• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Monday, May 19, 2025
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home இலங்கை செய்திகள்

ஐ.நா மனித உரிமை பேரவையில் எமக்கான உரையாடல் கதவையும் மூட தேசிய மக்கள் சக்தி முயற்சி.!

Mathavi by Mathavi
February 5, 2025
in இலங்கை செய்திகள்
0 0
0
ஐ.நா மனித உரிமை பேரவையில் எமக்கான உரையாடல் கதவையும் மூட தேசிய மக்கள் சக்தி முயற்சி.!
Share on FacebookShare on Twitter

ஐ.நா மனித உரிமை பேரவையில் எமக்கான உரையாடல் கதவையும் மூடுவதற்கு தேசிய மக்கள் சக்தி முயற்சிக்கின்றது என சமூக நீதிக்கான செயற்பாட்டாளரும், அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளருமான அருட்தந்தை மா.சத்திவேல் தெரிவித்துள்ளார்.

அவர் இன்று (05.02.2025) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவ் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

ADVERTISEMENT

தேசிய மக்கள் சக்தியாகிய மக்கள் விடுதலை முன்னணியின் தலைவரும் ஜனாதிபதியுமாகிய அனுர குமார திசாநாயக்க அவர்கள் யாழ் அபிவிருத்திக் குழு கூட்டம் என வடக்கிற்கு வந்து தமது பிரபல்யத்திற்கும் அரசாங்கத்தின் இருப்பிக்கும் வடக்கு மக்களின் ஆதரவு பெருகி உள்ளதாக வெளிப்படுத்தியுள்ளதோடு நில்லாது, தமிழர் தாயக அரசியலுக்கு ஆப்பு வைக்கும் முயற்சியில் இறங்கி ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் தமிழர்களுக்கான கதவினை மூடுவதற்கு எடுக்கும் முயற்சியை தமிழ் தேசிய அரசியல் சமூகமும், சிவில் சமூகமும், பொதுமக்களும் சரியாக உணர்ந்து இனியும் கூட்டாக செயல்படாவிடின் எம்மை நாமே அழித்துக் கொண்ட வரலாற்று தவறிழைத்த மக்களாவோம்.

தர்மபுரி முதலாவது மிகப்பெரிய இனப்படுகொலை பேரவலம் 2009 முள்ளிவாய்க்காலில் நிகழ்வதற்கு சர்வதேச மற்றும் வயது வளர்ச்சிகள் இலங்கை பேரினவாத ஆட்சியாளர்களுக்கு துணை நின்றதை விட எம்மத்தியில் செயல்பட்ட ஒட்டுக் குழுக்களின் பங்களிப்பு மிகப் பெரியது எனலாம்.

அன்று எமது போராட்டத்தை பாரிய அழிவுக்குள் தள்ளி முடிவுக்குள் கொண்டு வர துணை நின்ற ஒட்டுக் குழுக்களைப் போல் இன்றும் பேரினவாத அரசின் நேரடி முகவர்களாக பல அணியினர் வெளியரங்கமாகவும், மறைமுகமாகவும் இயங்கி தமிழர்களின் அரசியல் அபிலாசைகளுக்கு நிரந்தர முற்றுப்புள்ளி வைக்க செயல்படுவதோடு சிங்கள பௌத்த பேரினவாதத்தின் நில ஆக்கிரமிப்புக்கு துணை நின்று ஒற்றை ஆட்சிக்குள் தள்ளிவிடவும் திட்டங்களை வகுத்து செயல்படுகின்றனர். இவர்களாலேயே சுதந்திர தின பேரணி நிகழ்த்தப்பட்டது. அது தமிழர்களுக்கு எதிரான எமது அரசியலுக்கு எச்சரிக்கை விடுக்கும் போராட்டமாகவே கொள்ளல் வேண்டும்.

தமிழர்களின் அரசியல் அதற்கான போராட்ட வரலாறு தெரியாத அரசியல்வாதிகளும் கோமாளி அரசியல்வாதிகளும் தற்போது எம்மத்தியிலே பெருகி வருவது அல்லது பெருக வைப்பது இன்னுமொரு ஆபத்தான முடிவாகவே அமையும்.

