வவுனியாவில் இடம்பெற்ற தேர்தல் பரப்புரைக் கூட்டத்;தில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க கலந்து கொண்டார்.
வவுனியா மாநகர சபை உள்ளிட்ட 5 உள்ளூராட்சி மன்றங்களிலும் போட்டியிடும் தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர்களை வெற்றி பெறச் செய்வதற்கான பிரச்சாரக் கூட்டம் வவுனியா மாநகரசபை மைதானத்தில் இன்று (26.04) மாலை இடம்பெற்றது.
வவுனியாவின் பல்வேறு பகுதிகளிலும் இருந்து அதிகளவிலான மக்கள் குறித்த கூட்டத்திற்கு அழைத்து வரப்பட்டிருந்தனர். இதில் விசேட அதிதியாக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க கலந்து கொண்டு உரையாற்றியதுடன், வேட்பாளர்கள், பொது மக்களுடனும் கலந்துரையாடியிருந்தார். இதன்போது பொதுமக்கள் ஜனாதிபதிக்கு கைகொடுத்து செல்பி எடுப்பதற்கு முண்டியடித்துக் கொண்டிருந்ததையும் அவதானிக்க முடிந்தது.
இதில் பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்க, வன்னிப் நாடாளுமன்ற உறுப்பினர்களான ம.ஜெகதீஸ்வரன், செ.திலகநாதன், வேட்பாளர்கள், மதகுருமார்கள், ஆதரவாளர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.


