28.4 C
Jaffna
September 19, 2024
இலங்கை செய்திகள்விபத்து செய்திகள்

கோர விபத்து : மாணவர்கள் உட்பட 19 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதி

அனுராதபுரம் – பாதெனிய பிரதான வீதியில் ஸ்ராவஸ்திபுர சந்திக்கு அருகில் சிசு செரிய பேருந்தொன்றுடன் ஆடைத் தொழிற்சாலை ஊழியர்களை ஏற்றிச்சென்ற பேருந்தொன்று மோதி விபத்துக்குள்ளானதில் நான்கு மாணவர்கள் உட்பட 19 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக அனுராதபுரம் பொலிஸார் தெரிவித்தனர் .

ஊழியர்களை ஏற்றிச் சென்ற பேருந்து , ஸ்ராவஸ்திபுர சந்திக்கு அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சிசு செரிய பேருந்தின் பின்புறம் மோதி இவ் விபத்து இடம்பெற்றுள்ளது .

காயமடைந்தவர்கள் அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் ஆடைத் தொழிற்சாலை ஊழியர்களை ஏற்றிச் சென்ற பேருந்தின் சாரதியை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

Related posts

மொட்டுக்கட்சியின் திட்டங்களுக்கு தடையான கோட்டாபயவின் பலவீனம்

User1

இந்திய இலங்கை உறவுக்கு சீனா தடையல்ல.!

sumi

தமிழ் மக்களின் சமூக பிரச்சினைகள் குறித்து ஜனாதிபதி வழங்கியுள்ள உறுதி

User1

Leave a Comment