27.9 C
Jaffna
September 16, 2024
இலங்கை செய்திகள்மட்டக்களப்பு செய்திகள்

ஜனாதிபதி தேர்தலில் தலைமை தெரிவு செய்கின்ற வேட்பாளருக்கு வாக்களிப்போம்

நடைபெறவுள்ள  ஜனாதிபதி தேர்தலில் முக்கியமான மூன்று வேட்பாளர்கள் களமிறங்கி தேர்தல் பிரச்சாரப் பணிகள் ஆரம்பித்துள்ள நிலையில்

தலைமை தெரிவு செய்யும் வேட்பாளருக்கு நாம்  வாக்களிக்க தயாராக உள்ளதாக சம்மாந்துறை நாபீர் பவுண்டேஷன் மகளிர் அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.

நாபீர் பௌண்டேஷன் சம்மாந்துறை மகளிர் அமைப்பினரின் ஒன்று கூடல் நிகழ்வு நேற்று (17) இடம்பெற்றது.

இந்நிகழ்வில் நாபீர்‌ பவுண்டேஷன் மகளிர் அமைப்பின் தலைவி ரஹீமா மற்றும் செயலாளர் அறபா உட்பட சம்மாந்துறையில் உள்ள ஒவ்வொரு பிரிவுக்குமான மகளிர் அமைப்பின் தலைவிகளும் கலந்து  தங்களது கருத்துக்களை தெரிவித்தனர்.

இக் கலந்துரையாடலில் நாபீர் பவுண்டேஷன் ஸ்தாபகர் பொறியியலாளர் கலாநிதி உதுமான்கண்டு நாபீர் அவர்களின்‌ வழிகாட்டல் மற்றும் ஆலோசனையின் கீழ் எந்த வேட்பாளருக்கு வாக்களிக்க வேண்டும் என்ற இறுதி தீர்மானத்தை எடுக்க உள்ளதாகவும் தலைவரின்  தெரிவுக்கு 

மகளிர் அமைப்பினர் வாக்களித்துள்ளதாகவும் மகளிர் அமைப்பினர் தெரிவித்தனர்.

இதன் அடிப்படையில் எதிர்வரும் வெள்ளிக்கிழமை நாபீர் பவுண்டேஷன் இம்முறை ஜனாதிபதி தேர்தலில் களமிறங்கி உள்ள வேட்பாளர்களில் யாரை ஆதரிப்பது என்ற இறுதித் தீர்மானம் அறிவிக்கப்படும் என நாபீர் பவுண்டேஷன் ஸ்தாபகரும் பொறியியலாளருமான கலாநிதி உதுமான்கண்டு நாபீர் அவர்களின் 

மாவட்ட இணைப்பாளர்  பாயிஸ் கரீம் தெரிவித்துள்ளார்.

Related posts

மாணவியின் ஆபாச புகைப்படங்களை பயன்படுத்தி கப்பம் கோரிய காதலன் தொடர்பில் பொலிஸார் விசாரணை

User1

தெற்காசியாவிலேயே அதிக மின்சார கட்டணம் இலங்கையில்

sumi

முருங்கை செய்கையாளர்கள் முருங்கையின் விலை இன்மையால் பாதிப்பு

User1

Leave a Comment