28.4 C
Jaffna
September 19, 2024
உலக செய்திகள்

காசா பாடசாலை மீது இஸ்ரேல் திடீர் வான் வழித் தாக்குதல்: 60 பேர் பலி

இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையேயான 10 மாத கால யுத்தத்தின் மிக மோசமான தாக்குதல்களில் ஒன்றாக, காசா நகரில்,தங்குமிடமாக மாற்றப்பட்டிருந்த பாடசாலை ஒன்றின் மீது நடத்தப்பட்ட இஸ்ரேலின் தாக்குதல் அமைந்துள்ளது.

குறித்த தாக்குதல் இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளது.

இந்த தாக்குதலில 60ற்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்நிலையில் இந்த தாக்குதலுக்கு இஸ்ரேலிய இராணுவம், பொறுபேற்றுள்ளது.

எனினும் குறித்த பாடசாலையில் அமைக்கப்பட்டிருந்த ஹமாஸின் கட்டளையகம் மீதே தாக்குதல் நடத்தப்பட்டதாக இஸ்ரேல் நியாயப்படுத்தியுள்ளது.

பாலஸ்தீன சுகாதார அதிகாரிகளின் கூற்றுப்படி, போரினால் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற நிர்ப்பந்திக்கப்பட்ட மக்களுக்கு இந்த பாடசாலை தங்குமிடமாக பயன்படுத்தப்பட்டுள்ளது.

ஐக்கிய நாடுகள் சபையின் கூற்றுப்படி, ஜூலை 6 வரை இஸ்ரேலிய தாக்குல்கள் காரணமாக, காசாவில் உள்ள 564 பாடசாலைகளில் 77 பாடசாலைகள் நேரடியாக பாதிக்கப்பட்டுள்ளன.

அத்துடன் காசாவின் போருக்கு முன்னர் வசித்து வந்த 2.3 மில்லியன் மக்கள் தொகையில் 1.9 மில்லியனுக்கும் அதிகமானோர் தங்கள் வீடுகளை விட்டு விரட்டப்பட்டுள்ளனர்.

Related posts

யூடியூப் காணொளிகளை பார்த்து சத்திரசிகிச்சை செய்த நபர் – இறுதியில் நேர்ந்த விபரீதம்

User1

ஜஸ்டின் ட்ரூடோவின் முடிவு: எதிர்ப்பில் ஈடுபட்டுள்ள சர்வதேச மாணவர்கள்

User1

இன்று US காங்கிரஸ் உறுப்பினர்களை பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் சந்தித்துள்ளார்.

sumi

Leave a Comment