ரஷ்யத் தலைநகர் மொஸ்கோவை இலக்கு வைத்து உக்ரைன் வரலாற்றிலேயே மிகப்பாரிய ஆளில்லா வானூர்தி தாக்குதலை நடத்தியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இத்தாக்குதலின் போது மொஸ்கோவிலுள்ள முக்கிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் ஒன்று இலக்கு வைக்கப்பட்டுள்ளதுடன், நகரின் நான்கு பிரதான வானூர்தி நிலையங்களின் செயற்பாடுகளும் தற்காலிகமாக முடக்கப்பட்டுள்ளன.
ரஷ்ய வான் பாதுகாப்புப் படையினரால் நாடு முழுவதும் ஏவப்பட்ட 550 க்கும் மேற்பட்ட உக்ரைனிய ஆளில்லா வானூர்திகள் வழிமறித்து அழிக்கப்பட்டுள்ளதாக ரஷ்ய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இவற்றில் குறைந்தது 194 ஆளில்லா வானூர்திகள் மொஸ்கோ நகரை நோக்கியே ஏவப்பட்டிருந்ததாகக் குறிப்பிட்ட அவர்கள், இத்தாக்குதல்களினால் சிலர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
Related Posts
இங்கிலாந்தின் முக்கிய இடைத்தேர்தலில் ஆண்டி பர்ன்ஹாம் வெற்றி!
வடக்கு இங்கிலாந்தில் நடைபெற்ற மிக முக்கியமான இடைத்தேர்தலில் கிரேட்டர் மான்செஸ்டர் மேயர் ஆண்டி பர்ன்ஹாம் (Andy Burnham ) எளிதாக வெற்றி பெற்றுள்ளார். இதன் மூலம், தொழிற்கட்சி மற்றும்...
அமெரிக்க – ஈரான் பேச்சுவார்த்தைகள் இரத்து!
சுவிட்சர்லாந்தின் பர்கென்ஸ்டாக் (Burgenstock) மலைப்பகுதி விடுதியில் வெள்ளிக்கிழமையன்று (19) நடைபெறவிருந்த அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான பேச்சுவார்த்தைகள் நடைபெறாது என்று சுவிஸ் வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.போரை முடிவுக்குக்...
மேற்குக்கரையில் மசூதிகள் தீக்கிரை – இஸ்ரேலுக்கு எதிராக குரல் கொடுக்கும் 8 இஸ்லாமிய நாடுகள்!
ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக்கரையில் (West Bank) உள்ள இரண்டு மசூதிகள் மீது நடத்தப்பட்ட தீவைப்புத் தாக்குதல்களுக்கு இஸ்ரேல் நாடே பொறுப்பேற்க வேண்டும் என்று எட்டு இஸ்லாமிய பெரும்பான்மை நாடுகள்...
ஈரானுக்கு எதிரான தனது கடற்படை முற்றுகையை நீக்கியது அமெரிக்கா!
மத்திய கிழக்கில் போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான உடன்படிக்கையொன்றில் இரு நாடுகளும் கையெழுத்திட்டதைத் தொடர்ந்து, ஈரானுக்கு எதிரான தனது கடற்படை முற்றுகையை அமெரிக்கா நீக்கியுள்ளது."ஜனாதிபதியின் உத்தரவுக்கு இணங்க"...
சர்வதேச வணிகக் கப்பல்களுக்கு ஈரானின் அதிரடி சலுகை!
ஈரானின் ஹோர்முஸ் நீரிணை (Strait of Hormuz) வழியாகச் செல்ல விரும்பும் வணிகக் கப்பல்களுக்கு மிக விரைவாகப் பயண அனுமதிகளை வழங்குமாறு 'பெர்சிய வளைகுடா நீரிணை அதிகாரசபைக்கு'...
அமெரிக்காவை இஸ்ரேல் விமர்சிப்பது கண்டிக்கத்தக்கது!
அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையே இந்த வாரம் எட்டப்பட்ட அமைதி ஒப்பந்தத்தை இஸ்ரேல் விமர்சித்து வரும் நிலையில், அமெரிக்கத் துணை ஜனாதிபதி ஜே.டி. வான்ஸ் (JD...
ஈரானிடம் அணு ஆயுதம் இருக்கவே கூடாது! – ட்ரம்ப் திட்டவட்டம்
ஈரானிடம் அணு ஆயுதம் இருக்கவே கூடாது எனவும், அணு ஆயுதம் இல்லாத அந்த உலகமே பாதுகாப்பானது எனவும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.தனது சமூக...
அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் இந்தியாவிற்கு விஜயம் செய்யவுள்ளதாக அறிவிப்பு!
பிரான்சில் இடம்பெற்ற ஜி7 (G7) உச்சிமாநாட்டின் போது நடைபெற்ற இருதரப்புச் சந்திப்பில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் இந்தியாவுக்குப் பயணம் மேற்கொள்வதாக உறுதியளித்தார்.இது இரு நாடுகளுக்கும் இடையிலான...
அமெரிக்காவுடன் ஒப்பந்தம் எட்டப்பட்டாலும் ஹார்முஸ் நீரிணையின் கட்டுப்பாடு ஈரானிடம் மட்டுமே இருக்கும்!
அமெரிக்கா மற்றும் ஈரானுக்கு இடையில் அறுபது நாள் போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ள பின்னணியில், ஹார்முஸ் நீரிணை போருக்கு முந்தைய நிலைக்குத் திரும்பாது என ஈரான் நாடாளுமன்ற...
ஈரானுடனான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்!
மேற்கு ஆசியாவில் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக ஈரானுடன் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டுள்ளார் என்று செய்திகள் வௌியாகியுள்ளன. பிரான்ஸ் ஜனாதிபதி உடனான இரவு...










