தேசிய மக்கள் சக்தியின் பிரதேச சபை தேர்தலுக்கான வேட்பாளர் அலுவலகம் விநாயகபுரம் பகுதியில் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
அம்பாறை மாவட்டம் திருக்கோவில் பிரதேச சபை தேர்தலுக்கான விநாயகபுரம் 07ஆம் வட்டாரத்திற்கான பெண் வேட்பாளர் த .சிவா அவர்களின் அலுவலகம் நேற்றை தினம்(26) திறந்து வைக்கப்பட்டது.
குறித்த தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர் அலுவலகத்தினை தேசிய மக்கள் சக்தியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் தோழர் கந்தசாமி பிரபு அவர்கள் திறந்து வைத்தார்.
இந் நிகழ்வில் தலைமை வேட்பாளர் மற்றும் பொதுமக்கள் மற்றும் கட்சியின் ஏனைய வட்டார வேட்பாளர் மற்றும் கட்சியின் திருக்கோவில் பிரதேச உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.



