• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Wednesday, May 28, 2025
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home இலங்கை செய்திகள்

குரங்கின் மீது பழி சுமத்தி மக்களை ஏமாற்ற முயலாதீர் – அரசுக்கு எதிர்க்கட்சி எச்சரிக்கை.!

Mathavi by Mathavi
February 12, 2025
in இலங்கை செய்திகள்
0 0
0
குரங்கின் மீது பழி சுமத்தி மக்களை ஏமாற்ற முயலாதீர் – அரசுக்கு எதிர்க்கட்சி எச்சரிக்கை.!
Share on FacebookShare on Twitter

“உள்நாட்டுப் போரின்போது தமிழீழ விடுதலைப் புலிகள் 33 ஆயிரம் மெகாவோல்ட் மின் பிறப்பாக்கியைத் தீயிட்டுக் கொளுத்தியபோது கூட நாடளாவிய ரீதியில் மின்துண்டிக்கப்படவில்லை. அவ்வாறிருக்கையில் குரங்கின் மீது பழி சுமத்தி குரங்கு சேட்டைகள் காண்பிக்க வேண்டாம். அளவுக்கதிகமாக மக்களை ஏமாற்றவும் முற்பட வேண்டாம்.”- இவ்வாறு அநுர அரசை எச்சரித்துள்ளது ஐக்கிய மக்கள் சக்தி.

கொழும்பில் உள்ள ஐக்கிய மக்கள் சக்தி அலுவலகத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் இவ்வாறு எச்சரிக்கை விடுத்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

ADVERTISEMENT

“ஞாயிறன்று ஏற்பட்ட மின்தடைக்கு மின்சக்தி அமைச்சர் குரங்குகள் மீது பழி சுமத்தினார். 33 ஆயிரம் மெகாவோல்ட் கொண்ட மின் பிறப்பாக்கி விடுதலைப்புலிகளால் தீ வைக்கப்பட்டபோது கூட இவ்வாறு நாடளாவிய ரீதியில் மின்சாரம் துண்டிக்கப்படவில்லை.

அவ்வாறிருக்கையில் ஒரு குரங்கால் முழு நாட்டுக்கும் மின் துண்டிப்பை ஏற்படுத்த முடியுமா? மின்சக்தி அமைச்சரால் குறிப்பிடப்பட்ட இந்தக் கருத்து பாரிய சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், பின்னர் கடந்த அரசின் செயற்பாடுகளே இதற்குக் காரணம் என்று அவர் குறிப்பிட்டார்.

கடந்த அரசுகளின் குறைகளைக் கூறியே இவர்கள் ஆட்சியைக் கைப்பற்றினர். தற்போது ஆட்சியில் இருந்து கொண்டும் இதனையே கூறுகின்றனர்.

முறைமையில் மாற்றங்களை ஏற்படுத்தியதாகக் கூறியவர்களின் இயலாமை தற்போது வெளிப்பட ஆரம்பித்துள்ளது. நுரைச்சோலை நிலக்கரி மின் உற்பத்தி நிலையத்திலுள்ள மின் பிறப்பாக்கிகள் செயலிழந்தமையால் இந்த நிலைமை ஏற்பட்டது எனக் கூறினர்.

கடந்த காலங்களில் நுரைச்சோலை மின் பிறப்பாக்கிகள் செயலிழந்த சந்தர்ப்பங்களில், அது தொழிற்சங்க மாபியாக்களின் செயல் என விமர்சித்தனர். அவ்வாறெனில் இந்த அரசுக்கும் அந்த மாபியாக்களைக் கட்டுப்படுத்த முடியாமல் போயுள்ளதா?

சூரிய மின் உற்பத்தி களங்களால் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தின் அளவு அதிகம் என இலங்கை மின்சார சபையின் பொறியியலாளர் சங்கம் குறிப்பிடுகின்றது.

சூரிய மற்றும் காற்றாலை மின் உற்பத்திகள் பிரபலமாகும் பட்சத்தில் நிலக்கரி மற்றும் டீசல் மாபியாக்களுக்குப் பாதிப்பு ஏற்படும். எனவே, அந்த மாபியாக்களைப் பாதுகாப்பதற்காகவே இவ்வாறான கதைகள் கூறப்படுகின்றன.