சிங்கள பௌத்த பேரினவாத அரசின் நில ஆக்கிரமிப்பின் உச்சக்கட்ட வெளிப்பாடாகவே தையிட்டி விகாரையும் தூவியும் அமைந்துள்ளது. படையினர் சட்டத்திற்கு புறம்பாக தனியார் காணிக்குள் அத்துமீறி பிரவேசித்து உரிமையாளர்களின் அனுமதியின்றியும் அரச அமைப்புகளில் அங்கீகாரம் இன்றியும் அதனை நிர்மானித்துள்ளதோடு அங்கு வழிபாட்டுக்கு பக்தர்கள் இல்லாத நிலையில் ஒவ்வொரு போயா தினத்திலும் பக்தர்களை இறக்குமதி செய்வது தமிழர்களின் அரசியலுக்கு விடுக்கும் அச்சுறுத்தல் எனலாம்.

இதன் ஆபத்தை உணராதவர்கள் விகாரைக்கு எதிரான போராட்டத்தினை தனிக்கட்சி அரசியலாக பார்த்தனர். ஏனைய கட்சிகளும், பொதுமக்களும் வேடிக்கை பார்த்ததன் விளைவை அண்மையில் நிகழ்ந்த அபிவிருத்தி குழு கூட்டத்தில் காணக்கூடியதாக இருந்தது. அங்கு போராட்டத்தை கொச்சைப்படுத்தியதையும், அவமானப்படுத்தியதையும் ஏற்றுக் கொள்ள முடியாது. நட்ட ஈடு, மாற்றுக் காணி என அரசுக்கு ஆலோசனை கூறுவது ஒரு புறம் இருக்க பெரும்பாலானவர்கள் மௌனம் காத்தமை எமது அரசியல் அவலத்தையும் வெளிப்படுத்தியது.

இது இவ்வாறு இருக்க கடந்த வருட ஜனாதிபதி தேர்தல் மற்றும் நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் மட்டுமல்ல அன்மையில் நடந்த யாழ் அபிவிருத்திக் குழு கூட்டத்தை தொடர்ந்து ஜனாதிபதியின் மக்கள் சந்திப்புகள் குறிப்பாக வல்வெட்டித்துறையில் அவருக்கான வரவேற்பு தேசிய மக்கள் சக்தியை மேலும் பலப்படுத்தியமையாக காட்டப்படுவதோடு அது தேசிய மக்கள் சக்தியுடன் மக்கள் ஒன்றுபடுதல் மட்டுமல்ல பெரும் தேசிய வாதத்துடன் ஒன்றுபடுவதாகவே தெற்கில் காட்டப்படுகின்றது. அதுவே பேசு பொருளாகியுமுள்ளது.

இதனை சாதகமாக்கிக் கொண்டே தற்போதைய அரசின் வெளிநாட்டு அமைச்சர் இம்மாதம் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவைக்கு மாநாட்டுக்கு செல்ல உள்ளார். பேரவையின் கருத்துக்கள், ஆலோசனைகள் என்பவற்றை புறந்தள்ளி ஐ.நா மனித உரிமை பேரவையில் எமக்கான உரையாடல் கதவையும் மூடுவதற்கு தேசிய மக்கள் சக்தி முயற்சிக்கின்றது.

இந்நிலையில் தேர்தல் அரசியல் காப்பார் தமிழ் கட்சிகளின் கூட்டு மீண்டும் கனவு நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. இதற்கு அதிகார போட்டியும், உள் கட்சி குழப்பங்களும் காரணமாக பலமான சிவில் சமூக கட்டமைப்பும் இல்லா காலகட்டம் இது. ஒற்றை ஆட்சி அரசியல் யாப்பு என்னும் தூக்குக் கயிறும் எம் கண் முன்னே தெரிகிறது.

தற்போதைய அரசியல் சூழ்நிலையில் வட கிழக்கு இணைந்த தமிழர் தாயக அரசியலுக்கு எதிரான சிங்கள பௌத்த பெரும் தேசிய வாதத்தின் முகவர்களும், அரசியல் கோமாளிகளும், தமிழர் அரசியல் அபிலாசைகள் மற்றும் போராட்ட வரலாற்றின் அடிமுடி தெரியாத போலிகளாலும் தீவிரமாக மக்கள் மத்தியில் நச்சு அரசியலை பரப்பி திசை திருப்பிக் கொண்டு இருக்கின்றனர்.

அரசியல் சமூகமாக அடையாளப்படுத்திக் கொண்டிருப்போர் பொது வெளியில் அமைதி காப்பதையும் ஏற்றுக்கொள்ள முடியாது. முன்னவர்களை விட பின்னவர்கள் ஆபத்தானவர்கள் என்பதை சுட்டிக் காட்டுவதோடு தந்தை செல்வாவின் “இனி தமிழர்களை கடவுள்தான் காப்பாற்ற வேண்டும்” எனும் கூற்றினை மீள நினைவில் கொள்வோம். கூட்டு அரசியலே எமக்கான தெரிவாக அமையட்டும்.

