க அபேசிங்க தெரிவித்தார்.

அத்தோடு நடைபெற இருக்கின்ற ஜனாதிபதி தேர்தலில் யாழ்ப்பாணம் வணிகர் கழகம் தமிழ் பொது வேட்பாளருக்கு ஏன்  ஆதரவு வழங்கியுள்ளது என்பது தொடர்பாக தேசிய மக்கள் சக்தியின் பிரதிநிதிகளுக்கு தெளிவுபடுத்தியதாக யாழ்ப்பாண வணிகர் கழக தலைவர் இ.ஜெயசேகரம் தெரிவித்தார்.

குறித்த சந்திப்பில் தேசிய மக்கள் சக்தியின் நிறைவேற்று குழு உறுப்பினர் சதுரங்க அபேசிங்க, பில் தேசிய மக்கள் சக்தியின் பதுளை மாவட்ட செயற்குழு உறுப்பினர் பேராசிரியர் ருவான் ரணசிங்க, யாழ்ப்பாண வணிகர் கழக தலைவர் இ.ஜெயசேகரம், தேசிய மக்கள் சக்தியின் யாழ் மாவட்ட அமைப்பாளர் இராமலிங்கம் சந்திரசேகர் உள்ளிட்ட சிலர் கலந்துகொண்டிருந்தனர்.

Related posts

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு மேலதிக துப்பாக்கி வழங்க நடவடிக்கை

User1

மன்னாரிலும் தூக்கில் தொங்கிய நிலையில் சிறுமி சடலமாக மீட்பு..!

sumi

12 வயது மாணவன் போதைப்பொருள் பாவித்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதி

User1

Leave a Comment