27.9 C
Jaffna
September 16, 2024
இலங்கை செய்திகள்திருகோணமலை செய்திகள்

கிண்ணியாவில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு!

கிண்ணியா பொலிஸ்  பிரிக்குட்பட்ட, ஆலாங்கேணி பிரதேசத்தையும் பைசல் நகர் பிரதேசத்தையும்  இணைக்கின்ற  பாலத்தடியில்  ஆண் ஒருவரின் சடலம்  இன்றிரவு (20) மீட்கப்பட்டதாக பொலிசார் தெரிவித்தனர்.

கிண்ணியா, மஹரூப் நகர், 3 ஆம்  வட்டாரத்தைச் சேர்ந்த ஐந்து பிள்ளைகளின் தந்தையான முஹம்மது லெப்பை  முபாரக் (60 வயது) என்பவரே இவ்வாறு மீட்கப்பட்டவராவார்.

இன்று(20) மாலை 5.00 மணிக்கு  கடைக்கு செல்வதாக மனைவியிடம் கூறிவிட்டு, வந்தவர் என்று ஆரம்ப கட்ட  விசாரணையின் போது தெரிய வந்திருப்பதாகவும், இரவு 7 மணி அளவில்  சடலம் மீட்கப்பட்டதாகவும்  பொலிசார் மேலும் தெரிவித்தனர்.

சடலம் கிண்ணிய வைத்திய சாலையில் வைக்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது 

இச் சம்பவம் தொடர்பாக

மேலதிக விசாரணைகளை  கிண்ணியா போலீஸ்  மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

இலங்கை – கனடா வர்த்தக சம்மேளனமும் யாழ்ப்பாண வணிகர் கழகமும் இணைந்து புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றை கைச்சாத்திட்டுள்ளனர்.

User1

அரியாலை ஸ்ரீ பார்வதி வித்தியாசாலையின் நிறுவுனர் அமரர் ஸ்ரீமான் வி.காசிப்பிள்ளையின் சிலை  திறப்பு விழா..!{படங்கள்}

sumi

62 போலி 5000 ரூபா நாணயத்தாள்களுடன் பெண் ஒருவர் கைது !

User1

Leave a Comment