மாத்தறை – தெவினுவர, தல்பாவில பகுதியில் உள்ள கருவாடு வர்த்தகர் ஒருவரின் வீட்டின் முன்னால் அடையாளம் தெரியாத இருவர் நேற்று (12) மாலை 4.45 மணியளவில் துப்பாக்கிப் பிரயோகம் நடத்தியுள்ளனர். இந்த துப்பாக்கிப் பிரயோகத்தால் யாருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிவப்பு நிற உந்துருளியில் வந்த இருவர் இந்த துப்பாக்கி பிரயோகத்தை நடத்தியுள்ளனர்.
கருவாடை வாங்க விரும்புவதாகக் கூறிய நிலையில், வாயில் கதவை திறந்த போது இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. இதன்போது வாயிலுக்கு அருகிலுள்ள சுவரில் துப்பாக்கிச் சூடு பாய்ந்ததுடன், துப்பாக்கிச் சூட்டை நடத்தியவர்கள் காலியான தோட்ட உறையையும் எடுத்துச் சென்றதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இந்தச் சம்பவம் அருகிலிருந்த சி.சி.டி.வி கமராவில் பதிவாகியுள்ளது.
துப்பாக்கிப் பிரயோகத்தை நடத்தியவர்கள் பயன்படுத்திய உந்துருளி அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், கந்தர பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.