• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Thursday, May 8, 2025
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home இலங்கை செய்திகள்

தொல்பொருள் என்ற போர்வையில் மக்களின் காணிகளை சூரையாட நினைக்காதீர்கள்.!

Mathavi by Mathavi
January 9, 2025
in இலங்கை செய்திகள்
0 0
0
தொல்பொருள் என்ற போர்வையில் மக்களின் காணிகளை சூரையாட நினைக்காதீர்கள்.!
Share on FacebookShare on Twitter

நேற்றும், அதற்கு முந்தைய நாளிலும் நாடாளுமன்ற அமர்வில், நாட்டிலே அரிசி விலை உயர்வு குறித்து பேசப்பட்டது. இவ் அரிசி விலை உயர்வுக்கு வெள்ளம், வரட்சி போன்ற இயற்கை பேரிடர்கள் மட்டுமின்றி அரசினது அங்கங்களான பல்வேறு திணைக்களங்களும் காரணமாக உள்ளன. இதில் முதன்மை வகிப்பது தொல்பொருள் துறையாகும்.

தொல்பொருள் துறையானது தமிழ் மக்கள் சில நூற்றாண்டு காலமாக விவசாயம் செய்து வருகின்ற, விவசாய நிலங்களை தமது தொல்பொருள் இடங்களாக அறிவித்து கையகப்படுத்தி வருகின்றது என இலங்கை தமிழரசு கட்சியின் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சண்முகம் குகதாசன் தெரிவித்தார். 2025 ம் ஆண்டின் முதலாவது உரையின் போது இன்று (09) இதனை தெரிவித்த அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்

எடுத்துக்காட்டாக, இந்த ஆண்டு தொடங்கி பத்து நாட்கள் கூட முடிவடையாத நிலையில், தொல்லியல் துறையானது கடந்த ஆறாம் திகதி மாலை திருகோணமலை மாவட்டத்தில் உள்ள ஈச்சிலம்பற்று பிரதேச செயலாளர் பிரிவில் வட்டவான் கிராமசேவர் பிரிவில் அடங்கும் 224 விவசாயிகளுக்கு சொந்தமான 380 ஏக்கருக்கு மேற்பட்ட நெற்பயிரோடு கூடிய விவசாய நிலத்தை தமது தொல்லியல் பகுதி என அறிவித்துள்ளது.

ADVERTISEMENT

அதேபோன்று குச்சவெளி பிரதேச செயலாளர் பிரிவில் உள்ளடங்கும் குச்சவெளி கிராம சேவையாளர் பிரிவில், 1985 ஆம் ஆண்டுக்கு முன்பிருந்தே விவசாயிகள் பயன்படுத்தி வந்த நெற்களஞ்சியம் மற்றும் சந்தைப் பகுதியை தொல்லியல்துறை தொல்பொருள் பகுதி என அறிவித்துள்ளது.

இதற்கு முன்னரும் தொல்லியல் துறையானது, குச்சவெளி பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள திரியாய் கிராம சேவையாளர் பிரிவில் உள்ளடங்கும் பிரித்தானியர்களால் வழங்கப்பட்ட உறுதிகளைக் கொண்ட, 150 ஆண்டு காலமாக தமிழ் மக்கள் விவசாயம் செய்து வருகின்ற, அண்ணளவாக ஆயிரம் ஏக்கர் நிலத்தினை விவசாயம் செய்ய விடாமல் எல்லைக் கற்களை போட்டு பிடித்து வைத்துள்ளது.

இது மட்டுமல்லாமல் இதனை விடவும், மேலும் குச்சவெளி பிரதேச செயலாளர் பிரிவில் உள்ளடங்கும் தென்னைமரபுஅடி, புல்மோட்டை, திரியாய், குச்சவெளி, ஜாயா நகர், கும்புறுப்பிட்டி, நிலாவெளி, பெரியகுளம் முதலிய கிராமசேவை பிரிவுகளை உள்ளடக்கிய 1994 ஏக்கர் நிலத்தை எல்லைக்கற்களை இட்டு பிடித்து வைத்துள்ளது.

இந்த செயலானது, நெல் உற்பத்தியில் பாரிய குறைப்பை ஏற்படுத்தியுள்ளது என்பதனையும், இது நாட்டிற்கு பேரிழப்பு என்பதனையும், இந்த அவையின் மேலான கவனத்திற்கு கொண்டு வருகின்றேன்.

