• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Tuesday, June 23, 2026
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home இலங்கை செய்திகள்.

கடந்த 1998 இல் மீட்கப்பட்ட செம்மணி மனித எச்சங்கள் இன்னமும் ஸ்கொட்லாந்தில் பத்திரமாக உள்ளன.!

Mathavi by Mathavi
June 18, 2026
in இலங்கை செய்திகள்.
0
கடந்த 1998 இல் மீட்கப்பட்ட செம்மணி மனித எச்சங்கள் இன்னமும் ஸ்கொட்லாந்தில் பத்திரமாக உள்ளன.!
Share on FacebookShare on Twitter

கடந்த 1998ஆம் ஆண்டு காலப்பகுதியில் செம்மணி மனிதப் புதைகுழியிலிருந்து அகழ்ந்து எடுக்கப்பட்ட மனித எச்சங்கள் தற்போதும் ஸ்கொட்லாந்து பல்கலைக்கழகத்தில் பாதுகாப்பாக உள்ளன என்றும், இலங்கை அரசு நினைத்தால் உடனடியாகக் கடிதம் மூலம் கோரிக்கை விடுத்து மீண்டும் அங்கு டி.என்.ஏ. பரிசோதனைகளை ஆரம்பிக்க முடியும் என்றும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

மேலும், இப்பரிசோதனை நடவடிக்கைகளை நோர்வே அரசு பொறுப்பேற்று நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை, நோர்வே வெளிவிவகார அமைச்சின் தெற்காசிய அலுவலகப் பொறுப்பாளருடனான சந்திப்பில் தான் முன்வைக்கவுள்ளார் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

செம்மணி மனிதப் புதைகுழி விவகாரம் தொடர்பாக ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவித்ததாவது,
“செம்மணி மனிதப் புதைகுழியிலிருந்து இதுவரை 380 இற்கும் மேற்பட்ட மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இதன் மூலம், இலங்கையில் இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட மனிதப் புதைகுழிகளிலேயே மிகப்பாரிய தளமாகச் செம்மணி மாறியுள்ளது. இந்தப் புதைகுழியில் அடையாளம் காணப்பட்ட மனித என்புத் தொகுதிகளை வெறுமனே அகழ்ந்து எடுப்பதோடு நிறுத்திவிடக் கூடாது. அதற்கடுத்த கட்ட நகர்வுகளை நோக்கிச் செல்ல வேண்டும். அவ்வாறு செய்யாவிட்டால் இந்த அகழ்வாராய்ச்சியால் எந்தப் பிரயோசனமும் இல்லாமல் போய்விடும்.

அகழ்ந்து எடுக்கப்படும் என்புத் தொகுதிகளை முழுமையாக அடையாளம் காணும் செயல்முறையைத் தனித்து மேற்கொள்வதற்கு, இலங்கையில் தற்போது தேவையான மருத்துவ மற்றும் தொழில்நுட்பத் திறன்கள் போதுமான அளவில் இல்லை என்பதை நாம் ஒப்புக்கொள்ள வேண்டும்.

எதிர்வரும் 19ஆம் திகதி வெள்ளிக்கிழமை நோர்வே வெளிவிவகார அமைச்சின் தெற்காசிய அலுவலகத்துக்குப் பொறுப்பான உயர் அதிகாரியுடன் நான் முக்கிய சந்திப்பொன்றை மேற்கொள்ளவுள்ளேன். இந்தச் சந்திப்பின் போது செம்மணி விவகாரம் குறித்தே பிரதானமாகப் பேசவுள்ளேன்.

சர்வதேசத் தரநிலைகளுக்கு ஏற்ப நம்பகமான, வெளிப்படையான மற்றும் சுயாதீனமான விசாரணையை உறுதிப்படுத்துவதற்காக, சர்வதேச நிபுணத்துவத்தையும் தொழில்நுட்ப உதவியையும் இலங்கை அரசு நாட வேண்டியதன் அவசியத்தை அவரிடம் எடுத்துக்கூறவுள்ளேன்.

