1806
16 ஜேர்மனிய மாநிலங்கள் புனித ரோமப் பேரரசில் இருந்து விலகி ரைன் கூட்டமைப்பு என்ற புதிய அரசை நிறுவின.
1898
செனான் தனிமம் கண்டுபிடிக்கப்பட்டது.
1913
செர்பியப் படையினர் பல்கேரியாவின் விதின் நகரை முற்றுகையிட்டனர்.
1918
ஜப்பானின் “கவாச்சி” என்ற போர்க்கப்பல் ஒன்சூவில் மூழ்கடிக்கப்பட்டதில் 621 பேர் உயிரிழந்தனர்.
1920
சோவியத்-லித்துவேனிய அமைதி ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது. லித்துவேனியாவை சோவியத் ஒன்றியம் தனிநாடாக அங்கீகரித்தது.
1943
இரண்டாம் உலகப் போர்: ஜேர்மனிய, சோவியத் படைகள் புரொகோரொவ்கா என்ற இடத்தில் பெரும் சண்டையில் ஈடுபட்டன.
1948
இஸ்ரேலியப் பிரதமர் டேவிட் பென் – குரியன் லோட், இரம்லா நகர்களில் இருந்து பாலத்தீனியர்களை வெளியேற உத்தரவிட்டார்.
1961
கடக்வாசுலா, பான்செத் அணைகளில் ஏற்பட்ட பழுதின் காரணமாக புனேயில் இடம்பெற்ற பெரும் வெள்ளத்தில் மூழ்கி 2,000 பேர் வரை உயிரிழந்தனர்.
1967
அமெரிக்காவின் நுவார்க் நகரில் பெரும் இனக்கலவரம் வெடித்தது. 26 பேர் உயிரிழந்தனர், 700 பேர் காயமடைந்தனர்.
1971
அவுஸ்திரேலியாவில் பழங்குடியினரின் கொடி முதன் முறையாகப் பறக்கவிடப்பட்டது.
1975
சாவோ தொமே மற்றும் பிரின்சிப்பி போர்த்துக்கல்லிடம் இருந்து விடுதலை பெற்றது.
1979
கிரிபட்டி பிரித்தானியாவிடம் இருந்து விடுதலை பெற்றது.
1993
ஜப்பானில் 7.8 அளவு நிலநடுக்கம், மற்றும் சுனாமி தாக்கியதில் 202 பேர் உயிரிழந்தனர்.
2006
இஸ்ரேலிய இராணுவத்தினர் இருவரை ஹிஸ்புல்லா இயக்கத்தினர் கடத்தினர். இதனை அடுத்து இஸ்ரேல் லெபனான் மீது தாக்கியதில் பல்லாயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டனர். லெபனான்-இஸ்ரேலியப் போர் ஆரம்பமானது. போர் ஆகஸ்ட் 14 இல் முடிவுக்கு வந்தது.
2007
அமெரிக்க இராணுவத்தின் அப்பாச்சி உலங்குவானூர்திகள் பகுதாது மீது வான் தாக்குதலை நடத்தின.
2012
சிரிய உள்நாட்டுப் போர்: சிரியாவில் துராய்மீசா கிராமத்தில் இடம்பெற்ற இராணுவ நடவடிக்கையில் 150 பேர் வரை கொல்லப்பட்டனர்.
2012
நைஜீரியாவில் ஒக்கோபி நகரில் எண்ணெய் சுமையுந்து ஒன்று வெடித்ததில் 100 பேர் வரை உயிரிழந்தனர்.













