கிளிநொச்சி கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பெரிய குளம்பகுதியில் கால் நடைகளுக்கான தற்காலிக மேச்சல் நிலமாக அடையாள படுத்தப்பட்ட நீரேந்து பிரதேசத்தில் மேச்சலுக்காக விடப்படுகின்ற கால்நடைகளை அடத்துப் பயிர் செய்கை மேற்கொள்பவர்களாலும் சம்ளேனப் பிரதிநிதிகளாலும் பிடிக்கப்படட்டு தண்டப்பணம் அறவிடப்பட்டுள்ளன.
கிளிநொச்சி இரணைமடுகுளத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டுள்ள சிறுபோக பயிர் செய்கைகளுக்கு மேலதிகமாக கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவின் கீழுள்ள பெரியகுளத்தின் நீரேந்து பிரதேசத்தில் இராமநாதபுரம் மத்தி கமக்கார அமைப்பு பிரதிநிதிகளும் சம்மேளனப் பிரதிநிதிகளும் இணைந்து சிறுபோக பயிர்ச் செய்கை கூட்டத் தீர்மாணங்களுக்கு மாறாக கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பெரிய குளம்பகுதியில் கால் நடைகளுக்கான தற்காலிக மேச்சல் நிலமாக அடையாள படுத்தப்பட்ட நீரேந்து பிரதேசத்தில் அடத்துப் பயிர் செய்கை மேற்கொண்டுள்ளதுடன், எஞ்சிய நீரேந்து பிரதேசத்தில் மேச்சலுக்காக விடப்படுகின்ற கால்நடைகளை; பிடிக்கப்படட்டு தண்டப்பணம் அறவிடப்பட்டுள்ளன.
இவ்வாறான நிலையில் குறித்த நபர்களால் கால்நடை பண்ணையாளர்களை அச்சுறுத்தும் வகையில் இராமநாதபுரம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்ட நிலையில் கமநல அபிவிருத்தி திணைகளத்தின் அறிவுறுத்தல் பயிர்செய்கை தீர்மானம் என்பவற்றை கவனத்தில் கொண்டு காணி ஆவணங்கள் என்பன தொடர்பாக விசாரணை செய்யப்பட்டு அடத்துச் செய்கையாளர்கள் எச்சரிக்கப் பட்டு விடுவிக்கப் பட்டமை குறிபிடத்தக்கது










