நாளை முதல் அமுலாகும் வகையில் நெல் சந்தைப்படுத்தல் சபையினூடாக விவசாயிகளிடமிருந்து நெல் கொள்வனவு செய்யப்படும் விலைகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சர் கே.டி. லால் காந்த தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.
அதற்கமைய, நாட்டரிசி நெல் ஒரு கிலோ கிராமை சந்தைப்படுத்தல் சபை 120 ரூபாவுக்கு கொள்வனவு செய்யும்.
“ஒரு கிலோ கிராம் சம்பா நெல் 125 ரூபாவுக்கு கொள்வனவு செய்யப்படும்.
“ஒரு கிலோ கிராம் கீரி சம்பா நெல் 132 ரூபாய்க்கு கொள்வனவு செய்யப்படும்
“அரிசியின் விலை குறித்து சிந்தித்தும், விவசாயிகளின் உற்பத்திச் செலவுகளையும் கருத்தில் கொண்டும் இந்த முடிவு எடுக்கப்பட்டது.” என்றார்.