28.2 C
Jaffna
September 8, 2024
இலங்கை செய்திகள்மட்டக்களப்பு செய்திகள்

காதலனை சந்திக்க சென்ற 15 வயது மாணவி கூட்டு பாலியல் வன்புணர்வு

மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் 15 வயது சிறுமி ஒருவரை அழைத்துச் சென்று கூட்டுப் பாலியல் துஷ்பிரயோகம் மேற்கொண்ட 3 பேர் நேற்று (07) கைது செய்யப்பட்டுள்ளனர்.

சம்பவதினமான நேற்று முன்தினம் (06) 15 வயதும் 7 மாதங்களும் கொண்ட சிறுமியை 26 வயதுடைய நபரொருவர் வீடு ஒன்றிற்கு வரவழைத்துள்ளார்.

பின்னர், குறித்த நபரின் நண்பர்கள் இருவர் உட்பட 3 பேர் சிறுமியை துஷ்பிரயோகம் செய்துள்ளனர்.

இதனையடுத்து, சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்ட சிறுமி அவரது பெற்றோருக்கு தெரியப்படுத்தியுள்ளார்.

பின்னர், பொலிஸில் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டுக்கு அமைய சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவத்தில் 26 மற்றும் 32 வயதுக்கிடைப்பட்ட மூவரே கைது செய்யப்பட்டுள்ளனர்.

பாதிக்கப்பட்ட சிறுமி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் விசாரணைகளின் பின்னர் சந்தேகநபர்களை நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

Related posts

யாழில் சட்டவிரோதமாக மணல் ஏற்றிவந்த 5 டிப்பர்கள் மடக்கி பிடிப்பு – ஐவர் கைது

User1

அம்பாறையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் 2 பெண்கள், ஒரு பொலிஸார் கொல்லப்பட்டனர்

Nila

தமிழ்ப் பொதுவேட்பாளர் பா.அரியநேத்திரனுக்கு திருகோணமலை மாவட்டத்தில் சிறப்பான வரவேற்பு

User1

Leave a Comment