• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Saturday, June 6, 2026
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home இந்திய செய்திகள்

டெல்லியில் உணவகம் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்து மின் கசிவினால் ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகம்!

selvan by selvan
June 5, 2026
in இந்திய செய்திகள்
0
டெல்லியில் உணவகம் ஒன்றில் தீ விபத்து – 21 பேர் உயிரிழப்பு!
Share on FacebookShare on Twitter

டெல்லியின் மால்வியா (Malviya) நகர் ஹோட்டலில் நேற்றைய (03) தினம் ஏற்பட்ட பெரும் தீ விபத்து குறித்த விசாரணையில், மின்கசிவு காரணமாகவே இந்த அனர்த்தம் ஏற்பட்டிருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இந்தச் சம்பவத்தை விசாரித்து வரும் புலனாய்வாளர்கள், தீ விபத்திற்கான காரணம் சமையல் எரிவாயு சிலிண்டர் வெடிப்பு அல்ல என்பதையும் தெளிவுபடுத்தியுள்ளனர். 

அந்த ஹொட்டலில் கட்டிடத்தின் அடித்தளத்திலும், மேல் தளத்திலும் இரண்டு தனித்தனி சமையலறைகள் இருந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

இரண்டு சமையலறைகளிலும் பல எரியாவு சிலிண்டர்கள் வைக்கப்பட்டிருந்தன, ஆனால் ஆரம்பகட்ட ஆய்வுகளில் சிலிண்டர் வெடித்ததற்கான எந்த ஆதாரமும் கண்டறியப்படவில்லை என்றும் அதிகாரிகள் தெளிவுபடுத்தினர்.

இந்த நிலையில், தீயின் தன்மை மற்றும் தீவிரத்தைக் கொண்டு பார்க்கையில், அது கட்டிடத்தின் உள் மின் வயரிங் அமைப்பில் ஏற்பட்ட மின் கோளாறால் தோன்றியிருக்கலாம் என்று பொலிஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.

எவ்வாறெனினும், தடயவியல் குழு ஒன்று ஏற்கனவே கட்டிடத்தை ஆய்வு செய்து, அந்த இடத்திலிருந்து மாதிரிகளைச் சேகரித்துள்ளது. 

தீ விபத்துக்கு வழிவகுத்த நிகழ்வுகளின் சரியான காரணத்தை தீர்மானிப்பதற்காக, நிபுணர்கள் மின் அமைப்புகளையும், தீ பற்றிக்கொள்ள வாய்ப்புள்ள பிற மூலங்களையும் ஆய்வு செய்து வருகின்றனர்.

விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும், இறுதி முடிவுகளின் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

மால்வியா நகர் ஹோட்டல் தீ விபத்தில் உயிரிழந்த 21 பேரில், ஆறு பேர் வெளிநாட்டினர் மற்றும் ஒன்பது பேர் இந்தியக் குடிமக்கள் என அதிகாரிகள் தெரிவித்தனர். 

மீதமுள்ள ஆறு பேரின் அடையாளங்கள் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை. 

அதிகாரிகள், உயிரிழந்தவர்களை அடையாளம் காணும் முயற்சிகளைத் தொடர்வதோடு, இந்தத் துயரச் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்குத் தகவல் தெரிவிக்கும் பணியிலும் ஈடுபட்டுள்ளனர்.

Related Posts

தேசிய கட்சிகள் தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளை புரிந்துக் கொள்வதில்லை!

தேசிய கட்சிகள் தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளை புரிந்துக் கொள்வதில்லை!

by selvan
June 5, 2026
0

தேசிய கட்சிகள் தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளை புரிந்துக் கொள்வதில்லை பாரதிய ஜனதாக் கட்சியின் தமிழக முன்னாள் தலைவர் கே.அண்ணாமலை தெரிவித்துள்ளார். பாரதிய ஜனதாக் கட்சியின் தமிழக முன்னாள்...

பா.ஜ.க.விலிருந்து விலகினார் கே. அண்ணாமலை!

பா.ஜ.க.விலிருந்து விலகினார் கே. அண்ணாமலை!

by selvan
June 5, 2026
0

பாரதிய ஜனதாக் கட்சியின் தமிழக முன்னாள் தலைவர் கே.அண்ணாமலை கட்சியிலிருந்து விலகியுள்ளார்.  கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து அண்ணாமலை இராஜினாமா செய்ததை பாஜகவின் தேசியத் தலைவர் நிதின்...

தமிழ்நாட்டிற்கான நிதி  குறைக்கப்பட்டதற்கு அன்புமணி ராமதாஸ் கண்டனம்!

தமிழ்நாட்டிற்கான நிதி குறைக்கப்பட்டதற்கு அன்புமணி ராமதாஸ் கண்டனம்!

by selvan
June 4, 2026
0

125 நாள் வேலைத்திட்டத்தில் தமிழ்நாட்டிற்கான நிதி 4.1% ஆக குறைக்கப்பட்டதற்கு அன்புமணி ராமதாஸ் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டின் உரிமைகளை பறிக்கும் வகையிலான முடிவை தமிழக அரசு ஏற்கக்கூடாது...

