1989
புளொட் அமைப்பின் தலைவர் உமாமகேஸ்வரன் கொழும்பில் சுட்டுக் கொல்லப்பட்டார்.
1995
காங்கேசன்துறையில் விடுதலைப் புலிகளால் இலங்கை கடற்படையின் எடித்தாரா கப்பல் மூழ்கடிக்கப்பட்டது.
1809
லா பாஸ் (இன்றைய பொலிவியாவில்) எஸ்ப்பானிய முடியாட்சியில் இருந்து விடுதலையை அறிவித்தது. எஸ்ப்பானிய அமெரிக்காவின் முதலாவது தனிநாடு பெதுரோ டொமிங்கோ முரில்லோ தலைமையில் அமைக்கப்பட்டது.
1849
காத்தலோனியாவில் அந்தோனி மரிய கிளாரட் அமல மரியின் மறைப்போத மைந்தர்கள் சபையை (இன்றைய கிளரீசியன் அமைப்பு) நிறுவினார்.
1861
அமெரிக்க உள்நாட்டுப் போர்: அரசுத்தலைவர் ஆபிரகாம் லிங்கனின் உத்தரவின் பேரில், அமெரிக்க ஒன்றியப் படைகள் வர்ஜீனியாவினுள் 25 மைல்கள் தூரம் அணிவகுத்துச் சென்றன.
1931
எத்தியோப்பியாவின் முதலாவது அரசியலமைப்பை அதன் மன்னர் முதலாம் ஹைலி செலாசி வெளியிட்டார்.
1942
பெரும் இன அழிப்பு: பிரெஞ்சு அரசு பாரிசில் உள்ள அனைத்து 13,152 யூதர்களையும் கைது செய்து அவுசுவிட்சு வதை முகாமுக்கு அனுப்பக் காவற்துறையினருக்கு உத்தரவிட்டது.
1945
மன்காட்டன் திட்டம்: ஐக்கிய அமெரிக்கா புளுட்டோனியம் கொண்ட அணுக்கரு ஆயுதங்களை நியூ மெக்சிகோ, அலமொகோர்தோ என்ற இடத்தில் வெற்றிகரமாக சோதித்தது.
1948
அரபு – இஸ்ரேல் போர்: இயேசு கிறிஸ்து வாழ்ந்த நாசரேத்து நகரத்தை இஸ்ரேல் ஆக்கிரமித்தது.
1950
உலகக்கிண்ண உதைப்பந்தாட்ட இறுதிப் போட்டியில் உருகுவே பிரேசிலை 2-1 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.
1950
கொரியப் போர்: அமெரிக்கப் போர்க் கைதிகள் 31 பேர் வட கொரிய இராணுவத்தினரால் கொல்லப்பட்டனர்.
1951
பெல்ஜியம் மன்னர் மூன்றாம் லியோபோல்ட் முடிதுறந்ததை அடுத்து, அவரது மகன் முதலாம் பாடோயின் புதிய மன்னராகப் பதவியேற்றார்.
1965
பிரான்சையும் இத்தாலியையும் இணைக்கும் மோண்ட் பிளாங்க் சுரங்கப் பாதை திறக்கப்பட்டது.
1969
அப்பல்லோ திட்டம்: அப்பல்லோ 11, நிலாவில் தரையிறங்க முதலாவது மனிதரை ஏற்றிக் கொண்டு கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து புறப்பட்டது.
1979
ஈராக்கிய அரசுத்தலைவர் அசன் அல்-பாக்கிர் பதவி துறந்ததை அடுத்து சதாம் உசேன் தலைவரானார்.
1983
சில்லி தீவுகளில் பிரித்தானியாவின் உலங்குவானூர்தி வீழ்ந்து விபத்துக்குள்ளாகியதில் 20 பேர் உயிரிழந்தனர்.
1990
பிலிப்பைன்சில் 7.7 அளவு நிலநடுக்கம் ஏற்பட்டதில் 1,621 பேர் உயிரிழந்தனர்.
1990
உக்ரைன் சோவியத் குடியரசின் நிலத்துக்கு அக்குடியரசின் நாடாளுமன்றம் உரிமை கோரியது.
1999
ஜான் எஃப். கென்னடியின் மகனும், மனைவியும் அத்திலாந்திக்குப் பகுதியில் மார்த்தாவின் திராட்சைத் தோட்டம் அருகே விமான விபத்தொன்றில் கொல்லப்பட்டனர்.
2004
தமிழ்நாடு கும்பகோணத்தில் தனியார் பாடசாலை ஒன்றில் இடம்பெற்ற தீவிபத்தில் 94 சிறுவர்கள் தீயிற் கருகி மாண்டனர்.
2004
மிலேனியம் பூங்கா சிக்காகோவில் அமைக்கப்பட்டது.
2006
தென்கிழக்கு சீனாவில் இடம்பெற்ற கடற் சூறாவளியினால் 115 பேர் உயிரிழந்தனர்.
2013
கிழக்கிந்தியாவின் பிகார் மாநிலத்தில் பாடசாலை ஒன்றில் நஞ்சு கலந்த மதிய உணவுண்ட 27 மாணவர்கள் உயிரிழந்தனர்.
















