பட்டிப்பொல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அம்பேவெல கால்நடை பண்ணையில் விலங்குகளுக்கு உணவு விநியோகம் செய்து கொண்டிருந்தவர் மீது உழவு இயந்திரம் ஒன்று நேற்று (14) பிற்பகல் மோதியதில் நபரொருவர் உயிரிழந்துள்ளார்.
சிறிசமன்கம, அம்பேவெல பிரதேசத்தில் வசிக்கும் 55 வயதுடைய பண்ணை பரிசோதகரே விபத்தில் உயிரிழந்துள்ளார்.
சடலம் நுவரெலியா வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
ADVERTISEMENT
விபத்து தொடர்பில் உழவு இயந்திரத்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார். அத்துடன் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பட்டிப்பளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.