செம்மணி மனிதப் புதைகுழி தளம் வரலாற்று ரீதியாக மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தபோதிலும், பாதிக்கப்பட்டவர்களின் அடையாளங்களை உறுதிப்படுத்தவோ, மரணம் நிகழ்ந்த சூழ்நிலைகளைக் கண்டறியவோ அதிகாரிகள் இதுவரை முறையான அக்கறை காட்டவில்லை. நீண்டகாலமாகத் தங்களின் உறவினர்களைத் தேடி, நீதிக்காகக் காத்துக்கொண்டிருக்கும் குடும்பங்களுக்குப் பதிலளிக்கத் தேவையான சர்வதேச ஒத்துழைப்பைப் பெறுவதற்கு, இலங்கை அதிகாரிகள் தயாராகவுள்ளனர் என்பதற்கான தெளிவான அறிகுறிகள் எதுவும் இதுவரை தென்படவில்லை என்பதையும் நோர்வே பிரதிநிதியிடம் சுட்டிக்காட்டுவேன்.

1998இல் செம்மணியிலிருந்து மீட்கப்பட்ட மனித எச்சங்கள் இன்னமும் ஸ்கொட்லாந்து பல்கலைக்கழகத்தில் உள்ளன. இலங்கை அரசு நினைத்தால் நாளைய தினம்கூட அதிகாரபூர்வக் கடிதம் மூலம் மீண்டும் டி.என்.ஏ. பரிசோதனையை ஆரம்பிக்க முடியும். இந்த ஒட்டுமொத்தப் பரிசோதனைச் செயல்முறையையும் நோர்வே அரசு முன்னின்று பொறுப்பேற்று நடத்த வேண்டும் என்ற கோரிக்கையையும் நான் வலுவாக முன்வைக்கவுள்ளேன்.” – என்றார்.

Related Posts

சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிய வடை தயாரிப்பு நிலையம் மூடல்.!

சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிய வடை தயாரிப்பு நிலையம் மூடல்.!

by Mathavi
June 23, 2026
0

மன்னார், பள்ளிமுனை பிரதான வீதியில் இயங்கி வந்த வடை தயாரிப்பு நிலையம் ஒன்று, சுகாதார அதிகாரிகளால் இன்று (23) மேற்கொள்ளப்பட்ட திடீர் ஆய்வின்போது சுகாதார சீர்கேடுகள் உடன்...

ஈஸ்டர் தாக்குதலுடன் தொடர்புடைய ஜே.வி.பியின் தேசிய பட்டியல் உறுப்பினரை பாதுகாக்கவே அரசு முயற்சி.!

ஈஸ்டர் தாக்குதலுடன் தொடர்புடைய ஜே.வி.பியின் தேசிய பட்டியல் உறுப்பினரை பாதுகாக்கவே அரசு முயற்சி.!

by Mathavi
June 23, 2026
0

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்களுடன் தொடர்புடையதாகக் குற்றம் சாட்டப்படும் இப்ராஹிம் என்பவரைப் பாதுகாப்பதற்கே தற்போதைய அரசு தீவிரமாக முயற்சித்து வருகின்றது என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய...

தேர்தல்களின் போது அழியாத மை பயன்படுத்துவதை நீக்க அமைச்சரவை அனுமதி.!

தேர்தல்களின் போது அழியாத மை பயன்படுத்துவதை நீக்க அமைச்சரவை அனுமதி.!

by Mathavi
June 23, 2026
0

இலங்கையில் நடைபெறும் தேர்தல்களின் போது வாக்காளர்களின் விரல்களில் அழியாத மை பயன்படுத்துவதற்கான சட்டப்பூர்வ தேவையை நீக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. ஜனாதிபதியால் சமர்ப்பிக்கப்பட்ட முன்மொழிவைத் தொடர்ந்து இந்த...

