உக்ரேனுக்கு எதிராக ரஷ்யாவுக்காகப் போரிட்டதில் சுமார் 2,300 வட கொரிய வீரர்கள் உயிரிழந்துள்ளதாக வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
பியோங்யாங்கில் உள்ள ஒரு புதிய நினைவிடத்தின் செயற்கைக்கோள் படங்கள் மற்றும் அதிகாரப்பூர்வ புகைப்படங்களை அடிப்படையாகக் கொண்ட பிபிசி நடத்திய விசாரணையின் அடிப்படையில் இந்த விடயம் தெரியவந்துள்ளது.
2024 ஆகஸ்ட் மாதம் உக்ரேன் குர்ஸ்க் மீது திடீர் ஊடுருவலை நடத்தியதைத் தொடர்ந்து, மேற்கு குர்ஸ்கின் சில பகுதிகளை மீண்டும் கைப்பற்ற உதவுவதற்காக குறைந்தது 11,000 வட கொரியர்கள் ரஷ்யாவிற்கு அனுப்பப்பட்டதாக தென் கொரியா மதிப்பிடுகிறது.
வட கொரியத் தலைவர் கிம் ஜோங் உன், போரில் உயிரிழந்த வீரர்களுக்கு முன்னதாகப் பகிரங்கமாக அஞ்சலி செலுத்தியுள்ளார். மேலும், வீரர்களை வழங்கியதற்குப் பதிலாக, பியோங்யாங் மொஸ்கோவிடமிருந்து உணவு, பணம் மற்றும் தொழில்நுட்ப உதவியைப் பெற்றதாக நம்பப்படுகிறது.
ரஷ்யா முழுமையாக மீட்டுவிட்டதாகக் கூறும் குர்ஸ்க் நடவடிக்கையில் ஏற்பட்ட உயிரிழப்புகளின் எண்ணிக்கையை அந்த இரகசிய ஆட்சி ஒருபோதும் வெளியிடவில்லை – ஆனால் முதல் முறையாக, ஒரு புதிய நினைவிடம் கண்கூடாகத் தெரியும் தடயங்களை வழங்குகிறது.
அவை நமக்கு என்ன சொல்கின்றன என்பது இங்கே. சுவர்களில் பெயர்கள் , 2025 ஒக்டோபரில், ரஷ்யா-உக்ரேன் போரில் கொல்லப்பட்ட வீரர்களைக் கௌரவிக்கும் வகையில், பியோங்யாங்கின் ஹ்வாசோங் மாவட்டத்தில் ஒரு அருங்காட்சியகம் கட்டுமாறு வட கொரியத் தலைவர் கிம் ஜோங் உன் உத்தரவிட்டார்.
அமெரிக்காவைச் சேர்ந்த ஒரு செயற்கைக்கோள் பூமி-படமெடுப்பு நிறுவனமான பிளானட் லேப்ஸ் வழங்கிய செயற்கைக்கோள் படங்களை பிபிசி ஆய்வு செய்ததன் படி, அதே மாதத்திற்குள் அடர்ந்த வனப்பகுதி ஒன்றில் பணிகள் தொடங்கின.