Mathavi

Mathavi

Related Posts

கிளிநொச்சி மாவட்ட பிரதேச சபைகளின் தவிசாளர் நியமன சர்ச்சை – சி.வி.கே சிவஞானம் அவசர விளக்கம்.!

கிளிநொச்சி மாவட்ட பிரதேச சபைகளின் தவிசாளர் நியமன சர்ச்சை – சி.வி.கே சிவஞானம் அவசர விளக்கம்.!

by Mathavi
May 19, 2025
0

தமிழரசுக் கட்சியின் பதில் பொது செயலாளர் சுமந்திரன் தான். அவரே கட்சியின் இன்றைய கால அனைத்து செயற்பாடுகளுக்கும் கையொப்பமிடும் அதிகாரம் மிக்கவர். இதனை சிறீதரன் உணர்ந்து கொள்ளவேண்டும்...

வடமராட்சி வடக்கை கைவிட்ட ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணி; மக்கள் ஆதங்கம்.!

வடமராட்சி வடக்கை கைவிட்ட ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணி; மக்கள் ஆதங்கம்.!

by Mathavi
May 19, 2025
0

வடமராட்சி வடக்கை கைவிட்டதாக ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணி மீது வடமராட்சி வடக்கு மக்கள் தமது ஆதங்கத்தை தொடர்ந்து வெளிப்படுத்திக் கொண்ட வண்ணம் உள்ளனர். இது சம்பந்தமாக...

விளக்கமறியலில் இருந்த சாமர எம்.பிக்குப் பிணை.!

விளக்கமறியலில் இருந்த சாமர எம்.பிக்குப் பிணை.!

by Mathavi
May 19, 2025
0

பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க இன்று திங்கட்கிழமை பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். பொதுச் சொத்துச் சட்டத்தின் கீழ் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த...

நாடு திரும்பும் பஸில் மொட்டுக் கட்சியுடன் அவசர சந்திப்பு.!

நாடு திரும்பும் பஸில் மொட்டுக் கட்சியுடன் அவசர சந்திப்பு.!

by Mathavi
May 19, 2025
0

ஜனாதிபதித் தேர்தலுக்குப் பிறகு அமெரிக்கா பறந்த ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் ஸ்தாபகர் பஸில் ராஜபக்ஷ நாடு திரும்பவுள்ளார். இதற்கமைய எதிர்வரும் 22 ஆம் திகதி வியாழக்கிழமை...

தமிழரசின் மீள் எழுச்சியுடன் அநுரவின் வீழ்ச்சி ஆரம்பம்.!

தமிழரசின் மீள் எழுச்சியுடன் அநுரவின் வீழ்ச்சி ஆரம்பம்.!

by Mathavi
May 19, 2025
0

"ஏ.கே.டி.(அநுர குமார திஸநாயக்க) - ஜே.வி.பி. - என்.பி.பி. (தேசிய மக்கள் சக்தி) ஆட்சிப் பீடத்தின் வீழ்ச்சியின் ஆரம்பம்" என்று தலைப்பிட்டு, மதிப்பார்ந்த 'பினான்சியல் டைம்ஸ்' பத்திரிகையில்...

மன்னார் புனித லோறன்சியார் ஆலயத்தில் இடம்பெற்ற முள்ளிவாய்க்கால் நினைவு தின நிகழ்வு.!

மன்னார் புனித லோறன்சியார் ஆலயத்தில் இடம்பெற்ற முள்ளிவாய்க்கால் நினைவு தின நிகழ்வு.!

by Mathavi
May 19, 2025
0

தலைமன்னார் புனித லோறன்சியார் தேவாலய பிரதான வாயிலில் தலைமன்னார் பங்குத்தந்தை அருட்பணி. டெனி கலிஸ்டஸ் மற்றும் திருக்குடும்ப கன்னியர் சபையின் அருட்சகோதரிகள் தலைமையில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு...

கழியோடை பிரதான ஆறு புனரமைப்பு தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் கேள்வி.!