உயிரைப் பணயம் வைத்து தகவல் வழங்குநர்களை பாதுகாக்கின்றார் சுரேஷ் சலே.!

உயிரைப் பணயம் வைத்து தகவல் வழங்குநர்களை பாதுகாக்கின்றார் சுரேஷ் சலே.!

by Mathavi
June 23, 2026
0

முன்னாள் அரச புலனாய்வுப் பிரிவு பிரதானி சுரேஷ் சலே, நாட்டின் மிகச்சிறந்த மற்றும் தனித்துவமான ஒரு புலனாய்வு அதிகாரி என்பதைத் தனது அர்ப்பணிப்பான செயல்களின் மூலம் மீண்டும்...

பெண் ஒருவர் மீது துப்பாக்கிச் சூடு.!

பெண் ஒருவர் மீது துப்பாக்கிச் சூடு.!

by Mathavi
June 23, 2026
0

குருநாகல், வெல்லவ பகுதியில் இன்று (23) காலை 6.45 மணியளவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் 46 வயதுடைய பெண்ணொருவர் படுகாயமடைந்துள்ளார். காயமடைந்த பெண் உடனடியாக குருநாகல்...

நாடாளுமன்றத்தில் பெரும் போர்க்களம்; செங்கோலைக் கைப்பற்ற எதிர்க்கட்சி முயற்சி.!

நாடாளுமன்றத்தில் பெரும் போர்க்களம்; செங்கோலைக் கைப்பற்ற எதிர்க்கட்சி முயற்சி.!

by Mathavi
June 23, 2026
0

இலங்கை நாடாளுமன்றத்தில் இன்று ஆளும்கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு இடையே ஏற்பட்ட கடுமையான வாக்குவாதம், கூச்சல் குழப்பம் மற்றும் தள்ளுமுள்ளு காரணமாக சபை நடவடிக்கைகள் சபாநாயகரால் 10...

கரும்பு தொழிற்சாலையின் செயற்பாடுகளை பார்வையிட்ட ஆளுநர்.!

கரும்பு தொழிற்சாலையின் செயற்பாடுகளை பார்வையிட்ட ஆளுநர்.!

by Mathavi
June 23, 2026
0

கிளிநொச்சி ஆனைவிழுந்தான் குளம் கரும்பு உற்பத்தியாளர் கூட்டுறவுச் சங்க கரும்பு தொழிற்சாலையின் செயற்பாடுகளை வடமாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன் இன்று காலை பார்வையிட்டார். வடமாகாண ஆளுநரோடு மாவட்ட...

யானை தாக்கி இளைஞன் உயிரிழப்பு.!

யானை தாக்கி இளைஞன் உயிரிழப்பு.!

by Mathavi
June 23, 2026
0

முல்லைத்தீவில் வயலுக்கு காவலுக்குச் சென்ற இளைஞன் யானை தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்த சம்பவம் ஒன்று இன்று (23) செவ்வாய்க்கிழமை அதிகாலை இடம்பெற்றுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பாக மேலும்...

கஜமுத்துக்களுடன் மூவர் கைது.!

கஜமுத்துக்களுடன் மூவர் கைது.!

by Mathavi
June 23, 2026
0

இரண்டு கோடி ரூபாய்க்கு விற்பனை செய்யத் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்ததாகக் கூறப்படும் 4 கஜமுத்துக்களுடன் 3 சந்தேக நபர்கள் அராவ, கரந்தகஹமட பகுதியில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்....

சட்டவிரோத மதுபானத்துடன் ஒருவர் கைது.!

போதைப்பொருளுடன் ஒருவர் கைது.!

by Mathavi
June 23, 2026
0

கல்கிஸ்ஸ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கட்டுபெத்த பகுதியில் 11 கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மொரட்டுவெல்ல பகுதியைச் சேர்ந்த 32 வயதுடைய நபர் ஒருவரே...

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Thinakaran

உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

www.thinakaran.com

© 2024 Thinakaran.com

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி