தேசிய இளைஞர் விளையாட்டுப் போட்டிகளை முன்னிட்டு யாழ்ப்பாண மாவட்ட இளைஞர் கழகங்களுக்கு இடையிலான கடற்கரை கரப்பந்து (Beach Volleyball) போட்டிகள் அண்மையில் வல்வெட்டித்துறை உதயசூரியன் கடற்கரையில் மிகவும் உற்சாகமாக நடைபெற்றது.
யாழ். மாவட்டத்தின் பல்வேறு பிரதேச செயலகப் பிரிவுகளைச் சேர்ந்த சிறந்த அணிகள் மோதிய இந்தப் போட்டியில், வீர வீராங்கனைகளின் திறமைகள் வெளிப்படுத்தப்பட்டன.
பெண்கள் பிரிவு முடிவுகள் பெண்கள் பிரிவிற்கான இறுதிப் போட்டியில் மிகச்சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்திய கரவெட்டி பிரதேச இளைஞர் அணி முதலாம் இடத்தைப் பிடித்து சம்பியன் பட்டத்தை வென்றது. இவர்களுக்கு ஈடுகொடுத்து விளையாடிய பருத்தித்துறை பிரதேச இளைஞர் அணி இரண்டாம் இடத்தைப் பெற்றுக்கொண்டது.
ஆண்கள் பிரிவு முடிவுகள் ஆண்கள் பிரிவில் நடைபெற்ற விறுவிறுப்பான ஆட்டத்தில் கோப்பாய் பிரதேச இளைஞர் அணி முதலாம் இடத்தைப் பெற்று வெற்றி வாகை சூடியது. இப்போட்டியில் பலப்பரீட்சை நடத்திய பருத்தித்துறை பிரதேச இளைஞர் அணி இரண்டாம் இடத்தைப் பெற்றுக்கொண்டது.
வெற்றி பெற்ற அணிகள் அடுத்ததாக நடைபெறவுள்ள தேசிய மட்டப் போட்டிகளில் யாழ். மாவட்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி பங்குபற்றவுள்ளமை குறிப்பிடத்தக்கது.