இந்த மாபியாக்களின் தேவைக்கேற்ப செயற்படுவதற்கு அரசு இணங்கியுள்ளதா? நுரைச்சோலை மின்பிறப்பாக்கிகள் செயலிழக்கப் போவதை அறிந்தே அரசு அதற்கு இடமளித்திருக்கின்றது. இந்த உண்மையை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

மேடைகளில் வீர வசனம் பேசுவதை விட, நடைமுறையில் ஆட்சி செய்வது சிக்கல் என்பதை இப்போது ஜே.பி.வி. புரிந்து கொண்டிருக்கும். ஏனைய ஆட்சிக் காலங்களில் இவ்வாறு ஏதேனும் பிரச்சினைகள் ஏற்பட்டிருந்தால் தேசிய பாதுகாப்பு அச்சுறுத்தலில் இருப்பதாகக் குறிப்பிட்டு வீதிக்கு இறங்கியிருப்பர்.

தமது ஆட்சி என்பதால் மௌனமாக இருக்கின்றனர். அளவுக்கதிகமாக மக்களை ஏமாற்ற முற்பட வேண்டாம். மஹிந்தவை ஆட்சியில் அமர்த்தி, அவரைத் துரத்துவதற்கு மைத்திரிக்கு வாக்களித்து பின்னர் கோட்டாபயவை நாட்டை விட்டு ஓடச் செய்தவர்களே உங்களையும் ஆட்சியில் அமர்த்தியிருக்கின்றனர் என்பதை மறந்து விட வேண்டாம்.” – என்றார்.

Thinakaran
408 720.9K
  • Videos
  • Playlists
  • தமிழ்த் தேசியக் கூட்டணியின் தலைமை எடுக்கும் முடிவுக்கு நாங்கள் உறுதுணையாக இருப்போம்.!
    தமிழ்த் தேசியக் கூட்டணியின் தலைமை எடுக்கும் முடிவுக்கு நாங்கள் உறுதுணையாக இருப்போம்.! 1 day ago
  • தமிழ் மக்கள் ஓரணியில் திரள வேண்டும் என்றவர்கள் ஓட பாதை தெரியாமல் குடும்பிச்சண்டையில் ஈடுபட்டுள்ளனர்
    தமிழ் மக்கள் ஓரணியில் திரள வேண்டும் என்றவர்கள் ஓட பாதை தெரியாமல் குடும்பிச்சண்டையில் ஈடுபட்டுள்ளனர் 1 day ago
  • நுவரெலியாவில் மீண்டும் பேருந்து விபத்து - 23 பேர் வைத்தியசாலையில் அனுமதி!
    நுவரெலியாவில் மீண்டும் பேருந்து விபத்து - 23 பேர் வைத்தியசாலையில் அனுமதி! 4 days ago
  • 395 more
    • ஆவணப்படுத்தல்
      ஆவணப்படுத்தல்
      5 videos 1 year ago
    • DAILY REPORT
      DAILY REPORT
      27 videos 2 years ago
    • NIGHT NEWS
      NIGHT NEWS
      67 videos 2 years ago
  • 4 more
    • Mathavi

      Mathavi

      Related Posts

      இளைஞர், யுவதிகளுக்கான மாபெரும் தொழிற்சந்தை.!

      இளைஞர், யுவதிகளுக்கான மாபெரும் தொழிற்சந்தை.!

      by Mathavi
      May 28, 2025
      0

      திருகோணமலை மாவட்ட தம்பலகாமம் பிரதேச செயலகத்தில் மாபெரும் தொழிற் சந்தை ஒன்று இன்று (28) இடம் பெற்றது. தம்பலகாமம் பிரதேச செயலாளர் ஜெ.ஸ்ரீபதி அவர்களின் வழிகாட்டுதலுக்கிணங்க இடம்...

      கண்டியில் 36 மணிநேர நீர்வெட்டு.!

