வெளிநாட்டு கடவுச்சீட்டுகளை வழங்குவதில் ஏற்படும் தாமதங்களைத் தவிர்க்க, குடிவரவு மற்றும் குடியகல்வுத் துறையை 24 மணி நேரமும் இயக்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ இதனை தெரிவித்தார்.
நாளொன்றுக்கு 4,000 வெளிநாட்டு கடவுச்சீட்டுகள் வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
பொது சேவை ஆணையத்தின் ஒப்புதலுடன், அந்த சேவையை வழங்குவதற்குத் தேவையான கூடுதல் பணியாளர்களை வழங்க, துறையிலிருந்து ஓய்வு பெற்ற அதிகாரிகளை ஒப்பந்த அடிப்படையில் பணியமர்த்தும் திட்டத்திற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
இதேவேளை தேங்காய் உற்பத்தி பற்றாக்குறையின் மத்தியில் உள்ளுர் கைத்தொழில் மற்றும் நுகர்வோருக்கு ஆதரவளிக்கும் வகையில் தேங்காய் துருவல் பொருட்கள் மற்றும் உலர் தேங்காய் துண்டுகளை இறக்குமதி செய்வதற்கான நடவடிக்கைகளுக்கு அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளது.
சட்ட விதிகளுக்கு இணங்குவதை உறுதிசெய்து உடனடி இறக்குமதியை ஆராயுமாறு கைத்தொழில் மற்றும் பெருந்தோட்ட அமைச்சுகளுக்கு அமைச்சரவை அறிவுறுத்தியுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர்நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
இதன்படி, சந்தையை ஸ்திரப்படுத்துவதற்கும், தேங்காய் சார்ந்த தொழில்களை நிலைநிறுத்துவதற்கும் 200 மில்லியன் தேங்காய்களை இறக்குமதி செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.