இது மட்டுமல்லாமல் தொல்லியல் துறை ஆனது, மூதூர் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ளடங்கும், இராஜவந்தான் மலை முருகன் கோயில், கூனித்தீவு மத்தளைமலை முருகன் கோயில், கிளிவெட்டி முத்துமாரியம்மன் கோயில் அதேபோன்று, சேருவில பிரதேச செயலாளர் பிரிவில் உள்ளடங்கும், திருமங்கலாய் சிவன் கோயில், ஈச்சிலம்பற்று பிரதேச செயலாளர் பிரிவில் உள்ளடங்கும், இலங்கைத்துறை முகத்துவாரம் பெரியசாமி கோயில் மற்றும் கல்லடிமலை நீலியம்மன் கோயில் அதேபோன்று, திருகோணமலை பட்டணமும் சூழலும் பிரதேச செயலக பிரிவில் உள்ளடங்கும், கன்னியா வெந்நீர் ஊற்று மற்றும் குச்சவெளி பிரதேச செயலாளர் பிரிவில் உள்ளடங்கும், தென்னமரபுஅடி கந்தசாமிமலை முருகன் கோயில், குச்சவெளி செம்பிமலை சிவன் கோயில் மற்றும் வழத்தான்மலை நாகதம்பிரான் கோயில் முதலிய சைவ கோயில்களையும், அவற்றை சூழவுள்ள விவசாய நிலங்களையும் கையகப்படுத்துகின்ற முன்முயற்சிகளில் தொல்பொருள் துறை ஈடுபட்டு வருவதனையும் அவதானிக்க கூடியதாக உள்ளது.

இதற்கு மேலாக, இலங்கையில் புகழ்பெற்ற கோணேஸ்வரர் கோயில் வளாகத்தில் உள்ள 453 ஏக்கர் நிலத்தையும் தொல்பொருள் துறை கையகப்படுத்தி வைத்துள்ளது. இந்தப் பகுதியில் ஒரு வாழை மரத்தை நடக்கூட தொல்லியல்துறை தடை விதிக்கின்ற அதேவேளை, இங்கு 58 சட்டவிரோத கடைகள் கட்டியிருப்பது பற்றி தொல்லியல் திணைக்களம் எந்த கவலையும் கொள்ளவில்லை என்பதோடு, பல வேளைகளில் அவர்களுக்கு சாதகமாக நடந்து கொள்வதனையும் அவதானிக்க கூடியதாக உள்ளது. இது ஒரு இனவாத போக்கினை எடுத்துக்காட்டுவதாக அமைகிறது.

தொல்பொருள்துறை மட்டுமில்லாமல், திருகோணமலை மாவட்டத்தில், 1983 ஆம் ஆண்டு தொடக்கம் 2009 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில், போரின்போது மக்கள் உயிர் பாதுகாப்புக் கருதி இடம்பெயர்ந்த வேளையில், அரசின் மற்றுமொரு அங்கமான வனத்துறை, மக்கள் விவசாயம் செய்த 41,361 ஏக்கர் நிலத்தினை தமது மனம் போன போக்கில் எல்லைக் கற்களை போட்டு பிடித்து வைத்துக்கொண்டு, காணியினுள் செல்லவோ அல்லது விவசாயம் செய்யவோ விடாமல் தடுத்து வருகின்றது.

இது மட்டுமல்லாமல் வனத்துறை எல்லைக் கற்களை இடாத பகுதிகளில் கூட மக்கள் தமது காணிகளில் விவசாயத்தில் ஈடுபட வனத்துறையிடம் ஒப்புதலை பெறமுடியாத நிலை காணப்படுகிறது.

இதேபோன்று வனவிலங்கு துறையானது கால்நடை வளர்ப்பாளர்கள் பல தலைமுறைகளாக மேய்ச்சல் தரையாக பயன்படுத்தி வந்த நிலங்களை, அவர்கள் போரின்போது இடம்பெயர்ந்த வேளையில், எல்லைக் கற்களை போட்டு பிடித்து வைத்துக் கொண்டு, இவ்நிலங்களில் காட்டு விலங்குகள் மட்டுமே மேயலாம். வீட்டு விலங்குகள் மேய முடியாது என்று தடுத்து வருகிறது.

