28.2 C
Jaffna
September 8, 2024
இலங்கை செய்திகள்

முன்னாள் கடற்படைத்தளபதி சஜித்துடன் இணைவு

இலங்கை கடற்படையின் 14 ஆவது கடற்படைத் தளபதியாக இருந்து ஓய்வு பெற்ற அட்மிரல் டி.டப்.கே.தயா சந்தகிரி எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவை சந்தித்து அரசியல் பயணத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் நோக்கில் ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்து கொண்டார்.

கடல்சார் மற்றும் கடற்படைத் துறையில் அவருக்கு இருக்கும் பரந்த அறிவு மற்றும் அனுபவத்தினை அடிப்படையாகக் கொண்டு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அவரை ஐக்கிய மக்கள் சக்தியின் கடல்சார் மற்றும் கடற்படைக் கொள்கைகள் குறித்த ஆலோசகராக இன்றைய தினம் தினம் நியமித்தார்.
மூன்று தசாப்த கால யுத்தத்தில் அவர் ஆற்றிய தாராளப் பங்களிப்புக் காரணமாக 2001 ஆம் ஆண்டு,ஜனவரி மாதம் 01 ஆம் திகதி முதல் இலங்கைக் கடற்படையின் தளபதியாக நியமிக்கப்பட்டார்.53 வருட கால கடற்படை வரலாற்றில் மிகவும் அனுபவம் வாய்ந்த கடற்படைத் தளபதியாக இவர் வரலாற்றிலும் இடம்பிடித்துள்ளார்.

Related posts

யாழ். மத்திய பஸ் நிலையத்தில் பொலிஸார் திடீர் சோதனைகளை மேற்கொள்ள வேண்டும் – மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் ஆளுநர் தெரிவிப்பு

User1

அதிக அளவான ஹேரோயின் போதை!! யாழ் சாவகச்சேரியில் இளைஞன் மரணம்!!

sumi

37 கோடி ரூபா மதிப்புள்ள மாணிக்கக்கற்களுடன் மூவர் கைது

sumi