28.2 C
Jaffna
September 8, 2024
இலங்கை செய்திகள்

கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழியை அகழ்வதா? பெப்ரவரி 22 இல் நீதிமன்றம் முடிவெடுக்கும்

முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் பகுதியில் இனங்காணப்பட்டிருந்த மனிதப்புதைகுழியை மீண்டும் அகழ்வது தொடர்பான விசாரணை முல்லைத்தீவு நீதிமன்றில் பெப்ரவரி 22 ஆம் திகதி இடம்பெறவுள்ளது.

மார்ச் மாதம் முதலாம் திகதி மீண்டும் அகழ்வுப்பணிகள் ஆரம்பிக்கப்படவிருந்தன. ஆனால் அதற்கான சாதக நிலைகள் உள்ளனவா என்று ஆராய்வதற்காகவும், அகழ்வுக்கான நிதியொதுக்கீடு சரியானவகையில் மேற்கொள்ளப்படுமா என்று பரிசீலிக்கவும் நீதிமன்றம் முடிவு செய்துள்ளது எனத் தெரியவருகின்றது.
இந்த அகழ்வுப்பணிக்கான நிதியை விடுவிப்பதில் சிறிலங்கா அரசாங்கம் மெத்தனப்போக்கை கடைப்பிடிப்பதும், குறித்த மனிதப்புதைகுழி வழக்கை விசாரித்து வந்த நீதிபதி சரவணராஜா உயிர் அச்சுறுத்தல் காரணமாக சிறிலங்காவை விட்டே தப்பித்துச் சென்றமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

பெத்தும் நிஸ்ஸங்க படைத்த சாதனை

sumi

காதலனை சந்திக்க சென்ற 15 வயது மாணவி கூட்டு பாலியல் வன்புணர்வு

sumi

போக்குவரத்து அமைச்சருக்கு அல்வா கொடுத்த அம்பாறை அதிகாரிகள்..!

sumi

Leave a Comment