இதனால் ஆயிரக்கணக்கான கால்நடை வளர்ப்பாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளதோடு, பல்லாயிரக்கணக்கான கால்நடைகள் போதிய உணவின்றி இன்னலுருகின்றன. எடுத்துக்காட்டாக ஈச்சிலம்பற்று பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள 600 கால்நடை வளர்ப்பாளர்கள் தமது 28,000 கால்நடைகளுக்கு மேய்ச்சல் தரையின்றி இன்னல்ப்படுகின்றனர். இவர்கள் கால்நடை வளர்ப்பையே தமது வாழ்வாதாரமாக கொண்டவர்களாக காணப்படுகின்றனர்.

இத்தகைய சிக்கல் தம்பலகமம், குச்சவெளி, கிண்ணியா, மூதூர் மொறவெவ முதலிய பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

அதேபோன்று, அரசின் இன்னும் ஒரு அங்கமான துறைமுக அதிகார சபையானது, திருகோணமலையின் பட்டணமும் சூழலும் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ளடங்கும் 11 கிராம சேவை பிரிவுகளை உள்ளடக்கிய 5,572 ஏக்கர் நிலத்தினை கையப்படுத்தி வைத்திருக்கின்றது. இப்பகுதிக்குள் வாழும் 763 குடும்பங்கள் தமது குடியிருப்பு காணிகளில் எதுவித செயற்பாடுகளையும் மேற்கொள்ள முடியாது இருப்பது மட்டுமின்றி, விவசாய நிலங்களில் பயிர்ச்செய்கை மேற்கொள்ள முடியாத சூழலும் காணப்படுகின்றது என்பது குறிப்பபிடத்தக்கது.

இலங்கை அரசு உணவு உற்பத்தியை பெருக்குமாறு கூறுகின்ற அதேவேளை அரசின் அங்கங்களான தொல்பொருள்த்துறை, வனத்துறை, வனவிலங்குத் துறை, துறைமுக அதிகாரசபை முதலியன விவசாய நடவடிக்கைகளை தடுப்பதன் மூலம் உணவு உற்பத்தினை குறைத்தும் வருகின்றது என்பது நகைப்பிற்குரிய விடயமாக உள்ளது.

திருகோணமலை மாவட்டத்தில் அரச திணைக்களங்கள் மட்டுமன்றி, முற்றும் துறந்த பிக்குகளும் மண்ணாசை கொண்டு குச்சவெளி பிரதேச செயலாளர் பிரிவில் உள்ளடங்கும் 2,172 ஏக்கர் நிலத்தினை பிடித்து வைத்துக்கொண்டு, மக்களை விவசாயம் செய்ய விடாமல் தடுத்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

இந்த விடயத்தில் அரசாங்கம் உரிய கவனம் செலுத்தி தொல்பொருள்த்துறை, வனத்துறை, வனவிலங்குத்துறை, துறைமுக அதிகார சபை, புத்தபிக்குகள் ஆகியோர் பிடித்து வைத்துள்ள மக்களுடைய காணிகளை விடுவித்து, மக்கள் விவசாய நடவடிக்கைகளில் ஈடுபடவும், அதன் வழி நெல் உள்ளிட்ட உணவு உற்பத்தியினை பெருக்கவும் ஆவன செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டு எனது உரையினை நிறைவு செய்கின்றேன். என்றார்.

Thinakaran
398 673.7K
  • Videos
  • Playlists
  • நுவரெலியா மாவட்டத்தில் நீர் தேக்கங்களின் நீர் மட்டம் வெகுவாக குறைந்துள்ளது.  | Thinakaran news
    நுவரெலியா மாவட்டத்தில் நீர் தேக்கங்களின் நீர் மட்டம் வெகுவாக குறைந்துள்ளது. | Thinakaran news 5 days ago
  • இலங்கையில் இப்படியும் ஒரு போலீசாரா? : அதுவும் மட்டக்களப்பில் | Thinakaran news
    இலங்கையில் இப்படியும் ஒரு போலீசாரா? : அதுவும் மட்டக்களப்பில் | Thinakaran news 5 days ago
  • யாழ்ப்பாணம் நகரப் பகுதியில் பிரச்சார துண்டு பிரசுரம் வழங்கும் நிகழ்வு: | Thinakaran news
    யாழ்ப்பாணம் நகரப் பகுதியில் பிரச்சார துண்டு பிரசுரம் வழங்கும் நிகழ்வு: | Thinakaran news 5 days ago
  • 412 more
    • ஆவணப்படுத்தல்
      ஆவணப்படுத்தல்
      5 videos 1 year ago
    • DAILY REPORT
      DAILY REPORT
      27 videos 1 year ago
    • NIGHT NEWS
      NIGHT NEWS
      67 videos 1 year ago
  • 4 more
    • Mathavi