கழியோடை பிரதான ஆறு புனரமைப்பு தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் கேள்வி.!

by Mathavi
May 19, 2025
0

கழியோடை ஆற்றை அண்டியதாக நீர்ப்பாசனத் திணைக்களத்திற்குச் சொந்தமான தீகவாபி தொடக்கம் கழியோடை வரையிலான 4 கிலோமீட்டர் நீளமான பிரதான கால்வாய் அடிக்கடி உடைப்பெடுப்பதன் காரணமாக அக்கரைப்பற்று, அட்டாளைச்சேனை,...

யுத்தத்தின்போது உயிர்நீத்தவர்களை நினைவுகூரும் வகையில் பிரித்தானியாவில் இடம்பெற்ற முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்.!

யுத்தத்தின்போது உயிர்நீத்தவர்களை நினைவுகூரும் வகையில் பிரித்தானியாவில் இடம்பெற்ற முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்.!

by Mathavi
May 19, 2025
0

இலங்கையில் 2009 ஆம் ஆண்டு நடைபெற்ற இறுதி யுத்தத்தின் போது உயிர்நீத்த ஈழத் தமிழர்களை நினைவுகூரும் வகையில் பிரித்தானியாவில் உள்ள ஒக்ஸ்போட் உலகத் தமிழர் வரலாற்று மையத்தில்...

நாட்டின் பல பகுதிகளில் இன்று பலத்த மழை.!

நாட்டின் பல பகுதிகளில் இன்று பலத்த மழை.!

by Mathavi
May 19, 2025
0

நாடு முழுவதிலும் தென்மேல் பருவப் பெயர்ச்சிக்குரிய காலநிலை படிப்படியாக ஆரம்பிக்கின்றது. இதனால் நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் வானம் முகில் செறிந்து காணப்படுமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. வடக்கு,...

Load More
Next Post
எதிர்கால அரசியல் நடவடிக்கைகள் குறித்து எதிர்க்கட்சித் தலைவர்கள் கலந்துரையாடல்.! (சிறப்பு இணைப்பு)

எதிர்கால அரசியல் நடவடிக்கைகள் குறித்து எதிர்க்கட்சித் தலைவர்கள் கலந்துரையாடல்.! (சிறப்பு இணைப்பு)

யாழில் பெருமளவு கேரள கஞ்சாவுடன் சிக்கிய சந்தேக நபர்கள்.!

யாழில் பெருமளவு கேரள கஞ்சாவுடன் சிக்கிய சந்தேக நபர்கள்.!

கடவுச்சீட்டுகளை வழங்குவதில் தாமதம்; 24 மணி நேர சேவையை வழங்கத் தீர்மானம்.!

கடவுச்சீட்டுகளை வழங்குவதில் தாமதம்; 24 மணி நேர சேவையை வழங்கத் தீர்மானம்.!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Popular News

  • மாவையரின் உயிரைக்குடித்த 19 அயோக்கியர்கள்; பரபரப்பு தகவல்.!

    மாவையரின் உயிரைக்குடித்த 19 அயோக்கியர்கள்; பரபரப்பு தகவல்.!

    0 shares
    Share 0 Tweet 0
  • ஆசிரியரால் சீரழிக்கப்பட்ட மாணவி உயிர்மாய்ப்பு; பொலிஸாருக்கும் இதில் உடந்தையாம்.!

    0 shares
    Share 0 Tweet 0
  • அம்பலமானது தமிழர்களை கொன்றுகுவித்த வதை முகாம்!

    0 shares
    Share 0 Tweet 0
  • தமிழ் மாணவன் சிங்கள மாணவர்களால் தீ வைத்து எரிப்பு.! (சிறப்பு இணைப்பு)

    0 shares
    Share 0 Tweet 0
  • கடலில் நீராடச் சென்ற யுவதி உயிரிழப்பு.! (சிறப்பு இணைப்பு)

    0 shares
    Share 0 Tweet 0

Follow Us

    Thinakaran

    உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

    www.thinakaran.com

    © 2024 Thinakaran.com

    Welcome Back!

    Login to your account below

    Forgotten Password?

    Retrieve your password

    Please enter your username or email address to reset your password.

    Log In
    No Result
    View All Result
    • முகப்பு
    • இலங்கை
      • முல்லைதீவு செய்திகள்
      • வவுனியா செய்திகள்
      • கிளிநொச்சி செய்திகள்
      • திருகோணமலை செய்திகள்
      • மட்டக்களப்பு செய்திகள்
      • மன்னார் செய்திகள்
      • மலையக செய்திகள்
    • இந்தியா
    • உலகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • நிகழ்வுகள்
    • எம்மை பற்றி