      கண்டியில் 36 மணிநேர நீர்வெட்டு.!

      by Mathavi
      May 28, 2025
      0

      கண்டியில் சில பகுதிகளில் இன்று (28) நீர் வெட்டு அமுல்படுத்தப்படும் என்று என்று கண்டி மாநகர சபையின் மாநகர ஆணையாளர் அலுவலகம் அறிவித்துள்ளது. கண்டி பல்வகை போக்குவரத்து...

      கொழும்பில் தேசிய மக்கள் சக்தி ஆட்சியமைக்க இடமளியோம்.!

      கொழும்பில் தேசிய மக்கள் சக்தி ஆட்சியமைக்க இடமளியோம்.!

      by Mathavi
      May 28, 2025
      0

      "கொழும்பு மாநகர சபையில் ஆட்சியமைப்பதற்குரிய பெரும்பான்மைப் பலத்தை தேசிய மக்கள் சக்திக்கு மக்கள் வழங்கவில்லை. எனவே, அக்கட்சி ஆட்சியமைப்பதற்கு எந்த சந்தர்ப்பத்திலும் ஆதரவு வழங்கப்படமாட்டாது. ஏனெனில் அது...

      இராணுவக் கட்டுப்பாட்டிலிருந்த காணி விடுவிப்புக்கு எதிராக தெற்கில் சிலர் இப்போதும் போர்க்கொடி.!

      இராணுவக் கட்டுப்பாட்டிலிருந்த காணி விடுவிப்புக்கு எதிராக தெற்கில் சிலர் இப்போதும் போர்க்கொடி.!

      by Mathavi
      May 28, 2025
      0

      "அரசால் வடக்கு மாகாணத்தில் இராணுவக் கட்டுப்பாட்டிலிருந்த பாதைகள் விடுவிக்கப்படுதல் மற்றும் காணிகள் விடுவிக்கப்படும்போது தென்பகுதியிலுள்ள சில அரசியல்வாதிகள் அதற்கு எதிராகக் குரல் கொடுக்கும் நிலைமை இப்போதும் காணப்படுகின்றது."...

      போராட்டத்தில் குதித்த விவசாயத் திணைக்களத்தின் பிராந்திய விவசாய ஆராய்ச்சி ஊழியர்கள்.!

      போராட்டத்தில் குதித்த விவசாயத் திணைக்களத்தின் பிராந்திய விவசாய ஆராய்ச்சி ஊழியர்கள்.!

      by Mathavi
      May 28, 2025
      0

      வடமாகாணத்தின் முல்லைத்தீவு மாவட்டத்தை தவிர்ந்த விவசாய திணைக்களத்தின் பிராந்திய விவசாய ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி நிலையத்தைச் சேர்ந்த ஒப்பந்த அடிப்படையில் பல வருட காலம் பணிபுரியும் ஊழியர்கள்...

      மன்னார் – வங்காலையில் கடலரிப்பு; நிலைமைகளை நேரடியாகச் சென்று பார்வையிட்டார் ரவிகரன் எம்.பி.!

      மன்னார் – வங்காலையில் கடலரிப்பு; நிலைமைகளை நேரடியாகச் சென்று பார்வையிட்டார் ரவிகரன் எம்.பி.!

      by Mathavi
      May 28, 2025
      0

      மன்னார் - நானாட்டான் பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட, வங்காலைப் பகுதியிலுள்ள கடலரிப்பு நிலைமைகளை அப்பகுதி மக்களின் அழைப்பையேற்று வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் நேற்று (27)...

      துசிதவின் வாகனம் மீது துப்பாக்கிப் பிரயோகம்; மேலும் மூவர் கைது.!

      துசிதவின் வாகனம் மீது துப்பாக்கிப் பிரயோகம்; மேலும் மூவர் கைது.!

      by Mathavi
      May 28, 2025
      0

      தேசிய லொத்தர் சபையின் முன்னாள் நிர்வாக பணிப்பாளர் துசித ஹல்லோலுவவின் வாகனம் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்துடன் தொடர்புடைய மேலும் 3 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக...