      Mathavi

      Related Posts

      வவுனியாவில் இளம் பெண் ஒருவர் உயிர்மாய்ப்பு..!

      வவுனியாவில் இளம் பெண் ஒருவர் உயிர்மாய்ப்பு..!

      by Thamil
      May 8, 2025
      0

      வவுனியா இராசேந்திரகுளம் கிராமத்தில் நேற்றிரவு இளம் பெண் ஒருவர் தவறான முடிவெடுத்து உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார் 24 வயதுடைய தவகுலசிங்கம் திவ்யா என்பவரே இவ்வாறு சடலமாக...

      கொட்டாவையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூடு..!

      கொட்டாவையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூடு..!

      by Thamil
      May 8, 2025
      0

      கொட்டாவை மலபல்லா பகுதியில் உள்ள விகாரை ஒன்றுக்கு அருகில் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம்  இடம்பெற்றுள்ளது. குறித்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் காயமடைந்த ஒருவர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் மிரிஸ்ஸாய...

      வடக்கில் 5,941 ஏக்கர் காணி அபகரிக்கும் வர்த்தமானியை மீளப்பெறுக..!

      வடக்கில் 5,941 ஏக்கர் காணி அபகரிக்கும் வர்த்தமானியை மீளப்பெறுக..!

      by Thamil
      May 8, 2025
      0

      கோவணத்துடன் சென்றமக்களிடம் ஆவணம் கேட்கின்றீர்களா எனவும், கடந்தகால கொடுங்கோல் அரசுகளைப் பின்தொடர்கின்றீர்களா எனவும், சபையில் சரமாரியாகக் கேள்வி எழுப்பிய வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன்,...

      சிறையில் உள்ள கெஹெலியவிடம் கைப்பற்றப்பட்ட பொருட்கள்..!

      சிறையில் உள்ள கெஹெலியவிடம் கைப்பற்றப்பட்ட பொருட்கள்..!

      by Thamil
      May 8, 2025
      0

      முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தற்போது வெலிக்கடை சிறையில் விளக்கமறியலில் உள்ள நிலையில், அவரிடம் ஒரு “கஜமுத்து” (யானையின் தந்தம்) மற்றும் “ஸ்ரீ மகா போதி” மரத்தின்...

      மாணவியைக் கடத்த முயன்ற நபருக்கு விடுக்கப்பட்ட நீதிமன்ற உத்தரவு..!

      மாணவியைக் கடத்த முயன்ற நபருக்கு விடுக்கப்பட்ட நீதிமன்ற உத்தரவு..!

      by Thamil
      May 8, 2025
      0

      கொழும்பில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றின் அருகே மாணவி ஒருவரைக் கடத்த முயன்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட நபரை 72 மணிநேரம் தடுத்து வைத்து விசாரிக்க...

      உயிரிழந்த மாணவியுடன் தொடர்புபட்ட நபர் பற்றிய தகவலை வெளியிட்ட நாமல்..!

      உயிரிழந்த மாணவியுடன் தொடர்புபட்ட நபர் பற்றிய தகவலை வெளியிட்ட நாமல்..!

      by Thamil
      May 8, 2025
      0

      "கொட்டாஞ்சேனையில் ஒரு மாணவியை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக குற்றம் சாட்டப்பட்ட கணித ஆசிரியர், மத்திய கொழும்புக்கான தேசிய மக்கள் சக்தி ஒருங்கிணைப்பாளர்" என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல்...

      பெண் ஒருவரைத் தாக்கிய பொலிஸ் அதிகாரி ஒருவர் கைது..!

