27.9 C
Jaffna
September 16, 2024
இலங்கை செய்திகள்மலையக செய்திகள்

சொன்னதை சாதித்துக் காட்டிய ஜீவன்!

பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கான நாளாந்த சம்பளமாக 1700 ரூபாவை வழங்கும் தீர்மானம், சம்பள நிர்ணய சபையில் இன்று நிறைவேற்றப்பட்டுள்ளது என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் அரசியல் அமைப்பாளர் ரூபன் பெருமாள் தெரிவித்துள்ளார்.

எதிர்த்தரப்பினரின் பலதரப்பட்ட விமர்சனங்கள், சூழ்ச்சிகள் என்பவற்றைக் கடந்து எமது தோட்டத் தொழிலாளர்களுக்கு நிலையான சம்பளத்தை உறுதி செய்து கொடுத்த இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளரும் கௌரவ அமைச்சருமாகிய ஜீவன் தொண்டமான் அவர்களுக்கும்,

அதிமேதகு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்களுக்கும் எமது இரத்தினபுரி மாவட்ட தோட்டத் தொழிலாளர்கள் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன் என, தமது அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts

தபால் மூல வாக்களிப்புக்கு இன்றும் (11) நாளையும் (12) சந்தர்ப்பம் !

User1

ஆற்றில் நீரடியவர்களிற்கு நேர்ந்த கதி

sumi

தமிழர் பகுதியில் பெரும் சோகம்-இருவர் பலி..!

sumi

Leave a Comment