      பெருமளவிலான போதைப்பொருட்களுடன் சிக்கிய படகுகள்.!

      பெருமளவிலான போதைப்பொருட்களுடன் சிக்கிய படகுகள்.!

      by Mathavi
      May 28, 2025
      0

      பெருமளவிலான போதைப்பொருட்களை ஏற்றிச் சென்ற 2 மீன்பிடி படகுகள் பறிமுதல் செய்யப்பட்டன. தெற்கு கடற்கரைக்கு அப்பால் ஆழ்கடலில் போதைப்பொருள் கடத்தல்காரர்களுடன் பெருமளவிலான போதைப்பொருட்களை ஏற்றிச் சென்ற இரண்டு...

      அம்பாறை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்.!

      அம்பாறை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்.!

      by Mathavi
      May 28, 2025
      0

      அம்பாறை மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம் அம்பாறை மாவட்ட செயலகத்தில் நேற்று 27.05.2025 நடைபெற்றது. அம்பாறை, மட்டக்களப்பு மாவட்டங்களுக்குரிய பல நாள் மீன்பிடிப் படகுகளில் மீன் பிடிக்கப்படுகிறது....

      Load More
      Next Post
      அரசு பொய்களை அள்ளி வீசி உண்மையை மறைக்க முடியாது.!

      அரசு பொய்களை அள்ளி வீசி உண்மையை மறைக்க முடியாது.!

      மின் துண்டிப்பால் ஏற்பட்ட நட்டம் குறித்து மதிப்பிடுகின்றது அரசு.!

      மின் துண்டிப்பால் ஏற்பட்ட நட்டம் குறித்து மதிப்பிடுகின்றது அரசு.!

      அரச சேவையில் பதவி வெற்றிடங்கள் – ஆட்சேர்ப்புக்களுக்கு அமைச்சரவை அனுமதி.!

      அரச சேவையில் பதவி வெற்றிடங்கள் - ஆட்சேர்ப்புக்களுக்கு அமைச்சரவை அனுமதி.!

      Leave a Reply Cancel reply

      Your email address will not be published. Required fields are marked *

      Popular News

      • மாவையரின் உயிரைக்குடித்த 19 அயோக்கியர்கள்; பரபரப்பு தகவல்.!

        மாவையரின் உயிரைக்குடித்த 19 அயோக்கியர்கள்; பரபரப்பு தகவல்.!

        0 shares
        Share 0 Tweet 0
      • ஆசிரியரால் சீரழிக்கப்பட்ட மாணவி உயிர்மாய்ப்பு; பொலிஸாருக்கும் இதில் உடந்தையாம்.!

        0 shares
        Share 0 Tweet 0
      • அம்பலமானது தமிழர்களை கொன்றுகுவித்த வதை முகாம்!

        0 shares
        Share 0 Tweet 0
      • தமிழ் மாணவன் சிங்கள மாணவர்களால் தீ வைத்து எரிப்பு.! (சிறப்பு இணைப்பு)

        0 shares
        Share 0 Tweet 0
      • கடலில் நீராடச் சென்ற யுவதி உயிரிழப்பு.! (சிறப்பு இணைப்பு)

        0 shares
        Share 0 Tweet 0

      Follow Us

        Thinakaran

        உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

        www.thinakaran.com

        © 2024 Thinakaran.com

        Welcome Back!

        Login to your account below

        Forgotten Password?

        Retrieve your password

        Please enter your username or email address to reset your password.

        Log In
        No Result
        View All Result
        • முகப்பு
        • இலங்கை
          • முல்லைதீவு செய்திகள்
          • வவுனியா செய்திகள்
          • கிளிநொச்சி செய்திகள்
          • திருகோணமலை செய்திகள்
          • மட்டக்களப்பு செய்திகள்
          • மன்னார் செய்திகள்
          • மலையக செய்திகள்
        • இந்தியா
        • உலகம்
        • சினிமா
        • விளையாட்டு
        • நிகழ்வுகள்
        • எம்மை பற்றி