      பெண் ஒருவரைத் தாக்கிய பொலிஸ் அதிகாரி ஒருவர் கைது..!

      by Thamil
      May 8, 2025
      0

      மட்டக்களப்பு, வாழைச்சேனையில் பெண் ஒருவரைத் தாக்கிய குற்றச்சாட்டில் பொலிஸ் அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் எனத் தெரியவந்துள்ளது. குறித்த கைது நடவடிக்கையானது இன்றைய தினம் (8) மேற்கொள்ளப்பட்டுள்ளது....

      விசாரணைக் குழுவினால் தேசபந்து தென்னக்கோனுக்கு விடுக்கப்பட்ட அழைப்பானை..!

      விசாரணைக் குழுவினால் தேசபந்து தென்னக்கோனுக்கு விடுக்கப்பட்ட அழைப்பானை..!

      by Thamil
      May 8, 2025
      0

      பொலிஸ் மா அதிபர் தேச பந்து தென்னக்கோனை விசாரணைக் குழுவின் முன் முன்னிலையாகுமாறு முதற் தடவையாக அறிவிக்கப்பட்டுள்ளது. பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் பாரதூரமான வகையில்...

      நாடாளுமன்றத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட அர்ச்சுனா..!

      நாடாளுமன்றத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட அர்ச்சுனா..!

      by Thamil
      May 8, 2025
      0

      நாடாளுமன்றத்தில் ஒழுங்கீனமாக நடந்து கொண்டதற்காக நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா நாடாளுமன்றத்தில் இருந்து வெளியேற்றப்பட்டார். நாடாளுமன்றத்தில் இன்றையதினம் (08.05.2025) விவாதம் நடைபெற்றுக் கொண்டிருந்த போது அர்ச்சுனா பலமுறை...

      Load More
      Next Post
      வடமராட்சியில் மீன்பிடிப் படகு வழங்கிவைப்பு.!

      வடமராட்சியில் மீன்பிடிப் படகு வழங்கிவைப்பு.!

      வவுனியாவில் மரக்கடத்தல் முறியடிப்பு.!

      வவுனியாவில் மரக்கடத்தல் முறியடிப்பு.!

      காரைநகர் கடற்பரப்பில் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்களுக்கு விளக்கமறியல்!

      காரைநகர் கடற்பரப்பில் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்களுக்கு விளக்கமறியல்!

      Leave a Reply Cancel reply

      Your email address will not be published. Required fields are marked *

      Popular News

      • மாவையரின் உயிரைக்குடித்த 19 அயோக்கியர்கள்; பரபரப்பு தகவல்.!

        மாவையரின் உயிரைக்குடித்த 19 அயோக்கியர்கள்; பரபரப்பு தகவல்.!

        0 shares
        Share 0 Tweet 0
      • ஆசிரியரால் சீரழிக்கப்பட்ட மாணவி உயிர்மாய்ப்பு; பொலிஸாருக்கும் இதில் உடந்தையாம்.!

        0 shares
        Share 0 Tweet 0
      • அம்பலமானது தமிழர்களை கொன்றுகுவித்த வதை முகாம்!

        0 shares
        Share 0 Tweet 0
      • தமிழ் மாணவன் சிங்கள மாணவர்களால் தீ வைத்து எரிப்பு.! (சிறப்பு இணைப்பு)

        0 shares
        Share 0 Tweet 0
      • கடலில் நீராடச் சென்ற யுவதி உயிரிழப்பு.! (சிறப்பு இணைப்பு)

        0 shares
        Share 0 Tweet 0

      Follow Us

        Thinakaran

        உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

        www.thinakaran.com

        © 2024 Thinakaran.com

        Welcome Back!

        Login to your account below

        Forgotten Password?

        Retrieve your password

        Please enter your username or email address to reset your password.

        Log In
        No Result
        View All Result
        • முகப்பு
        • இலங்கை
          • முல்லைதீவு செய்திகள்
          • வவுனியா செய்திகள்
          • கிளிநொச்சி செய்திகள்
          • திருகோணமலை செய்திகள்
          • மட்டக்களப்பு செய்திகள்
          • மன்னார் செய்திகள்
          • மலையக செய்திகள்
        • இந்தியா
        • உலகம்
        • சினிமா
        • விளையாட்டு
        • நிகழ்வுகள்
        • எம்மை பற்றி