கர்நாடக மாநிலத்தின் புதிய முதல்வருக்கு தமிழக முதல்வர் விஜய் வாழ்த்து

கர்நாடக மாநிலத்தின் புதிய முதல்வருக்கு தமிழக முதல்வர் விஜய் வாழ்த்து

by selvan
June 4, 2026
0

கர்நாடக மாநிலத்தின் புதிய முதல்வராக பொறுப்பேற்றுள்ள டி.கே.சிவகுமாருக்கு, தமிழக முதல்வர் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து முதல்வர் விஜய் நேற்று வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில் கர்நாடக...

பீகார் மருத்துவமனையில் தீ விபத்து – மூவர் உயிரிழப்பு!

பீகார் மருத்துவமனையில் தீ விபத்து – மூவர் உயிரிழப்பு!

by selvan
June 4, 2026
0

வட பீகாரில் உள்ள முசாஃபர்பூரின் பிரம்மபுரா பகுதியில் அமைந்துள்ள வைத்தியசாலை ஒன்றின் தீவிர சிகிச்சைப் பிரிவில் (ICU) இன்று (04) அதிகாலை ஏற்பட்ட பெரும் தீ விபத்தில்...

டெல்லியில் உணவகம் ஒன்றில் தீ விபத்து – 21 பேர் உயிரிழப்பு!

டெல்லியில் உணவகம் ஒன்றில் தீ விபத்து – 21 பேர் உயிரிழப்பு!

by selvan
June 3, 2026
0

இந்திய தலைநகர் டெல்லியில் உள்ள உணவகம் ஒன்றில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் 21 பேர் உயிரிழந்தனர். மேலும் சிலர் படுகாயம் அடைந்து சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். டெல்லியின்...

நேபாளத்துடனான எல்லைப் பிரச்சினையைத் தீர்ப்பதில் மூன்றாம் தரப்பினருக்கு இடமில்லை – இந்தியா  திட்டவட்டம்!

நேபாளத்துடனான எல்லைப் பிரச்சினையைத் தீர்ப்பதில் மூன்றாம் தரப்பினருக்கு இடமில்லை – இந்தியா திட்டவட்டம்!

by selvan
June 3, 2026
0

நேபாளத்துடனான தனது எல்லைப் பிரச்சினையைத் தீர்ப்பதில் மூன்றாம் தரப்பினருக்கு எந்தப் பங்கும் இல்லை என இந்தியா திட்டவட்டமாக அறிவித்துள்ளது. எல்லைப் பிரச்சினைகளைத் தீர்ப்பதில் சீனா மற்றும் ஐக்கிய...

இந்தியாவில் விசா விதிமுறைகளில் மாற்றம்!

இந்தியாவில் விசா விதிமுறைகளில் மாற்றம்!

by selvan
June 3, 2026
0

இந்தியாவில் குடியேற்றம் மற்றும் வெளிநாட்டவர் விதிகளில் மத்திய அரசு புதிய மாற்றங்களைக் கொண்டுவந்துள்ளது. இதன்படி, 180 நாள் விசா திட்டத்தின்கீழ் இந்தியா செல்லும் வெளிநாட்டவர்கள், தங்களின் விசா...

இந்தியாவில் 84 வயது முதியவருக்கு சிறை!

இந்தியாவில் 84 வயது முதியவருக்கு சிறை!

by selvan
June 3, 2026
0

இந்தியாவின் பீகார் மாநிலத்தின் வைஷாலி மாவட்டத்தில், 34 ஆண்டுகளுக்கு முன்னர் நடைபெற்ற கொலை முயற்சி வழக்கு ஒன்றில், 84 வயது முதியவர் உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த...

இந்​தி​யா​வின் அதிநவீன பிரம்மோஸ் சூப்​பர்​சோனிக் குரூஸ் ஏவுகணைகளை வாங்க இந்தோனேசியா இணக்கம்

இந்​தி​யா​வின் அதிநவீன பிரம்மோஸ் சூப்​பர்​சோனிக் குரூஸ் ஏவுகணைகளை வாங்க இந்தோனேசியா இணக்கம்

by selvan
June 2, 2026
0

வியட்​நாமை தொடர்ந்​து, இந்தோனேசியா​வுக்​கும் இந்​தி​யா​வின் அதிநவீன பிரம்மோஸ் சூப்​பர்​சோனிக் குரூஸ் ஏவுகணைகளை ஏற்றுமதி செய்​வதற்​கான ஒப்​பந்​தம் இறு​திக்​கட்​டத்தை எட்டியுள்ளதாக மத்​திய பாது​காப்​புத் துறைச் செயலர் ராஜேஷ் குமார்...

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Thinakaran

உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

www.thinakaran.com

© 2024 Thinakaran.com

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி